search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DM Soundararajan"

    • ரூ.50 லட்சத்தில் டி.எம்.சவுந்தரராஜனுக்கு வெண்கல சிலை அமைக்க பூமிபூஜை செய்யப்பட்டது.
    • வெண்கல குரலில் கணீரென இவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை.

    மதுரை

    தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கிய எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுக்கு பின்னனி பாடல்கள் பாடி புகழ் பெற்றவர் டி.எம்.சவுந்தர ராஜன். வெண்கல குரலில் கணீரென இவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை. டி.எம்.சவுந்தரராஜனின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள சாலைக்கு அவரது பெயரை தமிழக அரசு அண்மையில் சூட்டியது.மேலும் அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவரின் சொந்த ஊரான மதுரையில் அரசின் சார்பில் டி.எம்.சவுந்தரராஜனின் முழு திருவுருவச்சிலை அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சிலை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தார்.

    அதன்படி மதுரை முனிச்சாலை சந்திப்பில் டி.எம்.சவுந்தரராஜனின் வெண்கல சிலை ரூ.50 லட்சத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பூமிபூஜை இன்று நடந்தது. இதில் மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார், வெங்க டேசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் முகேஷ் சர்மா, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் முனியசாமி, புகழ் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • டி.எம்.சவுந்தரராஜனுக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
    • அ.தி.மு.க. கவுன்சிலர் ரூபினிகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி கூட்டத்தில் 48-வதுவார்டு கவுன்சிலர் ரூபினிகுமார் பேசும்போது கூறியதாவது:-

    மதுரை பழைய குயவர்பாளையம் பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் இன்னும் முழுமையாக செய்து தரவில்லை. அதனை விரைந்து செய்ய வேண்டும்.

    மேலும் மதுரைக்கு புகழ் சேர்த்த சினிமா பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர ராஜன் அவர்களுக்கு சிலை அமைக்கவும், மணிமண்டபம் அமைக்கவும் சட்டசபையில் முதலில் குரல் எழுப்பியவர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள். தற்போது தமிழக அரசு டி. எம். சவுந்தரராஜனுக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதற்காக சட்டசபையில் குரல் எழுப்பிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூக்கு பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    மேலும் மதுரையில் டி. எம்.சவுந்தரராஜனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும் சட்ட சபையில் குரல் கொடுத்த செல்லூர் ராஜூ அவர்களுக்கு நன்றிதனையும், பாராட்டுதலையும் தெரிவிக்கிறோம்.

    இந்த கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் மதுரை மாநகராட்சியின் அடுத்த கூட்டத்தில் டி.எம். சவுந்தரராஜனுக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் எனது வார்டு மக்கள் சார்பாகவும் அ.தி.மு.க. சார்பாகவும் கோரிக்கையாக வைக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×