search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டி.எம்.சவுந்தரராஜனுக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை
    X

    டி.எம்.சவுந்தரராஜனுக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

    • டி.எம்.சவுந்தரராஜனுக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
    • அ.தி.மு.க. கவுன்சிலர் ரூபினிகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி கூட்டத்தில் 48-வதுவார்டு கவுன்சிலர் ரூபினிகுமார் பேசும்போது கூறியதாவது:-

    மதுரை பழைய குயவர்பாளையம் பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் இன்னும் முழுமையாக செய்து தரவில்லை. அதனை விரைந்து செய்ய வேண்டும்.

    மேலும் மதுரைக்கு புகழ் சேர்த்த சினிமா பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர ராஜன் அவர்களுக்கு சிலை அமைக்கவும், மணிமண்டபம் அமைக்கவும் சட்டசபையில் முதலில் குரல் எழுப்பியவர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள். தற்போது தமிழக அரசு டி. எம். சவுந்தரராஜனுக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதற்காக சட்டசபையில் குரல் எழுப்பிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூக்கு பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    மேலும் மதுரையில் டி. எம்.சவுந்தரராஜனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும் சட்ட சபையில் குரல் கொடுத்த செல்லூர் ராஜூ அவர்களுக்கு நன்றிதனையும், பாராட்டுதலையும் தெரிவிக்கிறோம்.

    இந்த கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் மதுரை மாநகராட்சியின் அடுத்த கூட்டத்தில் டி.எம். சவுந்தரராஜனுக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் எனது வார்டு மக்கள் சார்பாகவும் அ.தி.மு.க. சார்பாகவும் கோரிக்கையாக வைக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×