search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விலைவாசி உயர்வை கண்டித்து  ஊட்டியில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    விலைவாசி உயர்வை கண்டித்து ஊட்டியில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

    • சில மாதங்களிலேயே அதிருப்தி ஏற்பட்டது.
    • பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க மாவட்ட செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சி வினோத் தலைமையில் தி.மு.க அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து ஊட்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் முன்னாள் எம்.பியும், அமைப்பு செயலாளருமான அர்ஜுனன், துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், நகர செயலாளர் சண்முகம் ஆகியேர் முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் பேசும் போது, 500-க்கும் மேற்பட்ட கவர்சிகரமான பொய்யான வாக்குறுதிகளை தந்து திமுக ஆட்சிக்கு வந்தது. மக்களை ஏமாற்றி ஆசையை தூண்டி இந்த ஆட்சி அமர்ந்துள்ளது. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மக்கள் மனதில் அதிருப்தி தொடங்கிவிட்டது. இந்தியாவிலேயே ஆட்சியில் அமர்ந்த சில மாதங்களிலேயே அதிருப்தி ஏற்பட்டது திமுக மேல்தான் என்றார்.இதில் ஒன்றிய செயலாளர்கள், சார்பணி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×