என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election results"

    • வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
    • ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.

    பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், மதியம் 2 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில், இன்றைய வாக்கு எண்ணிக்கையின் முடிவில் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

    • பல்வேறு தொகுதிகளில் முன்னிலை பெற்றதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியாகி விட்டது.
    • காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி, அம்மாநில மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 138 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

     

    பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியாகி இருக்கிறது. கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி, அம்மாநில மக்களுக்கு தனது நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் மேலும் கூறியதாவது..,

    "வெறுப்புணர்வுகளை எதிர்த்து கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. வெறுப்பு உணர்வு இல்லாமல் கர்நாடக தேர்தலில் போட்டியிட்டோம். மக்களின் சக்தி வெற்றி பெற்று இருக்கிறது. இதே நிலை மற்ற மாநிலங்களிலும் தொடரும். காங்கிரஸ் கட்சி ஏழை மக்களின் பிரச்சனைகளுக்காக போராடி வந்தது. தேர்தலில் காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் விரைந்து நிறைவேற்றப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

    • காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது.
    • ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும் நடைபெற்று வருகிறது.

    ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது.

     

    மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தற்போது வரை 134 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் இரண்டு தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் படி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். எனினும், கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முதல்வரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நாளை மாலை 5.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெற இருக்கிறது.

    இந்த கூட்டத்தை நடத்துவதற்காக அகில இந்திய காங்கிரஸ் பார்வையாளர்கள் பெங்களூரு வருகின்றனர். முதல்வரை தேர்வு செய்த பின் அடுத்த வாரத்தில் புதிய முதல்வர் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருப்பது, அம்மாநிலம் மட்டுமின்றி நாடு முழுக்க காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. 

    • மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி முறையிட்டுள்ளார்.
    • தேர்தல் அலுவலரின் உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.

    பெங்களூருவின் ஜெயாநகர் தொகுதியில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஜெயாநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சௌமியா ரெட்டி மற்றும் பாஜக சார்பில் சி.கே. ராமமூர்த்தி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

    முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் சௌமியா ரெட்டி 294 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தமாக 57 ஆயிரத்து 591 வாக்குகளை பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராமமூர்த்தி 57 ஆயிரத்து 297 வாக்குகளை பெற்றிருந்தார். இந்த நிலையில், மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி முறையிட்டுள்ளார்.

    இதைத் தொடர்ந்து தான் தேர்தல் அதிகாரி தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வலியுறுத்தி இருக்கிறார். தேர்தல் அலுவலரின் உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவகுமார் மற்றும் செயல் தலைவர் ராமலிங்கா ரெட்டி மற்றும் இதர நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 224 தொகுதிகள் அடங்கிய கர்நாடக சட்டமன்றத்தில் ஜெயாநகரில் மட்டும் இன்னும் முடிவு தெரியாமல் உள்ளது. 

    • மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என பா.ஜ.க. வேட்பாளர் ராமமூர்த்தி முறையிட்டுள்ளார்.
    • ஜெயா நகர் தொகுதியில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    பெங்களூரு:

    ஜெயாநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சௌமியா ரெட்டி மற்றும் பா.ஜ.க. சார்பில் சி.கே. ராமமூர்த்தி ஆகியோர் போட்டியிட்டனர்.

    முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் சௌமியா ரெட்டி 294 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தமாக 57 ஆயிரத்து 591 வாக்குகளை பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராமமூர்த்தி 57 ஆயிரத்து 297 வாக்குகளை பெற்றிருந்தார்.

    இதற்கிடையே, மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என பா.ஜ.க. வேட்பாளர் ராமமூர்த்தி முறையிட்டுள்ளார். இதையடுத்து, தேர்தல் அதிகாரி தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வலியுறுத்தி இருக்கிறார்.

