என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர்  பல்லடம்   சாலையில் ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல்
    X

    திருப்பூர் பல்லடம் சாலையில் ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல்

    • வித்தியாலயம் பகுதியில் இருந்து டி.கே.டி., மில் வரை உள்ள சாலையில் ஆக்கிரமிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
    • நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெயரளவுக்கு மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு சென்றனர்.

    வீரபாண்டி :

    திருப்பூரில் இருந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகம் வழியாக பல்லடம் செல்லும் சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இந்த சாலையின் வித்தியாலயம் பகுதியில் இருந்து டி.கே.டி., மில் வரை உள்ள சாலையில் ஆக்கிரமிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

    இதனால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்தப் பகுதி உள்ள கடைகளின் முன்பு வாகன நிறுத்துவதும் சாலையை ஆக்கிரமித்து கடைகளையும் வைத்துள்ளனர்.

    கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெயரளவுக்கு மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு சென்றனர். முழுமையாக அகற்றவில்லை. இதனால் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

    இதனால் தினந்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் இந்த வழியாகத்தான் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்கின்றன.

    ஆம்புலன்ஸ் வாகனங்கள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர் .

    எனவே நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துதுறை,வருவாய்த்துறை, மாநகராட்சி ஆகிய துறைகள் ஒன்றிணைந்து ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம்,விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×