என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "blindfold"
- இமானுவேல் சேகரன் மணிமண்டபம் அறிவிப்பு அரசின் கண்துடைப்பு எவ டாக்டர் கிருஷ்ணசாமி பேசி உள்ளார்.
- வெற்று அறிவிப்பை மட்டும் வெளியிட்டு பெயர் வாங்க தமிழக அரசு முயற்சி செய்கிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 66- வது நினைவு நாள் அனுசரிப்பு நேற்று நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அஞ்சலி செலுத்த வருகை தந்தார்.
அப்போது அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
தமிழக அரசு தியாகி இமானுவேல் சேகரனார் மணிமண்டபம் அமைப்ப தாக அறிவிப்பு வெளியிட்டு ளது வெறும் கண்துடைப்பே.இதுபோன்று அரசு சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இன்னும் அமல்படுத்த முடியாத நிலையே தொடர்கிறது.புதிய தமிழகம் கட்சி சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வெற்று அறி விப்பை மட்டும் வெளியிட்டு பெயர் வாங்க தமிழக அரசு முயற்சி செய்கிறது.
இன்று இந்த நினைவிடத்தில் எங்களுக்கு பேச அனுமதி மறுக்கப்படு கிறது. சமாதி எங்கிருக்கிறது என்றே தெரியாத கால கட்டத்தில் பாதிரியாரிடம் கேட்டு அடையாளம் கண்டு லட்சோப லட்சம் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வழிவகை செய்தது நாங்கள் தான். ஐந்து முனை ரோட்டில் இருந்து நினைவி டம் வந்தடையும் இடம் வரையில் தெரு விளக்குகள் இல்லாதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.வன் முறையை தூண்டும் வகையில் பரமக்குடி நக ராட்சி நிர்வாகம் செயல்படு கிறது.
இவ்வாறு அவர் கூறினார்
இதில் மாநில பொதுச் செயலாளர் வி.கே.அய்யர், மாவட்ட செயலாளர் சிவ.பாலுச்சாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆர்.கே. முனியசாமி,மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துக்கூரி, பேரின்ப ராஜ், மகேஸ் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்