search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Athoor"

    • நடராஜருக்கு ஆண்டு ஒன்றிற்கு ஆறு முறை அபிஷேகங்கள் நடைபெறும்.
    • அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

     ஆத்தூர்:

    ஆத்தூர் ஸ்ரீசோமநாத சுவாமி சமேத ஸ்ரீசோமசுந்தரி அம்பாள் கோவிலில் நடராஜர் அபிஷேகம் நடைபெற்றது. சைவ சமய ஆகமங்களின் படி நடராஜருக்கு சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி மற்றும் மாசி வளர்பிறை சதுர்த்தசி என ஆண்டு ஒன்றிற்கு ஆறு முறை அபிஷேகங்கள் நடைபெறும்.

    புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி தினமான நேற்று ஶ்ரீ சோமநாத சுவாமி சமேத ஶ்ரீ சோமசுந்தரி அம்பாள் கோவில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலை யாகசாலை பூஜை நடைபெற்றது, நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படி தாரர் விஜயலெட்சுமி நயினார்குல சேகரன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • பிற்பகல் 12.30 மற்றும் 1.15 மணிக்கு மணிக்கு புறப்படும் பஸ்கள் கடந்த ஒரு மாதமாக சரியாக இயக்கப்படவில்லை
    • வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் பஸ்கள் வருவதே கிடையாது.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் நெல்லையின் புறநகர் பகுதிகளுக்கு மட்டுமின்றி தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் பஸ்கள் சென்று வருகிறது. இதனால் புதிய பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூருக்கு காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் பஸ்கள் சென்று வருகிறது. செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த பஸ்கள் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் பிற்பகல் 12.30 மற்றும் 1.15 மணிக்கு மணிக்கு புறப்படும் பஸ்கள் கடந்த ஒரு மாதமாக சரியாக இயக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். நேற்றும் பிற்பகலில் இந்த பஸ்கள் வரவில்லை. இதனால் அந்த பஸ்சுக்காக காத்திருந்த ஏராளமான பயணிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் புதிய பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    இது தொடர்பாக ஆத்தூர் பயணிகள் கூறியதாவது:-

    நாங்கள் ஆத்தூரில் இருந்து பல்வேறு காரணங்களுக்கு நெல்லைக்கு காலையில் வருவோம். பின்னர் எங்கள் பணிகள் முடிந்த பின்னர் மதியம் மீண்டும் பிற்பகல் 12.30 மணிக்கு செல்லும் பஸ்சில் புறப்பட்டு செல்வோம். அந்த பஸ்சை விட்டால் அதன்பின்னர் 1.15 மணிக்கு செல்லும் அரசு பஸ்சில் ஆத்தூர் செல்வோம். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்த 2 பஸ்களும் சரிவர இயக்கப்படவில்லை.

    குறிப்பாக வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பஸ்கள் வருவதே கிடையாது. இது குறித்து போக்குவரத்துதுறை அதிகாரிகளிடம் கேட்டால் சரியாக பதில் அளிப்பதில்லை. மதியம் 12 மணிக்கு புதிய பஸ் நிலையம் வந்தால் இந்த 2 பஸ்களும் வராததால் அங்கேயே கால்கடுக்க காத்திருந்து அடுத்து 2.30 மணிக்கு ஆத்தூர் செல்லும் பஸ்சில்தான் செல்ல வேண்டி உள்ளது.

    சில நேரங்களில் அந்த பஸ்சும் வராது. இதனால் மாலை 4 மணிக்கு செல்லும் பஸ்சில் ஊருக்கு புறப்பட்டு செல்வோம். இதனால் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பயணிகள் நலன் கருதி, முன்பு போல 12.30 மற்றும் 1.15 மணிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சை சீரான முறையில் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் நாளை இரவு முழுவதும் 4 கால பூஜைகள் நடைபெற இருக்கிறது.
    • பூஜை ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்பாள் கோவிலில் சிவராத்திரி தினமான நாளை( சனிக்கிழமை )இரவு முழுவதும் 4 கால பூஜைகள் நடைபெற இருக்கிறது. மகா சிவராத்திரி முதலாம் கால பூஜை நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி தொடர்ந்து இரண்டாம் காலம், மூன்றாம் காலம் மற்றும் நான்காம் பூஜைகள் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை முதலாம் கால பூஜை மண்டகப்படிதாரர் ராஜாராம், இரண்டாம் கால பூஜை மண்டகப்படிதாரர் அண்ணாமலை சுப்ரமணியன், மூன்றாம் கால பூஜை மண்டகப்படிதாரர் பழக்கடை கணேசன், நான்காம் கால பூஜை மண்டகப்படிதாரர் அய்யம்பெருமாள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நடைபெற்றது.
    • மாலையில் சோமசுந்தரி அம்பாளிடம் இருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆத்தூர்:

    ஆத்தூர் சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்பாள் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 25-ந் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. சஷ்டி விழா நாட்களில் சுப்பிரமணிய சுவாமிக்கு காலையில் சிறப்பு வழிபாடுகளும், மாலையில் சுவாமி பிரகார வீதி உலாவும் நடைபெற்றது. கந்த சஷ்டி தினமான நேற்று காலை கும்ப பூஜை மற்றும் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    மாலையில் சோமசுந்தரி அம்பாளிடம் இருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு சுப்பிரமணிய சுவாமி புறப்பாடு நடைபெற்றது. ஆத்தூர் 9-ம் சந்தி அருகில் நடைபெற்ற சூரசம் ஹாரத்தில் தாரகாசூரர், சிங்கமுகாசூரர், சூரபதுமர் ஆகிய வடிவங்களில் வந்த அசுரர்களை பக்தர்களின் அரோகரா கோஷங்கள் முழங்க சுப்பிரமணிய சுவாமி சம்ஹாரம் செய்தார்.

    சுப்பிரமணிய சுவாமி சூரபதுமரை ஆட்கொள்ளும் நிகழ்வும், வேல் அபிஷேகமும் நடைபெற்றது. நிறைவாக சுப்பிரமணிய சுவாமி மயூர வாகனத்தில் வீதி உலா வந்து கோவிலை வந்தடைந்தார். ஏற்பாடுகளை சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்பாள் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.


    ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் 5½ அடியாக குறைந்ததால் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
    செம்பட்டி:

    மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, ஆடலூர், பன்றிமலை, பண்ணைக்காடு, புல்லாவெளி, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, சோலைக்காடு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் ஓடைகள் வழியாக மலையடிவாரத்தில் உள்ள ஆத்தூர் காமராஜர் அணைக்குவருகிறது.

    இந்த அணையில் இருந்து திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அணை நிரம்பி மறுகால் பாய்ந்தது.

    தற்போது பண்ணைக்காடு, தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை பகுதிகளில் பருவமழை முறையாக பெய்யவில்லை. இதனால் ஆத்தூர் காமராஜர் அணைக்கு நீர்வரத்து இல்லை. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 5½ அடியாக காணப்பட்டது. இதனால் அணை குட்டைப்போல் காட்சியளிக்கிறது. இதனால் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. 
    ×