என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் ஆற்காடு சாலை தனியார் மருத்துவமனை அருகே குறுக்கும் நெடுக்குமாக செல்லும் ஆட்டோக்கள்.
ஆற்காடு சாலையில் தடுப்புகளை அகற்றியதால் போக்குவரத்து நெரிசல்
- குறுக்கும் நெடுக்குமாக செல்லும் ஆட்டோக்கள்
- சுரங்க பாதை பணிகளை தொடங்க பொதுமக்கள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் ஆற்காடு சாலையில் தற்போது போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாத பிரச்சினையாக உள்ளது.
அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு பொதுமக்கள் ஏராளமானோர் சாலையை கடப்பதால் அதிக நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சாலையில் சில ஆட்டோக்கள் குறுக்கும் நெடுக்கமாக திரும்புவதால் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு சாலையில் இரும்பு தடுப்புகளை போலீசார் அமைத்திருந்தனர்.அப்போது ஓரளவு வாகனங்கள் சீராக சென்றன.
ஆனால் என்ன காரணத்திற்காகவோ சாலை நடுவில் இருந்து தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன. இதனால் சாலையில் அனைத்து பகுதிகளிலும் பொது மக்கள் குறுக்கே கடந்து செல்கின்றனர். பல வாகனங்கள் சாலை நடுவில் திரும்புகின்றன.
தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து தற்போது அதிக பஸ்கள் இயக்கப்படுகிறது இதன் காரணமாகவும் ஆற்காடு சாலையில் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
ஆற்காடு சாலையில் நெரிசலை தவிர்க்க சுரங்க நடைபாதை அமைக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலெக்டர் தலைமையில் ஆய்வு நடத்தி தெரிவித்தனர். ஆனால் அதற்கான வேலை எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை.
மழை பெய்யும் நேரங்களில் ஆற்காடு சாலையை கடப்பது என்பது கடினமாகிவிட்டது.
இந்த சாலையில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளை மீண்டும் நடுவில் அமைக்க வேண்டும். ஆஸ்பத்திரிக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக சென்று வர சுரங்க பாதை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






