search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகளிடம் கைவரிசை காட்டிய 2 பேர் கைது
    X

    கைதான சக்திவேல், அருள்துரை ஆகியோரை படத்தில் காணலாம்.

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகளிடம் கைவரிசை காட்டிய 2 பேர் கைது

    • நெல்லை புதிய பஸ் நிலையத்தில் சமீப காலமாக பயணிகளிடம் பிக்பாக்கெட், செல்போன் திருடி செல்வது, நூதன முறையில் நகை பறிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.
    • இதனை தடுக்கும் பொருட்டு புதிய பஸ் நிலையத்தில் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் சமீப காலமாக பயணிகளிடம் பிக்பாக்கெட், செல்போன் திருடி செல்வது, நூதன முறையில் நகை பறிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.

    போலீசார் ரோந்து

    இதனை தடுக்கும் பொருட்டு புதிய பஸ் நிலை யத்தில் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த வியாபாரி கண்ணன் என்பவரிடம் இருந்து 2 பேர் ரூ.300 பிக்பாக்கெட் அடித்த னர். அப்போது அங்கு ரோந்து சென்ற போலீசார் பிக்பாக்கெட் அடித்த 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    போலீசார் நடத்திய விசா ரணையில் அவர்கள் மேலப் பாளையம் குறிச்சியை சேர்ந்த சக்தி வேல் (வயது57), கல்லிடைக் குறிச்சியை சேர்ந்த அருள் துரை (33) என்பது தெரிய வந்தது.

    இவர்கள் இதற்கு முன்பு வேறு பயணிகளிடம் கைவரிசை காட்டி னார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×