search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோழிகளை ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கி சேதமடைந்திருப்பதை படத்தில் காணலாம்.
    X
    கோழிகளை ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கி சேதமடைந்திருப்பதை படத்தில் காணலாம்.

    விருத்தாசலம் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் பலி

    விருத்தாசலம் அருகே லாரிகள் எதிர்பாராதவிதமாக திடீரென்று நேருக்கு நேர் மோதியதில் டிரைவர்கள் உள்பட 3 பேர் பலியாகினர்.
    விருத்தாசலம்:

    நாமக்கல் மாவட்டத் தில் இருந்து பிராய்லர் கோழிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி நோக்கி புறப்பட்டது. அந்த லாரியை குறிஞ்சிப்பாடியை சேர்ந்த டிரைவர் பழனிவேல்(வயது 40) ஓட்டிவந்தார். அந்த லாரியில் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த பாபு(22), பிருத்திவிராஜ்(22), சரத்(20) ஆகியோரும் வந்தனர்.

    அந்த லாரி இன்று அதிகாலை 3 மணியளவில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள அரசக்குழி பகுதியில் வந்து கொண்டிருந்தது. இதே நேரத்தில் நெய்வேலியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு மற்றொரு லாரி ஒன்று அதே பகுதியில் வந்தது. அந்த லாரியை அரியலூர் மாவட்டம் கீழபழுர் பகுதியை சேர்ந்த டிரைவர் மகாலிங்கம்(49) ஓட்டிவந்தார்.

    இந்த 2 லாரிகளும் எதிர்பாராதவிதமாக திடீரென்று நேருக்கு நேர் மோதி சாலையில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் மகாலிங்கம், பழனிவேல் மற்றும் பாபு ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    பிருத்திவிராஜ், சரத் ஆகிய 2 பேரும் லாரியின் இடிபாட்டிற்குள் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஊ.மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மேலும் பிராய்லர் கோழி ஏற்றி வந்த லாரியில் இருந்த 50 கோழிகளும் விபத்தில் சிக்கி இறந்தன. இந்த விபத்தினால் அந்த பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பின்னர் விபத்தில் சிக்கிய லாரிகளை பொக்லைன் எந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் போக்குரத்து சீராகியது.


    Next Story
    ×