search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Small Grain Food"

    • 5 லட்சம் மலர்களால் பிரமாண்ட உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
    • சிறுதானிய உணவு தயார் செய்யும் முறை குறித்து தினமும் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில், 46-வது கோடை விழா, மலர் கண்காட்சி இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி, வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு, பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். தொடர்ந்து துறை சார்பில் நிறுவப்பட்டுள்ள 42 அரங்குகளை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி நிறுவப்பட்டுள்ளது. அதில் 10 ஆயிரம் தொட்டிகளில் பெட்டூனியா, மேரிகோல்டு, சால்வியா உள்பட 45 மலர் வகைகள், சுற்றுலா பயணிகளின் கண்ணுக்கு விருந்தளிக்க தயாராக உள்ளன. 5 லட்சம் மலர்களால் பிரமாண்ட உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டிராகன் வாரியருக்கு 32 ஆயிரம் பூக்கள், பொன்னியின் செல்வன் படகுக்கு 35 ஆயிரம், தேனீக்களுக்கு 28 ஆயிரம், முயலுக்கு 18 ஆயிரம், சோட்டா பீமுக்கு 15 ஆயிரம், செல்பி பாயிண்டுக்கு 27 ஆயிரம், வளைவுக்கு 55 ஆயிரம், பூங்கொத்து 50 ஆயிரம் பூக்கள் என பல்வகை மலர்கள் கண்களை இதமாக்கி குளிர்விக்க தயாராக உள்ளன.

    உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சிறுதானிய உணவு தயார் செய்யும் முறை குறித்து தினமும் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் கொழு, கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, மகளிர் திட்டம் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத்துறை சார்பில் படகு போட்டி நடத்தப்படுகிறது.

    கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாய்கள் கண்காட்சி, கலை பண்பாடு துறை, சுற்றுலா துறை ஒருங்கிணைந்து இன்னிசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இளைஞர்களை ஊக்கப்படுத்த கால்பந்து, கைப்பந்து, கபாடி, கயிறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட பல்வகை விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்படுகிறது.

    *** கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகள் திரண்டுள்ளனர். அங்குள்ள படகு இல்ல பகுதியில் மலர்களால் இதய வடிவில் அமைக்கப்பட்டுள்ளதை பெண்கள் ஆர்வமுடன் பார்வையிட்ட காட்சி.

    • பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களில் உணவு தயாரித்து வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு செறிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிரான பேரியக்கம் சார்பில் பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களில் உணவு தயாரித்து வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் தலைமை வகித்தார்.

    ஒருங்கிணைப்பாளர்கள் பாரதி தாசன், பட்டுக்கோட்டை தங்க குமரவேல், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேல்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர்கள் வேலுமணி, விக்னேஷ், அருசீர் தங்கராசு, பொய்யாமொழி, வெள்ளைச்சாமி பாக்கியராஜ் அருண் சுபாஷ், செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு பாரம்பரிய உணவுகளான அரிசி மற்றும் சிறுதானியங்களில் போதிய சத்துக்கள் இருக்கும் போது செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களில் தயிர் சாதம், தக்காளி சோறு, தேங்காய் சாதம், சர்க்கரை பொங்கல், அவல் கஞ்சி போன்ற உணவுகளை தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.

    இது குறித்து ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் கூறும் போது, பாரம்பரிய அரிசி சிறுதானியங்களை கட்டுப்படியான விலையில் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

    பொது விநியோகத்திட்டத்தின் மூலமாக பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதற்கட்டமாக 25 சதவீதம் வழங்கிட வேண்டும்.

    பின் படிப்படியாக 100 சதவீதம் வழங்கிட வேண்டும்.

    2023 ஆம் ஆண்டை சிறுதானிய பயிர்களின் ஆண்டாக உலகளவில் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழக அரசு சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசார இயக்கங்கள் நடத்திட வேண்டும்.

    பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானியம் போன்ற உணவுப்பயிர்களை சாகுபடி செய்பவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் என்றார்.

    ×