என் மலர்
நீங்கள் தேடியது "Vegetable Fair"
- கோத்தகிரி நேரு பூங்காவில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடக்கிறது.
- நுழைவு வாயில் முழுவதும் பல டன் காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கோத்திகிரி:
நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நீலகிரியில் கோடைவிழா என்ற பெயரில் மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோடைவிழா இன்று கோத்தகிரி நேரு பூங்காவில் 13-வது காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.

கோத்தகிரி நேரு பூங்காவில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடக்கிறது.
காய்கறி கண்காட்சியை முன்னிட்டு பல ஆயிரம் டன் காய்கறிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் பூங்காவில் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்கா முழுவதும் பல ஆயிரம் மலர் செடிகளில் பல்வேறு வகையான மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
இந்த கண்காட்சியில் தமிழ் கலாசாரத்தை பறை சாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு காளை, தமிழரின் வீரத்தை பறைசாற்றும் வகையில் சிலம்பாட்டம் வடிவமைப்பு, மரகதபுறா, மிளகாய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு பச்சைக்கிளி, வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட உருவங்கள் வடிவமைக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.
இதுதவிர தோட்டக்கலைத்துறை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விளைபொருட்கள் 15 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. குழந்தைகளை கவரும் வகையில் பல வண்ண உருவங்களும் செய்யப்பட்டிருந்தன.
மேலும் நுழைவு வாயில் முழுவதும் பல டன் காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கண்காட்சி தொடங்கியதை முன்னிட்டு இன்று காலை முதலே கோத்தகிரி நேரு பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர்.
அவர்கள் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளை, மரகதபுறா, பச்சைக்கிளி உள்ளிட்ட உருவங்களையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். அதன் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் அங்கு பூத்து குலுங்கிய மலர்களையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
- புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் வேளாண், மலர், காய்கறி கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
- இந்த கண்காட்சி மலர், காய்கறியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் விதமாக அமைய வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் வேளாண், மலர், காய்கறி கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
கூட்டத்தில் நிதித்துறை செயலர் ராஜூ, விவசாயத்துறை செயலர் குமார், துறை இயக்குனர் பாலகாந்தி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பேசியதாவது:-
என்வீடு என் நலம் என்ற திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் விதமாகவும், இல்லத்தரசிகளை கவரும்விதமாகவும், விவசாயம், காய்கறி, கனி கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும். இந்த கண்காட்சி மலர், காய்கறியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் விதமாக அமைய வேண்டும்.
சூரிய ஒளி மின்சாரம் மூலம் வாட்டர் பம்பிங் சிஸ்டம் நிறுவுவது தொடர்பாக விவசாயிகள் புரிந்து கொள்ளும் வகையில் கண்காட்சியில் அரங்குககள் அமைக்கப்பட வேண்டும்.
புதிய விவசாய கருவிகள் அறிமுகப்படுத்த வேண்டும். கண்காட்சியை வேளாண்துறை, சுற்றுலாத்துறை இணைந்து நடத்தலாம் என்பது உட்பட பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.
- கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி தொடக்க விழா நடந்தது.
- பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருந்த வண்ண, வண்ண மலர்களையும் கண்டு ரசித்து சென்றனர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான கோடைவிழா காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.
கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி தொடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி ஆகியோர் பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.
கண்காட்சியையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பூங்காவின் நுழைவுவாயில், ஆயிரம் கிலோ எடை கொண்ட பல்வேறு காய்கறிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் 1,500 கிலோ குடை மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு, சோளம், கம்பு ஆகியவற்றை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் குடை மிளகாய், பஜ்ஜி மிளகாயை கொண்டு மக்கா சோளமும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
300 கிலோ பாகற்காய் கொண்டு முதலை வடிவம், கத்தரிக்காய், பூசணிக்காய் ஆகியவற்றை கொண்டு டிராகன், ஊதா நிற கத்தரிக்காய் கொண்டு யானை உருவமும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், மலைத்தோட்ட காய்கறி விவசாயிகளின் வாழ்வாதரம் மேம்படவும் நடத்தப்படும் இந்த கண்காட்சியில் கோவை, திருவண்ணாமலை, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்தும் தோட்டக்கலைத்துறையினர் பங்கேற்றனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரங்குகளில், கத்தரிக்காய், பூசனிக்காய், கேரட், பீட்ரூட், குடைமிளகாய் போன்ற காய்கறிகளைக் கொண்டு யானை, மயில், கிளி, சேவல், பான்டா கரடி, வரி குதிரை, மீன் போன்றவற்றை உருவாக்கி கண்காட்சியில் வைத்திருந்தனர்.

காய்கறி கண்காட்சியையொட்டி காலையிலேயே கோத்தகிரி நேரு பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் பூங்காவில் நுழைந்து, அங்கு பல்வேறு வகையான காய்கறிகளால் காட்சிப்படுத்தப்பட்டிருந்த முதலை, டிராகன், யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட பொம்மைகளை கண்டு ரசித்தனர். அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
இதேபோன்று அங்கு ஐ லவ் கோத்தகிரி, ஊட்டி 200 லட்சினையைும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டதுடன் செல்பி புகைப்படமும் எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருந்த வண்ண, வண்ண மலர்களையும் கண்டு ரசித்து சென்றனர்.

தனியார் காய்கறி உற்பத்தியாளர்கள், இயற்கை காய்கறி உற்பத்தியாளர்கள் மற்றும் இதனை சார்ந்துள்ள தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு அரங்குகளில் விவசாய உற்பத்தி பொருட்கள் மற்றும் நவீன தொழில்நுட்பம் குறித்தும் கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.