    தேர்தல் அலுவலரின் உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் செயல் தலைவர் ராமலிங்கா ரெட்டி மற்றும் இதர நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், ஜெயா நகரில் பா.ஜ.க. வேட்பாளர் ராமமூர்த்தி 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்பில் தகவல்.
    • ஆனால், நான்கு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்போம் என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஐந்து மாநில தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 30-ந்தேதியுடன் முடிவடைந்தது. இன்று வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது. மிசோரம் மாநிலம் வாக்கு எண்ணிக்கை நாளைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதனால் இன்று ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. சத்தீஸ்கர், தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    என்றபோதிலும், அந்தந்த கட்சித் தலைவர்கள் நான்கு மாநிலங்களிலும் நாங்கள்தான் ஆட்சியை பிடிப்போம் எனத் தெரிவித்து வருகின்றனர்.

    இன்று வாக்கு எண்ணிக்கையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும். அதன்பின் வாக்கு எந்திரங்கள் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

    வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னதாகவே காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் முன் திரண்டுள்ளனர். அவர்கள் கைகளில் பதாதைகளுடன் நின்றுள்ளனர். மேலும், சிலர் பட்டாசு வெடித்து தற்போதே கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    ஒரு காங்கிரஸ் தொண்டர் ஹனுமான் வேடமணிந்து ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டது அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நான்கு மாநிலங்களில் மூன்றில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.
    • தெலுங்கானாவில் 10 இடங்களில் முன்னணி வகிக்கிறது.

    பா.ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும், தேசிய மகளிர் அணி உறுப்பினருமான நடிகை குஷ்பு 4 மாநில தேர்தல் முடிவு குறித்து கூறியதாவது:-

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி அமைக்க இருக்கிறது. 4 மாநிலத் தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றி மக்கள் பிரதமர் மோடி மீது வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

    தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த 4 மாநிலத் தேர்தல் செமி பைனல் (அரையிறுதி) ஆட்டம் போன்றது என்று வர்ணித்தனர். தற்போது அவர்கள் அரையிதிலேயே தோல்வியடைந்து வெளியேறிவிட்டனர்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் இலக்கு 400 இடங்களில் வெற்றி பெறுவதாகும். அதை இந்த தேர்தல் உறுதி செய்துள்ளது. ராகுல் காந்தியை மக்கள் நிராகரித்துவிட்டனர்.

    இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.

    • காலை 8 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் உடனுக்குடன் முன்னிலை நிலவரங்கள் வந்த வண்ணம் உள்ளன.
    • நாடு முழுவதும் உள்ள பல்வேறு பாஜக அலுவலகங்களில் இனிப்புகள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

    பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்த முடிந்த நிலையில் இன்று (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் நாள் இன்று என்பதால் நாடே தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கியுள்ளது.

    இந்த தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணிக்கும், காங்கிரஸின் இந்தியா கூட்டணிக்கும் இடையே இருமுனை போட்டி நடைபெற்றது. எதிரிக்கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜகவுக்கு வலுவான போட்டியை வழங்கும் வகையில் காங்கிரஸ் இந்தியா கூட்டணியை உருவாக்கியது. அதன்படி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில் தேர்தல் களம் விறுவிறுப்பாக இருந்தது.

    இந்நிலையில் இந்த மொத்த தேர்தல் திருவிழாவிலும் முக்கிய நாளான இன்று பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், உலக நாடுகள் என அனைவரின் கண்களும் தேர்தல் முடிவுகளை நோக்கியே குவிந்துள்ளன.

    தேர்தல் முடிவுகள் வெளியானதும் வெற்றியைக் கொண்டாட காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பந்தல் அமைக்கும் பணி நேற்றே தொடங்கியது. இந்த நிலையில் பாஜகவின் வெற்றியைக் கொண்டாட நாடு முழுவதும் உள்ள பல்வேறு பாஜக அலுவலகங்களில் இனிப்புகள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி பூரி, பூந்தி உள்ளிட்ட வகைகள் மும்முரமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. 

     

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அவை அனைத்தும் பாஜக ஊடகங்களால் போலியாக திணிக்கப்பட்ட கருத்துக்கணிப்பு என்று இந்தியா கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது, மேலும் கருத்துக்கணிப்புகளுக்கு நேரெதிரான முடிவுகளே வெளியாகும் என்று அடித்துக் கூறுகிறது இந்தியா கூட்டணி. இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் உடனுக்குடன் முன்னிலை நிலவரங்கள் வந்த வண்ணம் உள்ளன. 

