search icon
என் மலர்tooltip icon

    திரிபுரா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
    • பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

    அகர்தலா:

    வட மாநிலங்களில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

    பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். கால நிலை மாற்றம் மற்றும் வெயில் கொளுத்தி வருவதால் இமயமலை பகுதியில் இருக்கும் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இப்படி நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.

    இந்நிலையில், அதிகரித்து வரும் வெப்ப அலையைக் கருத்தில் கொண்டு, திரிபுரா மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    • அகர்தலா விமான நிலையத்திலிருந்து தினமும் மொத்தம் 32 விமானங்கள் புறப்படுகின்றன.
    • சர்வதேச விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அகர்தலாவில் உள்ள மகாராஜா பிர் பிக்ரம் (எம்பிபி) விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவையை விரைவில் தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார்.

    நவீன திரிபுராவின் கட்டிடக் கலைஞராகக் கருதப்படும் மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூரின் 5 மீட்டர் உயர வெண்கலச் சிலையை இங்குள்ள விமான நிலையத்தில் சஹா திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறியிருப்பதாவது:-

    திரிபுராவின் வளர்ச்சியில் மாணிக்ய வம்சத்தினர் முக்கியப் பங்காற்றியுள்ளனர். அவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் இருந்தபோதிலும், கடந்த காலத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

    2014ல் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று, 2018ல் திரிபுராவில் பா.ஜ., தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து, திரிபுராவின் மகாராஜாக்கள் கவுரவிக்கப்பட்டு உரிய மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.

    பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, சிங்கர்பில் விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பின்னர் அது எம்பிபி விமான நிலையம் என மறுபெயரிடப்பட்டது.

    பிரதமர் நரேந்திர மோடி 2018 ஆம் ஆண்டு மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூரின் நினைவாக விமான நிலையத்தை அதிகாரப்பூர்வமாக அர்ப்பணித்தார்.

    70களில், திரிபுராவில் இவ்வளவு அழகான விமான நிலையம் கட்டப்படும் என்று நாம் யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. இந்த விமான நிலையம் இப்போது வடகிழக்கில் உள்ள மிகவும் கவர்ச்சிகரமான விமான நிலையங்களில் ஒன்றாகும்.

    தற்போது, அகர்தலா விமான நிலையத்திலிருந்து தினமும் மொத்தம் 32 விமானங்கள் புறப்படுகின்றன.

    அகர்தலா விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவைகளை தொடங்குவதற்கு மாநில அரசு சாதகமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

    சர்வதேச விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமருக்கு நன்றி, திரிபுரா விமான இணைப்பு, சாலை இணைப்பு மற்றும் ரெயில் இணைப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
    • திரிபுரா உயிரியல் பூங்கா அதிகாரிகள் தான் இந்த சிங்கங்களுக்கு பெயர் இட்டுள்ளனர் என்று மேற்கு வங்க அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    அக்பர் என்ற ஆண் சிங்கத்திற்கும், சீதா என்ற பெண் சிங்கத்திற்கு வேறு பெயர் வைக்குமாறு மேற்கு வங்க அரசிற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இவ்வழக்கு தொடர்பாக திரிபுரா மாநிலத்தின் தலைமை வனப் பாதுகாவலர் பிரபின் லால் அகர்வாலை அம்மாநில அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

    திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி சீதா, அக்பர் சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.

    'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ இந்து பரிஷத் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

    அவ்வழக்கின் விசாரணையில், "சீதாவை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். அவர் கோயிலில் இருக்க வேண்டும். காட்டுக்குள் அல்ல" என விஷ்வ ஹிந்து பரிஷித் தரப்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    மேலும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ராமரின் மனைவியான "சீதா" புனித தெய்வமாக கருதுவதால், சீதா என்கிற பெயரை ஒரு பெண் சிங்கத்திற்கு சூட்டுவது, எங்களுக்கு வேதனையை தருகிறது. இது கடவுளை அவமதிப்பது மற்றும் அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதல் என விஷ்வ ஹிந்து பரிஷத் தனது மனுவில் தெரிவித்துள்ளது.

