என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்"

    • ஓசூர், ராயக்கோட்டை ரோடு, இ.பி. அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
    • பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஓசூர் மாநகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான தி.மு.க.வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் சார்பில் 15-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணியளவில், ஓசூர், ராயக்கோட்டை ரோடு, இ.பி. அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையிலும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், ஓசூர் மாநகராட்சி மாமன்ற இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சில மாதங்களிலேயே அதிருப்தி ஏற்பட்டது.
    • பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க மாவட்ட செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சி வினோத் தலைமையில் தி.மு.க அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து ஊட்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் முன்னாள் எம்.பியும், அமைப்பு செயலாளருமான அர்ஜுனன், துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், நகர செயலாளர் சண்முகம் ஆகியேர் முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் பேசும் போது, 500-க்கும் மேற்பட்ட கவர்சிகரமான பொய்யான வாக்குறுதிகளை தந்து திமுக ஆட்சிக்கு வந்தது. மக்களை ஏமாற்றி ஆசையை தூண்டி இந்த ஆட்சி அமர்ந்துள்ளது. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மக்கள் மனதில் அதிருப்தி தொடங்கிவிட்டது. இந்தியாவிலேயே ஆட்சியில் அமர்ந்த சில மாதங்களிலேயே அதிருப்தி ஏற்பட்டது திமுக மேல்தான் என்றார்.இதில் ஒன்றிய செயலாளர்கள், சார்பணி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    ×