என் மலர்
உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை - புதிய துணை கமிஷனர் அபிஷேக் குப்தா பேட்டி
- தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்டங்களில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.
- போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்
திருப்பூர் :
திருப்பூர் மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனராக அபிஷேக் குப்தா பொறுப்பேற்றுக்கொண்டார். இவரது சொந்த மாநிலம் பஞ்சாப். பி.காம். எல்.எல்.பி.பட்டப்படிப்பு படித்துள்ளார். 2019-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வானார். தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்டங்களில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.
தற்–போது பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாந–கர துணை கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார். அவர் கூறும்போது, 'பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு நடவடிக்கை மற்றும் குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடந்த குற்றங்களை விரைவாக கண்டறிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்படும். திருப்பூர் மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
Next Story






