என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சீர்காழியில் பா.ஜனதாவினர் நூதன போராட்டம்
Byமாலை மலர்8 Jan 2023 10:27 AM GMT
- பா.ஜனதா சார்பில் அரசு கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாநில விவசாய அணி தலைவர் நேதாஜி தலைமையில் நடைபெற்றது.
- 2 ஆயிரம் தேங்காய்களை கொண்டு வந்து அங்கிருந்த பொதுமக்களுக்கு வழங்கினர்
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயை சேர்த்து வழங்கிடவும், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் அரசு கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாநில விவசாய அணி தலைவர் நேதாஜி தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் மாவட்ட த்தலைவர்கள் வெங்கடேசன், சேதுராமன்,நகர தலைவர் பிரேம்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் க.அகோரம் கண்டன உரையாற்றினார். பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயை சேர்க்க வலியுறுத்தி தேங்காயை சாலையில் கொட்டி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து லாரியில் 2 ஆயிரம் தேங்காய்களை கொண்டு வந்து அங்கிருந்த பொதுமக்களுக்கு வழங்கி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X