    திரிபுரா உயிரியல் பூங்கா அதிகாரிகள் தான் இந்த சிங்கங்களுக்கு பெயர் இட்டுள்ளனர் என்று மேற்கு வங்க அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

    இதை தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, உங்களின் சொந்த செல்லப்பிராணிகளுக்கு அக்பர், சீதா பெயர்களை நீங்கள் சூட்டுவீர்களா? என அரசு தரப்பு வழக்கறிஞரை நோக்கி கேள்வி எழுப்பினார். மேலும், "விலங்குகளுக்கு புதிதாக வைக்கப்படவுள்ள பெயர் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மத போராளிகள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயரை இனி விலங்குகளுக்கு வைக்கவேண்டாம்" எனவும் சிங்கங்களுக்கு வேறு பெயரை வையுங்கள் என மாநில அரசிற்கு அவர் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், திரிபுரா உயிரியல் பூங்காவில் இருந்த சிங்கங்களுக்கு அக்பர், சீதா பெயர் வைக்கப்பட்டதற்காக, அம்மாநிலத்தின் தலைமை வனப் பாதுகாவலர் பிரபின் லால் அகர்வாலை அம்மாநில அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

    • அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு கோவிலிலும் தூய்மை இயக்கத்தை தொடங்க பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
    • தனது தொகுதியில் உள்ள கோவில்களில் தூய்மை பணியில் ஈடுபட்டார் திரிபுரா முதல்வர்

    அயோத்தியில் நடைபெற உள்ள ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோவில்களில் தூய்மை இயக்கம் மேற்கொள்ள பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.

    அதனை தொடர்ந்து, திரிபுரா முதல்வர் மாணிக் சாஹி, தனது தொகுதியான போர்டோவாலியில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று தூய்மை இயக்கத்தை தொடங்கினார். அத்துடன் முதல்வரும் இதில் பங்கெடுத்து கோவில் சுற்றுவட்டார பகுதியை துடைப்பம் கொண்டு சுத்தம் செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாவது, "அயோத்தி ஸ்ரீராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு கோவிலிலும் தூய்மை இயக்கத்தை தொடங்க பிரதமர் மோடி வலியுறுத்தினார். எனவே பாஜக தொண்டர்கள் அனைவரும் கை கோர்த்து கோவில்களை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.  திரிபுராவின் ஒவ்வொரு தொகுதியிலும் இது போன்ற தூய்மை இயக்கம் நடந்து வருகிறது. கோவில்களில் தூய்மை இயக்கம் ஒரு தெய்வீக உணர்வு" என்றும் மாணிக் தெரிவித்தார்.

    முன்னதாக மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள கலராம் கோவில் வளாகத்தை பிரதமர் மோடி சுத்தம் செய்தது குறிப்பிடதக்கது. துடைப்பம் மற்றும் வாளியுடன் பிரதமர் மோடி கோவில் வளாகத்தை சுத்தம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    • வாக்குப் பதிவின்போது முறைகேடு நடைபெற்றதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசமிருந்த தொகுதியை கைப்பற்றியது பா.ஜனதா

    திரிபுராவில் உள்ள தன்புர், போக்சாநகர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

    வாக்கு எண்ணிக்கை முடிவில் இரண்டு தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே தன்புர் தொகுதி பா.ஜனதா வசம்தான் இருந்தது. பிரதிமா பௌமிக் மத்திய மந்திரியானதால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் பிந்து டெப்நாத் போட்டியிட்டார். அவர் 30,017 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுசிக் சண்டா 11,146 வாக்குள் பெற்று தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் பழங்குடியின வகுப்பினரை சேர்ந்த 18,871 வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

    போக்சாநகர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சாம்சுல் ஹக் காலமானதால், இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தொகுதியில் 30,237 வாக்குகள் (சுமார் 66 சதவீதம்) சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்தவர்களுடையது. இதனால், இந்த வாக்கு முக்கியத்துவமாக கருதப்பட்டது.

    ஆனால் பா.ஜனதா வேட்பாளர் டஃபாஜ்ஜால் ஹொசைன் 34,146 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மிஜன் ஹொசைன் 3,909 வாக்குகள் பெற்றார்.

