search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் அருகே வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட வைக்கோல் தீப்பிடித்தது: லேசான காயத்துடன் டிரைவர் தப்பினார்
    X

    சின்னசேலம் அருகே வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட வைக்கோல் தீப்பிடித்தது: லேசான காயத்துடன் டிரைவர் தப்பினார்

    • கிராமத்தில் வசிக்கும் உறவினரிடம் இருந்த வைக்கோலை வாகனத்தின் மூலம் எடுத்து வந்தார்.
    • ராஜ் என்பவருக்கு லேசான தீக்காயத்துடன் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பொன்னு சாமி (வயது 50). இவர் வளர்க்கும் மாடு களுக்கு வைக்கோல் தேவைப்படு வதால் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தண்டலை கிராமத்தில் வசிக்கும் உறவினரிடம் இருந்த வைக்கோலை வாகனத்தின் மூலம் எடுத்து வந்தார். இந்த ஈச்சர் வாகனத்தை தண்ட லை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் ஓட்டி வந்தார்.

    இந்நிலையில் பாண்டி யன்குப்பம் அருகே உள்ள திம்மாபுரம் காட்டுக் கொட்டாய் செல்லும் சாலையில் ஈச்சர் வாகனம் சென்று கொண்டிருந்த போது, மேலே சென்ற மின்சார கம்பி மீது எதிர் பாராத விதமாக வைக்கோல் உரசியது. இதில் திடீரென தீ பற்றி வைக்கோல் எரிந்தது.

    இது குறித்து சின்ன சேலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்த னர். வைக்கோல் முழுவதும் எரிந்து நாசமாயின. இதன் மதிப்பு ரூ. 30 ஆயிரம் என கூறப்படுகிறது.

    தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்த தால் ஈச்சர் வாகனம் அதிக சேதம் இல்லாமல் தப்பித்தது. இதில் வாக னத்தை ஓட்டி வந்த செல்வ ராஜ் என்பவருக்கு லேசான தீக்காயத்துடன் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார். பின்னர் அவர் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். இதுகுறித்து சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×