    • பாஜக கூட்டணி சுமார் 290 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
    • இந்தியா கூட்டணி 235 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 290 தொகுதிகளை வாய்ப்புள்ளது. இந்தியா கூட்டணி 235 தொகுதிகளை பிடிக்கும் வாய்ப்புள்ளது.

    பா.ஜனதா கூட்டணியில் உள்ள ஒன்றிரண்டு கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து பாஜக ஆட்சி அமைக்க நெருக்கடி கொடுக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் ஆட்சி அமைப்பதற்கான வியூகம் அமைப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டபா, அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பிரதமர் மோடி அலுவலகம் வரும்போது வெற்றிக்கான இரட்டை விரலை காண்பித்து உற்சாகத்துடன் வந்தார். இந்த வெற்றி கொண்டாட்ட விழாவில் ஜே.பி. நட்டா பேசும்போது "தேர்தலாக இருந்தாலும் சரி, நாட்டை வழிநடத்துவதாக இருந்தாலும் சரி, பிரதமர் மோடி எப்போதும் நாட்டையும், கட்சியையும், மக்களையும் முன்னணியில் இருந்து வழிநடத்தி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவரை வாழ்த்துகிறேன்.

    ஆந்திராவில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையப் போகிறது. கேரளாவில் தாமரை மலர்ந்தது. நமது வாக்கு அதிகரித்துள்ளது. 2014-ல் ஒரு சரித்திரம் நடந்தது, ஏழைத் தாயின் மகன் நாட்டின் பிரதமரானார்.

    முதன்முறையாக என்டிஏ கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கப் போகிறது. சிலருக்கு தங்கள் சுயநலமே முக்கியம். அவர்களை நாடு நிராகரிக்கிறது. மேற்கு வங்கத்தில் நாங்கள் முன்னேறினோம். 3-ல் இருந்து 77 இடங்களை பெற்றோம். தற்போது முதல்முறையாக ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைக்க போகிறது. 30-40 இடங்களில் வெற்றிபெறும் சிலர் நாடு மோடியுடன் எப்படி நிற்கிறது என்பதை மறந்துவிட்டு அதைக் கொண்டாடத் தொடங்குகிறார்கள். மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார்" எனத் தெரிவித்துள்ளார்.

    பின்னர் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறுகையில் "எனக்கு ஆசி வழங்கியதற்கான நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி. 140 கோடி மக்களுக்கான வெற்றி இது. இது ஜனநாயகத்திற்கான மிகப்பெரிய வெற்றி. பா.ஜனதா 3-வது முறையாக ஆட்சி அமைக்க போகிறது. தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. நாட்டின் அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி. கடும் வெப்பத்திற்கு இடையே தேர்தல் ஆணையம் தனது கடமையை சிறப்பாக செய்துள்ளது. 

    • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
    • டெல்லியில் பா.ஜனதா தனித்து போட்டியிட்டது. ஏழு தொகுதிகளையும் மொத்தமாக கைப்பற்றியுள்ளது.

    மக்களை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

    ஆனால் காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணி எதிர்பாராத வகையில் பாஜக கூட்டணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால் பாஜக-வால் தனி மெஜாரிட்டி பெறமுடியவில்லை. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 290 தொகுதிகளை பிடித்துள்ளது.

    இந்தி பெல்ட் என கருதப்படும் மாநிலங்களிலும் பாஜக-வுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உத்தர பிரதேசத்தில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களை இழந்துள்ளது.

    இந்த தேர்தலில் சில மாநிலங்களில் கட்சி அல்லது கூட்டணி முழுமையான அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

    டெல்லியில் பா.ஜனதா தனித்து போட்டியிட்டது. ஏழு தொகுதிகளையும் மொத்தமாக கைப்பற்றியுள்ளது.