    ஏழு மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது தன்புர் தொகுதியில் முதன்முறையாக பா.ஜனதா வெற்றி பெற்றது.

    தேர்தலின்போது, முறைகேட்டில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வாக்கு எண்ணிக்கையை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திரிபுரா சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது.
    • அமளியில் ஈடுபட்ட 5 எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

    அகர்தலா:

    திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜடாப் லால் நாத், தனது செல்போனில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி வற்புறுத்தி வந்தது

    ஆனால், யாராவது புகார் கொடுத்தால்தான் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடியும் என சபாநாயகர் விஸ்வபந்து சென் கூறினார்.

    இந்நிலையில், திரிபுரா சட்டசபையில் படஜெட் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ. செல்போனில் ஆபாசப் படம் பார்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர், பல்வேறு முக்கிய பிரச்சனைகள் இருப்பதால் அவர்களது இருக்கையில் சென்று அமரும்படி கூறினார்.

    இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அமளியில் ஈடுபட்ட 5 எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

    • காயமடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக உனகோட்டி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், முதலமைச்சர் மாணிக் சஹா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    அகர்தலா:

    திரிபுரா மாநிலம் உனகோட்டி மாவட்டம் குமார்காட் நகரில் இன்று ஜெகன்னாதர் ரத யாத்திரை நடைபெற்றது. இரும்பினால் செய்யப்பட்ட ரதத்தை பக்தர்கள் இழுத்துச் சென்றனர். ரதம் சவுமுகானி பகுதியில் சென்றபோது உயர் அழுத்த மின் கம்பியில் ரதம் உரசியது. அப்போது ரதத்தில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் ரதம் இழுத்த பக்தர்கள் பலத்த மின் தாக்குதலுக்கு உள்ளாகி தூக்கி வீசப்பட்டனர். அத்துடன் ரதமும் தீப்பற்றியது.

    இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் குமார்காட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக உனகோட்டி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், முதலமைச்சர் மாணிக் சஹா தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்துள்ளார். அத்துடன், நேரில் பார்வையிடுவதற்காக குமார்காட் சென்றுகொண்டிருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • சுற்றுலாத்துறை அமைச்சர் மாநில அதிகாரிகளுடன் கங்குலியை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் அறிவிப்பு.
    • கங்குலி பிரச்சாரங்களில் பங்கேற்பது மூலம் மாநிலத்தின் சுற்றுலாத் துறைக்கு உத்வேகம் அளிக்கும்.

    திரிபுரா மாநில சுற்றலாத்துறை தூதராக கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மாணிக் சாஹா அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் மாநில அதிகாரிகளுடன் கங்குலியை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து, முதல்வர் மாணிக் சாஹா கங்குலியிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். கங்குலி பிரச்சாரங்களில் பங்கேற்பது மூலம் மாநிலத்தின் சுற்றுலாத் துறைக்கு உத்வேகம் அளிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து சாஹா தனது பேஸ்புக் பக்கத்தில், "இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தங்களின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டு திரிபுரா சுற்றுலா துறையின் விளம்பர தூதராக பொறுப்பேற்று இருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • புல்வாமா தாக்குதலையும், பாலக்கோட்டில் வான்தாக்குதல் நடத்தி அளித்த பதிலடியையும் பா.ஜ.க. பயன்படுத்தி 2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது.
    • காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ள தகவல்களால், அவருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பும் என நான் நினைத்தேன்.

    அகர்தலா:

    காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி துணை ராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற வாகனம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினார்கள். இதில் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ஆயுதப்படை போலீசார்) 40 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதல், அமைப்பு ரீதியான தோல்வி, ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை குறைபாடுகளைக்கொண்டது என்று காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரு பேட்டியின்போது குற்றம்சாட்டினார்.

    அப்போது, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய தரப்பில் நடத்தப்பட்ட பாலக்கோட் வான் தாக்குதல் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சந்தேகத்தை வெளிப்படுத்தியது. ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் என்கிறபோது அதற்கு முன்னதாக இந்த தாக்குதலை நடத்தி வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சினையை மறைக்க பா.ஜ.க. தீவிர சதி செய்துள்ளது என்பதுதான் அந்த கட்சியின் குற்றச்சாட்டாக இருந்தது.

    இந்த நிலையில் புல்வாமா தாக்குதலையும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பாலக்கோட்டில் நடத்தப்பட்ட இந்தியாவின் வான்தாக்குதல் குறித்தும் திரிபுரா முன்னாள் முதல்-மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான மாணிக் சர்க்கார் கூறியதாவது:-

    புல்வாமா தாக்குதலையும், பாலக்கோட்டில் வான்தாக்குதல் நடத்தி அளித்த பதிலடியையும் பா.ஜ.க. பயன்படுத்தி 2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. இந்த சம்பவம் நடந்தபோது அங்கு கவர்னராக இருந்த சத்யபால் மாலிக் இதுபற்றி இப்போது பேசி உள்ளார்.

    சத்யபால் மாலிக் தற்போது தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து பிரதமரும், உள்துறை மந்திரியும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் மவுனம் சாதிக்கின்றனர்.

    ஓய்வுபெற்ற ராணுவ தளபதி சங்கர்ராய் சவுத்ரியும், இந்த பிரச்சினையை எழுப்பி உள்ளார்.

    காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ள தகவல்களால், அவருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பும் என நான் நினைத்தேன். அது சரியாகி உள்ளது. அவருக்கு காப்பீட்டு மோசடி ஊழலில் சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். அவர் கருத்துகளை வெளியிட்ட ஒரே வாரத்தில் இது நடந்துள்ளது.

    நமது நாடு இப்படி எதிர்வினையாற்றக்கூடிய அரசை முதல் முறையாக பெற்றிருக்கிறது.

    திரிபுராவில் 60 சதவீத வாக்காளர்கள் பா.ஜ.க.வை ஆதரிக்கவில்லை. பா.ஜ.க.வை வெளிப்படையாக விமர்சித்து வந்த திப்ரா மோதா, சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற உதவியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திரிபுரா மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
    • அங்கு அனைத்து அரசு பள்ளிகளும் நாளை முதல் வரும் 23-ம் தேதி வரை மூடப்படுகிறது.

    அகர்தலா:

    இந்தியாவில் கோடை வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் நிலவும் வெப்ப அலை காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தயங்குகின்றனர்.

    இதற்கிடையே, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெப்பநிலை அடுத்த சில நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து காணப்படுகிறது. கடும் வெயில் எதிரொலியாக திரிபுராவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஏப்.23-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுகிறது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது

    ஏற்கனவே, மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வெப்ப அலை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • திரிபுரா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
    • அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்தி வருகிறது.

    அகர்தலா :

    திரிபுரா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. நேற்று முன்தினம், சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜடாப் லால் நாத், தனது செல்போனில் ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி வற்புறுத்தி வருகிறது. ஆனால், யாராவது புகார் கொடுத்தால்தான் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடியும் என்று சபாநாயகர் விஸ்வபந்து சென் கூறினார்.

    இதற்கிடையே, தனக்கு திரும்ப திரும்ப செல்போனில் அழைப்பு வந்ததால், அதை எடுத்து பேசியபோது, தானாகவே ஆபாச வீடியோ ஓடத்தொடங்கியதாகவும், அதை உடனே அணைத்து விட்டதாகவும் ஜடாப் லால் நாத் விளக்கம் அளித்துள்ளார்.

    • திரிபுராவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.
    • ஆளுநர் முதல்வர் மாணிக் சகாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    திரிபுரா சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.க. கூட்டணி அபார வெற்றி பெற்றது. 32 தொகுதிகளில் பா.ஜ.க.வும், ஒரு தொகுதியில் கூட்டணி கட்சியும் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது.

    இதற்கிடையே, பா.ஜ.க. உயர்மட்டக்குழு தலைவர்கள் தலைமையில் திரிபுரா பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திரிபுரா முதல்வராக மாணிக் சகா தேர்ந்தெடுக்கப்படுவதாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

    இந்நிலையில், திரிபுராவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. பா.ஜ.க.வை சேர்ந்த மாணிக் சகா முதல்வராக பதவியேற்றார். முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு அம்மாநில ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

    ×