search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி கல்வித்தகுதி பற்றியும் சந்தேகம் எழுகிறது - நிதி மந்திரி அருண் ஜெட்லி கருத்து
    X

    ராகுல் காந்தி கல்வித்தகுதி பற்றியும் சந்தேகம் எழுகிறது - நிதி மந்திரி அருண் ஜெட்லி கருத்து

    ராகுல் காந்தி முதுநிலை பட்டம் பெறாமல் எம்.பில் பட்டம் பெற்றது எப்படி? என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அந்த சர்ச்சையை காங்கிரஸ் பக்கம் திருப்பியுள்ளார். #RahulGandhi #ArunJaitley
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர்கள் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியின் கல்வித்தகுதி பற்றி புகார் கூறிவரும் வேளையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அந்த சர்ச்சையை காங்கிரஸ் பக்கம் திருப்பியுள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஒரு நாள் காங்கிரஸ் தேர்தல் பிரசாரம் பா.ஜனதா வேட்பாளர்கள் கல்வித் தகுதி பற்றியதாக இருக்கிறது. ஆனால் ராகுல் காந்தியின் கல்விச் சான்றுகளை தணிக்கை செய்தால் கிடைக்க வேண்டிய பதில்கள் ஏராளமாக இருப்பதை முற்றிலுமாக மறந்துவிட்டார்கள். இவ்வளவு ஏன், அவர் முதுநிலை பட்டம் பெறாமல் எம்.பில் பட்டம் பெற்றது எப்படி? இந்தியாவின் எதிர்க்கட்சி பிரசாரம் செய்வதற்கான காரணத்தை வாடகைக்கு தேடும் நிலையில் உள்ளது.



    அங்கு ஒரு தலைவர் இல்லை, ஒரு நல்லுறவு இல்லை, குறைந்தபட்ச செயல்திட்டம் இல்லை, உண்மையான பிரச்சினைகள் இல்லை. ஆச்சரியமளிக்கும் வகையில் பிரசாரத்தை கேட்பவர்களும் இல்லை. ரபேல் ஒப்பந்த பிரசாரம் - பொய், தொழில் அதிபர்களின் கடன் தள்ளுபடி - பொய், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி - மிகப்பெரிய பொய். ஒரு மாதம் பிரசாரம் செய்கிறார்கள், எதை முன்னிலைப்படுத்துகிறார்கள் என்பதே தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #RahulGandhi #ArunJaitley
    Next Story
    ×