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக 29 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. 29 தொகுதிகளிலும் பாஜக வெற்றி வாகை சூடியது.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் 4 தொகுகளில் தனித்து போட்டியிட்டது. 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக 5 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. ஐந்து தொகுதிளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    • மத்தியில் பிரதமர் மோடிக்கு பதிலாக வேறு யார் ஆட்சியமைக்க வந்தாலும் அவருக்கு ஆதரவு அளிப்போம்.
    • நாட்டில் இருந்த சூழல்படி பாஜகாவுக்கு இத்தனை இடங்கள் கூட கிடைத்திருக்க கூடாது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி பா.ஜனதா 240 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    அந்த வகையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியை பிடிக்க தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மோடியை பிரதமராகிவிடக்கூடாது என்பதற்காக எதை வேண்டுமாலும் செய்வேன் என ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

    இது அவர் கூறியதாவது:-

    என்ன நடக்கும், இது நடக்க வாய்ப்பு இருக்கு, நடக்குமா? என்பதை பற்றியெல்லாம் பேச விரும்பலில்லை. ஏற்கனவே நான் கூறியது போல, மத்தியில் பிரதமர் மோடிக்கு பதிலாக வேறு யார் ஆட்சியமைக்க வந்தாலும் அவருக்கு ஆதரவு அளிப்போம். நாட்டில் இருந்த சூழல்படி பாஜகாவுக்கு இத்தனை இடங்கள் கூட கிடைத்திருக்க கூடாது.

    நாங்கள் சிறப்பாக வேலை செய்திருந்தால் அவர்களுக்கு 150 இடங்களில்தான் கிடைத்திருக்கும். இதன்மூலம் பாஜக-வை ஆட்சி அமைக்க விடாமல் தடுத்திருக்கலாம். மக்களும் அதைதான் விரும்பினர். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது.

    நாடு முழுவதும் முஸ்லீம் ஓட்டு வங்கி எங்கேயும் இல்லை. ஒருபோதும் இருக்காது என்பது தெளிவாகிறது,

    • சர்வாதிகாரத்தனமான ஒற்றையாட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
    • நாற்பதுக்கு நாற்பது என்ற இந்த வெற்றி இந்திய அரசியலின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

    மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 2004-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது முழுமையான வெற்றி கண்டுள்ளது. இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் முக ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.

    இந்த நிலையில் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    சர்வாதிகாரத்தனமான ஒற்றையாட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ஆன்மிக நம்பிக்கைகளை அரசியல் சுயலாபத்துக்குப் பயன்படுத்த நினைக்கும் மதவாத சக்திகளை, கோவில் கட்டிய மண்ணிலேயே வீழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் இறைநம்பிக்கையுள்ள வாக்காளர்கள்.

    சிறுபான்மை மக்களின் நெஞ்சில் இருந்த அச்ச உணர்வு நீங்கியிருக்கிறது. தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் நமது கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் நம்பிக்கைத் துளிர்கள் அரும்பியுள்ளன. அரசியலமைப்பு வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பாதுகாக்கின்ற வகையில், நாட்டை வழி நடத்தும் பணியை இந்தியா கூட்டணி மேற்கொள்ளும்.

    அதற்கு நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றி பெருந்துணையாக இருக்கும். இந்த வெற்றிக்குத் துணை நின்ற உடன்பிறப்புகள் அனைவருக்கும் என நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். தோழமைக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

    மதவாதத்தையும் வெறுப்பரசியலையும் விதைக்க நினைப்பர்கள் தமிழ்நாட்டில் எப்படியாவது கால் ஊன்றி விட வேண்டும் எனத் திட்டமிட்டார்கள்.

    நாட்டின் பிரதமர் 8 முறை தமிழ்நாட்டுக்கு வந்தார். திமுக மீது அவதூறு சேற்றினை அள்ளி வீசினார். திமுக வெறுப்புப் பிரசாரம் செய்யவில்லை. பொறுப்பான முறையிலே தேர்தல் களத்தில் தன் கடமையை ஆற்றியது.

    நாற்பதுக்கு நாற்பது என்ற இந்த வெற்றி இந்திய அரசியலின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என்பதைத்தான் தனிப்பெரும்பான்மை பெரும்பான்மையை பெற முடியாத பாஜக-வின் சரிவு காட்டுகிறது.

    இவ்வாறு மு.க. ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ×