search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivarathri"

    • தேவர்கள் எல்லாரும் அசுரர்களின் தொல்லை பொறுக்க முடியாமல் பிரம்மனிடம் சென்று வழி கேட்டனர்.
    • மலை ஒருபக்கமா சரிய தொடங்கியதால் திருமால் ஆமை வடிவம் எடுத்து அந்த மலை விழுந்துவிடாமல் தாங்கினார்.

    ஒரு காலத்துல தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்துகிட்டே இருந்துச்சு.

    தேவர்கள் எல்லாரும் அசுரர்களின் தொல்லை பொறுக்க முடியாமல் பிரம்மனிடம் சென்று வழி கேட்டனர்.

    பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்து சாப்பிட்டால் இறப்பில்லாத இளமையான வாழ்வை பெறலாம்.

    அப்புறம் அசுரர்களை சமாளிப்பது ரொம்ப ஈஸின்னு பிரம்மா வழி சொன்னார்.

    திருமாலிடம் அனுமதி வாங்கிக்கிட்டு மந்திரமலையை மத்தாக்கினாங்க.

    சந்திரனை அசைத்தூணாக்கி வாசுகிங்கற பாம்பை கயிறாக அந்த மலையில் கட்டி தேவர்கள் ஒருபக்கமும், அசுரர்கள் ஒரு பக்கமும் இழுக்க தொடங்கினாங்க.

    மலை ஒருபக்கமா சரிய தொடங்கியதால் திருமால் ஆமை வடிவம் எடுத்து அந்த மலை விழுந்துவிடாமல் தாங்கினார்.

    அப்புறம் ஒரே ஸ்பீடு தான். அமுதம் உண்ணப்போகிறோம் என்கிற சந்தோஷத்தில் தேவர்கள் வேக வேகமாக கடைஞ்சாங்க.

    வாசுகி களைத்து துடித்தது. அதன் உடல் இறுக்கமாக இருந்ததால் உடலில் இருந்த விஷத்தை கக்கியது.

    அதோடு பாற்கடலில் இருந்தும் நிறைய விஷம் வெளிப்பட்டது.

    இரண்டும் சேர்ந்து ஆலகால விஷம் எனும் கொடிய நஞ்சாக மாறிடுச்சு.

    விஷத்தோட வீரியம் தாங்காம அவர்கள் சிவன் கிட்ட ஓடிப்போய் முறையிட்டாங்க.

    நமசிவாய மந்திரம் உச்சரிச்சாலே மனம் இரங்கி அருள்புரியும் ஆபத்பாந்தவனல்லவா அந்த ஈசன்.

    தேவர்களை காப்பதாக உறுதியளித்தான். சுந்தரரை விஷத்தை கொண்டு வரும்படி பணித்தான்.

    சுந்தரர் சென்று அவ்வளவு விஷத்தையும் உருட்டி உருண்டையாக நாவல்கனிபோல் ஆக்கிக்கொண்டு வந்து சிவனிடம் கொடுத்தார்.

    தேவர்களை காப்பதற்காக அந்த விஷத்தை சாப்பிட்டார் ஈசன்.

    அன்னை சக்தி பதறிப்போனாள். உலக ரட்சகனான தன் கணவனின் உடலுக்குள் விஷம் சென்றால் அனைத்து உயிர்களும் அழிந்துவிடுமே என்று கண்டத்தில் கைவைத்தாள் அன்னை.

    விஷம் அன்னையின் கைபட்டு கழுத்து பகுதியில் அப்படியே நின்றது.

    ஈசன் திருநீலகண்டன் ஆனார்.

    அவரது உடலில் இருக்கும் விஷத்தின் உஷ்ணம் குறைவதற்காக பிரம்மா, திருமால், முப்பத்து முக்கோடி தேவர்கள்,

    இந்திரன், முனிவர்கள், ரிஷிகள், அசுரர்கள் இவர்களுடன் பார்வதி தேவியும் சிவனை நினைத்து ஆறுகால பூஜை

    செய்து வழிபட்ட தினம் தான் சிவராத்திரி.

    அப்படி சிவபெருமான் அனைத்து உயிர்களையும் காப்பதற்காக ஆலகால விஷத்தை அமுது போல் எண்ணி

    அருந்தியதை நமக்கு இன்றும் நினைவுபடுத்திக் கொண்டிருப்பது தான் சிவராத்திரி.

    • மாசி மாதத்து தேய்ப்பிறைச் சதுர்த்தசி கூடிய நாளே மகா சிவராத்திரியாகும்
    • ஒவ்வொரு மாதத்தில் வருகின்ற சிவராத்திரி மாத சிவராத்திரியாகும்

    1. மகா சிவராத்திரி: மாசி மாதத்து தேய்ப்பிறைச் சதுர்த்தசி கூடிய நாளே மகா சிவராத்திரியாகும். அந்த நாள் சிவனுக்கே உரியது.

    2. யோக சிவராத்திரி: சோமவார சம்பந்தமாக வரும் யோக சிவராத்திரி நான்கு வகைப்படும். சோம வாரத்தன்று சூரிய உதயகாலம் தொட்டு இரவு முழுவதும் அமாவாசை இருக்குமானால் அன்று யோக சிவராத்திரியாகும்.

    3. நித்திய சிவராத்திரி: வருடத்தின் 12 மாதங்களிலும் வரும் தேய்பிறை வளர்பிறைகளின் சதுர்த்தசி கூடிய 24 நாட்களும் நித்திய சிவராத்திரியாகும்.

    4. பட்ச சிவராத்திரி: தை மாதத்தின் தேய்பிறைப் பிரதமையன்று தொடங்கி 13 நாள் வரையில் தினமும் நியமத்துடன் ஒரு பொழுது மட்டும் உண்டு 14ஆம் நாளாகிய சதுர்த்தசியன்று விதிப்படி விரதம் நோற்பது பட்ச சிவராத்திரியாகும்.

    5. மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதத்தில் வருகின்ற சிவராத்திரி மாத சிவராத்திரியாகும் அன்று சிவபுராணம் படித்துச் சிவனைப் போற்றினால் வராத நன்மை நம்மை தேடி நாடி வரும்.

    • சிவம் என்றால் மங்கலம் என்று பொருள்.
    • சிவன் என்றால் மங்கலத்தை அருளுபவன் என்பது பொருள்.

    சிவம் என்றால் மங்கலம் என்று பொருள். சிவன் என்றால் மங்கலத்தை அருளுபவன் என்பது பொருள்.

    சிவபெருமான் எப்பொழுது மங்கலத்தைத் தருவார்?

    சிவராத்திரி அன்று தெரிந்தோ தெரியாமலோ (யதேச்சையாய்) (எதிர்பார்க்காமல்) சிவலிங்கத்திற்குப் பூஜை செய்தால் எல்லா நன்மைகளும் பெறலாம்.

    தெரியாமல் செய்த சிவ பூஜையும் அதனால் கிடைத்த புண்ணியமும் பற்றி சிவமகாபுராணத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

    வேடன் ஒருவன் வேட்டையாட வில் அம்பும் தோல் பையில் தண்ணீரும் எடுத்து சென்றான்.

    காட்டிற்குள் நுழைந்து வேட்டையாட முற்பட்டான்.

    ஒரு மிருகமும் கிடைக்கவில்லை. பொழுது சாய்ந்து இருட்டு வந்து விட்டது.

    அங்கே ஒரு குளம் தென்பட்டது. அதன் அருகில் ஒரு மரம் உயர்ந்து வளர்ந்திருந்தது.

    அவனுக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. இந்த மரத்தின் மீது அமர்ந்து கொள்வோம்.

    குளத்து நீரைக் குடிக்க பல மிருகங்கள் வரும்.

    நாம் அம்பு எய்து கொல்லலாம் என்று எண்ணி அம்மரத்தின் மேல் ஏறி அமர்ந்து மிருகம் ஏதாவது வருகிறதா? என்று கூர்ந்து கவனித்தான்.

    முதல் ஜாமம் ஒரு மான் நீர்க்குடிக்க வந்தது.

    அம்பு போட முயற்சி செய்த போது தோல்பை நீர் தவறி கீழே வீழுந்தது.

    அது அம்மரத்தடியில் முனிவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த நிசலிங்கத்தை தீர்த்தவாரி (நீராட்டுதல்) செய்தது.

    அம்பைத் தொடுக்கும்போது அதன் நுனி பட்டு வில்வ இலைகள் சிவலிங்கத்தின் மீது விழுந்தன.

    எதிர்பாராத வகையில் நீரும் இலைகளும் விழுந்ததால் அந்த வேடனுக்குச் சிவ பூஜை செய்த புண்ணியம் கிடைத்தது.

    மான் வேடனை நோக்கி, "என் குட்டியை வேறொரு மானிடம் ஒப்படைத்து விட்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டுச் சென்றது.

    சிறிது நேரம் கழித்து ஆண்மான், பெண்மான், குட்டி மூன்றும் வந்தன.

    அவற்றின் சத்தியத்தைக் கண்ட வேடன் மனம் திருந்தினான்.

    இந்த மான்களிடம் இருக்கும் சத்தியம், நேர்மை, தியாகம் ஆகிய பண்புகள் நம்மிடம் இல்லையே என்று எண்ணி வருந்தினான் மனம் திருந்தினான்.

    அன்று சிவராத்திரி வேடன் இதை அறியவில்லை. வில்வமரம் என்றும் அறியவில்லை.

    அறியாமல் எதிர்பாராத வகையில் சிவபூஜை சிவராத்திரியில் நடந்தேறியது. இவ்வாறு சிவமகாபுராணம் கூறுகிறது.

    • சிவராத்திரி தினத்தன்று அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று தரிசிப்பது நல்லது.
    • கோகர்ணம், தேவிகாபுரம் ஆகிய சிவத்தலங்களிலும் சிவராத்திரி மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

    சிவராத்திரி தினத்தன்று அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று தரிசிப்பது நல்லது.

    அப்பொழுது சிவபெருமானுடைய நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுவது சிறந்தது.

    சிவராத்திரியோடு தொடர்புடைய தலங்கள் பல உள்ளன.

    வசதி படைத்தோர் கீழ்க்கண்ட தலங்களுக்கு சென்று வழிபட்டால் மேலும் மேலும் தம் வாழ்க்கையில் உயர்வார்கள் என்பது முக்காலமும் உண்மை.

    1. திருவைகாவூர்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருவைகாவூரில் எழுந்தருளி உள்ளவர் வில்வனேஸ்வரர் இறைவி சர்வ ஜனரட்சகி. இத்தலத்தைச் சம்பந்தர், நாவுக்கரசர், அருணகிரியார், வள்ளலார் ஆகியோர் பாடியுள்ளனர்.

    2. திருவண்ணாமலை: பிரமனும் திருமாலும் சிவபெருமான் நெருப்புருவில் நின்றபோது முடி, அடி தேடித் தோல்வி அடைந்து சிவபெருமானை வணங்கிய தலம் திருஅண்ணாமலை. வணங்கிப் போற்றிய இருவருக்கும் காட்சி தந்தது சிவ ராத்திரி அன்றே ஆகும்.

    3. திருக்கடவூர்: காலனை காலால் உதைத்த ஊர் திருக்கடவூர். மார்க்கண்டேயன் சிவனைச் சிவராத்திரி அன்று பூசித்துக் கொண்டிருந்தபோது எமன் வந்து பாசக் கயிற்றை வீச லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட சிவபெருமான் தன் காலால் எமனை உதைத்தார். அத்தலம் தான் திருக்கடவூர். எமன் பூசித்த தலம். அருளாளர்களின் பாடல் பெற்ற தலம். இத்தலத்தைத் தரிசித்தால் எமவாதம் நீங்கும்.

    4. காஞ்சீபுரம்: பார்வதி தேவியார் விளையாட்டாக சிவபெருமானின் கண்களைப் பொத்தியதால் சிவபெரு மானால் சாபம் பெற்று தவம் முழுமை அடையாததால் திருவண்ணாமலையில் தவம் செய்து இடப்பாகம் பெற்றார்.

    இவ்வரலாற்றை காஞ்சிபுராணம் மிக விரிவாகக் கூறுகிறது. இந்நிகழ்வு சிவராத்திரி அன்று நடந்தது. காஞ்சியின் ஒரு பகுதி உருத்திரச் சோலை எனப்பட்டதாகவும் காஞ்சிபுராணம் கூறுகிறது. காஞ்சியில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரேஸ்வரரைச் சிவராத்திரி அன்று வழிபட்டு அருளை பெறுவோமாக.

    5. ஸ்ரீசைலம்: சிவ மகா புராணத் தில் கூறப்பட்ட வேடன் கதை நடந்த இடம் ஸ்ரீசைலம் ஆகும். இங்கே நந்திதேவர் மலை உருவில் வீற்றிருக்கின்றார். காஞ்சியில் மர உருவிலும் திருவண்ணாமலையில் மலை உருவிலும் சிவபெருமான் எழுந்தருளி இருப்பது போல ஸ்ரீசைலத்தில் மலை உருவில் நந்திதேவர் எழுந் தருளியுள்ளார். இத்தலத்தை திருப்பருப்பதம் என்றும் மல்லிகார்ஜுனம் என்றும் சொல்வார்கள்.

    இது 12 ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்று. சிவராத்தி யன்று இங்குள்ள பாதாளகங்கை என்ற தீர்த்தத்தில் நீராடி இறைவனைத் தரிசித்தால் எல்லா நலன்களும் பெற்று இன்பம் அடையலாம்.

    6. ஓமாம்புலியூர்: சிவபெருமான் பார்வதி தேவிக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்த தலம் ஓமாம்புலியூராகும். சிவமகா புராணத்தில் சொல்லப்பட்ட வேடன் கதை போன்ற ஒரு கதை இங்கும் உண்டு. சிவராத்திரியின் பெருமையை விளக்குகிறது. இந்த ஊரினை பிரணவ வியாக்ரபுரம் என்றும் கூறுவர். சிதம்பரத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது.

    7. திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள ஊர் திருக்கழுக்குன்றமாகும். இவ்வூரை உருத்திரகோடி என்பார்கள். கோடி உருத்திரர்கள் சிவராத்திரி அன்று சிவபூஜை செய்து அருள் பெற்றதால் இது உருத்திரகோடி எனப் பெயர் பெற்றதாம். இக்கோவிலில் சிவராத்திரி தினத்தன்று பூஜை செய்தால் கோடிருந்திரர்கள் பெற்ற அருள் நமக்கு கிடைக்கும்.

    8. திருக்காளத்தி: இங்குள்ள மலைக் கோவிலில் சிவராத்திரி நாளில் தேரில் காளத்திநாதர் பவனி வருகிறார். தேரோட்டம் திருக்கல்யாணம், கிரிவலம், ரிஷப வாகன சேவை முதலிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    கோகர்ணம், தேவிகாபுரம் ஆகிய சிவத்தலங்களிலும் சிவராத்திரி மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

    • மாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது.
    • சித்திரை மாதம் : இம்மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமா தேவியால் வழிபடப்பட்டது.

    மாத சிவராத்திரி விரதங்களைப் பற்றி மாத சிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாகச் சொல்லுகிறது.

    அதனைச் சுருக்கி இங்கே தரப்படுகிறது.

    1. சித்திரை மாதம் : இம்மாதம் தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமா தேவியால் வழிபடப்பட்டது.

    2. வைகாசி மாதம் : வளர்பிறை. அஷ்டமி சிவராத்திரி சூரிய பகவனால் வழிபடப்பட்டது.

    3. ஆனி மாதம் : வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி ஈசானால் வழிபடப்பட்டது.

    4. ஆடி மாதம் : தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகனால் வழிபடப்பட்டது.

    5. ஆவணி மாதம் : வளர்பிறைஅஷ்டமி சிவராத்திரி சந்திரனால் வழிபடப்பட்டது.

    6. புரட்டாசி மாதம் : வளர்பிறை திரியோதசி சிவராத்திரி ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.

    7. ஐப்பசி மாதம் : வளர்பிறைதுவாதசி சிவராத்திரி இந்திரனால் வழிபடப்பட்டது.

    8. கார்த்திகை மாதம் : 2 சிவராத்திரி வளர்பிறை சப்தமியும் தேய்பிறை அஷ்டமியும் சிவராத்திரிகள் இவற்றை சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.

    9. மார்கழி மாதம் : வளர்பிறை, தேய்பிறையில் வரும் சிவராத்திரி லட்சுமியால் வழிபடப்பட்டது.

    10. தை மாதம் : வளர்பிறைநந்தி தேவரால் வழிபடப் பட்டது.

    11. மாசி மாதம் : தேய்பிறைதேவர்களால் வழிபடப் பட்டது.

    12. பங்குனி மாதம் : வளர்பிறைகுபேரனால் வழிபடப் பட்டது.

    நாமும் சிவராத்திரியில் சிவபெருமானை வழிபடுவோம். அருளைப் பெறுவோம்.

    • சிவராத்திரி அன்று மாலையில் பிரதோஷம், மாலைப் பிரதோஷம் முதல் வழிபாடு தொடங்க வேண்டும்.
    • இவ்வாறு பூஜை செய்ய முடியாதவர்கள் பிறர் செய்வதைக் கண்டு கேட்டுத் தரிசிக்கலாம்.

    சிவராத்திரி அன்று மாலையில் பிரதோஷம், மாலைப் பிரதோஷம் முதல் வழிபாடு தொடங்க வேண்டும்.

    சிவராத்திரிக்கு முந்தைய மாலை காலத்தை நடராஜ் மூர்த்தியையும் பிரதோஷ நாயகரையும் வழிபட வேண்டும்.

    பிரதோஷ நேரத்தில் இறைவனைத் தரிசித்தது முதல் கோவிலிலேயே இருந்து கொண்டு சிவ சிந்தையுடனே ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையாக பூஜை செய்ய வேண்டும். பிறர் செய்வதைக் காண வேண்டும்.

    1. இரவின் முதல் காலம்: (ஜாமம்) சோமஸ்கந்தரை வழிபட வேண்டும். அப்போது பஞ்சகவ்ய அபிஷேகம் சிறந்தது. ரிக்வேதம் ஓத வேண்டும்.

    2. இரண்டாம் காலம்: தென் முகக் கடவுளாகிய தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். சிவலிங்கத்திற்கு தேன், சர்க்கரை, தயிர், பால், நெய் கலந்த பங்சாமிர்த அபிஷேகம் செய்வது மிகச் சிறந்தது. யசூர் வேதம் ஓத வேண்டும்.

    3. மூன்றாம் காலம் : லிங்கோற்பவரை வழிபடுவது சிறப்பு. திருவண்ணாமலையில் இந்த மூன்றாம் காலத்தில் தான் (ஜாமத்தில்) லிங்கோற்பவ உற்பத்தி ஆயிற்று என்று புராணம் சொல்லுகிறது.

    4. நான்காம் காலம் : சிவராத்திரி நான்காம் காலத்தில் கருப்பஞ்சாறு அபிஷேகம் செய்வது சிறப்பு. கஸ்தூரி மேல் பூச்சாக பூசலாம். பச்சை ஆடை அணிவிக்கலாம். திரநாவுக்கரசர் பாடலைப் பாடலாம். அதர்வண வேதம் ஓதுதல் சிறந்தது.

    இவ்வாறு பூஜை செய்ய முடியாதவர்கள் பிறர் செய்வதைக் கண்டு கேட்டுத் தரிசிக்கலாம்.

    • சிவபெருமானுக்கு நல்ல தூய்மை ஆன ஆடையை அணிவிக்க வேண்டும்.
    • விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும்.

    1. சிவபெருமானைத் தீர்த்தவாரி செய்ய வேண்டும். (நீராட்டல்)

    2. மணம் மிகுந்த மலரைச் சிவபெருமானின் உச்சிமுதல் திருத்தாள் வரைத் தூவ வேண்டும். தூவும் பொழுது நமச்சிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.

    3. ஓதிக் கொண்டே வலம் வர வேண்டும். வணக்கம் செலுத்த வேண்டும்.

    4. சிவாலயங்களைச் சாணமிட்டு அலகிட்டு (துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை செய்து கோலமிடுதல்) வாழ்த்த வேண்டும்.

    5. நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும்.

    6. சிவபெருமானுக்கு நல்ல தூய்மை ஆன ஆடையை அணிவிக்க வேண்டும்.

    7. எருக்க மலர் மாலைகளைப் பெருமான் தலையில் வட்டமாக அணிய வேண்டும்.

    8. சிவதண்டமான கட்டங்களும், (மழுவாயுதம்) கபாலமும் ஏத்தி அவன் புகழைப் பாட வேண்டும்.

    9. அஷ்டங்க நமஸ்காரம் ஆண்கள் செய்ய வேண்டும், பெண்கள் ஐந்தங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    10. விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும்.

    இவ்வாறு லிங்க புராணம் கூறுகிறது.

    • எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.
    • சிவராத்திரியன்று திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவி கிடையாது.

    1. சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது.

    2. சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும்.

    3. சூரியன், முருகன், மன்மதன், இந்திரன், எமன், சந்திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றுள்ளனர்.

    4. சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம்.

    5. எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.

    6. சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ.... என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்.

    7. சிவராத்திரியன்று திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவி கிடையாது.

    8. சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.

    9. கஞ்சனூரில் ஒரே பிரகாரத்தில் அடுத்தடுத்து 2 தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். சிவராத்திரியன்று இவர்களை வழிபட்டால், சிவஞானம் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    10. சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.

    11. திருவதிகை தலத்தில் உள்ள வீராட்டானேஸ்வரரை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால் ஆணவம், கர்மம், மாயை ஆகிய மூன்றும் நீங்கும்.

    12. பண்டரிபுரத்தில் உள்ள பாண்டு ரங்கன் "சங்கர நாராயண" வடிவம் என்பார்கள். பாண்டுரங்கன் தலையில் கிரீடத்துக்கு பதில் "பாண லிங்கம்" இடம் பெற்றுள்ளது. சிவராத்திரி தினத்தன்று பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்வதில்லை. அவரும் அன்று சிவராத்திரி விரதம் இருப்பதாக சொல்கிறார்கள்.

    13. மகா சிவராத்திரி தினத்தன்று அபிஷேகத்துக்கு உரிய பொருட்களை வாங்கி ஆலயத்துக்கு கொடுப்பவர்கள் பரமானந்த நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம்.

    14. ஊத்துக் கோட்டை அருகில் உள்ள சுருட்டப்பள்ளியில் மட்டுமே சயன கோலத்தில் ஈசன் உள்ளார். சிவராத்திரி தினத்தன்று அங்கு ஈசனை வெள்ளி அங்கியில் தரிசனம் செய்யலாம்.

    15. சிவராத்திரி தினத்தன்று சிவபுராணம், தேவாரம் மற்றும் திருமுறைகள் படிப்பது மிகவும் நல்லது.

    16. திருவைகாவூர் ஈசனை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால், மரண பயம் நீங்கும்.

    17. கருட புராணம், கந்தபுராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் சிவராத்திரி மகிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

    18. சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.

    19. ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் ª¢சய்த பலனும் தரவல்லது.

    20. சிவராத்திரியன்று கலச பூஜையுடன் லிங்கமும் வைத்து வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.

    • நந்திதேவருக்கு கோபம். ஒருவனை வேடனாகவும், இன்னொருவனை பூனையாகவும் மாற்ற சாபம் கொடுத்தார்.
    • இருவரும் அப்படியே மாறி வில்லிவாக்கம் என்ற கிராமத்தை அடைந்தனர்.

    நந்திகேஸ்வரரின் வேலையாட்கள் மகா காந்தன், காந்தன், சிவபூஜைக்காக பூலோகம் சென்று கொன்றை மலர்களை பறித்துவர சொன்னார் நந்தி.

    பூலோகம் வந்த இருவரும் வேலையை மறந்து நந்தவன நிழலில் படுத்து தூங்கி விட்டனர்.

    நந்திதேவருக்கு கோபம். ஒருவனை வேடனாகவும், இன்னொருவனை பூனையாகவும் மாற்ற சாபம் கொடுத்தார்.

    இருவரும் அப்படியே மாறி வில்லிவாக்கம் என்ற கிராமத்தை அடைந்தனர்.

    பூனையை ஒரு வேடன் துரத்தினான்.

    பயந்து ஓடிய பூனை அருகிலிருந்த சிவன் கோவிலுக்குள் புகுந்து லிங்கத்தை கட்டிக் கொண்டது.

    வேடனின் அம்பு சிவலிங்கம் மீது பட்டு ரத்தம் கொட்டியது. பூனை பயந்து தீர்த்த குளத்துக்கு ஓடியது.

    சிவனை காயப்படுத்தி விட்டோமே என்று கவலை அடைந்த வேடனும் தீர்த்தத்தில் நீராடி சிவனிடம் மன்னிப்பு கேட்க வந்தான்.

    ஒரே சமயத்தில் வேடன் ஒரு பக்கம், பூனை ஒரு பக்கம் குளத்தில் மூழ்கி எழுந்திருக்க.,

    இருவரும் மீண்டும் மகாகாந்தன், காந்தன் ஆக மாறினார்.

    சிவராத்திரி தினமான அந்நாளில் இறைவனுக்கு பூ, பழங்களை படைத்து வணங்கினார்.

    • மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.
    • அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.

    மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும்.

    காரிய வெற்றியும் ஏற்படும். 'சிவாய நம' என்று சிந்தித்திருந்தால் 'அபாயம்' நமக்கு ஏற்படாது, 'உபாயம்' நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

    அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.

    பொருளாதார நிலையும் உயரும்.

    ஒரு நாள் முழுவதும்,ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிப்பட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில்

    அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும்.

    அதனால் தான் "சிவராத்திரி" விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது.

    • மானின் பேச்சைக் கேட்ட குருத்ருகன் அம்பு தொடுப்பதை நிறுத்தினான்.
    • வேடன் அமர்ந்திருந்த மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருந்தது.

    குருத்ருகன் என்ற வேடனின் குடும்பம் ஒருநாள் முழுவதும் உணவின்றி வாட நேர்ந்தது.

    அதனைக் கண்ட குருத்ருகன் வில்லை எடுத்துக் கொண்டு வேட்டைக்கு புறப்பட்டான்.

    காட்டில் விலங்குகளைத் தேடி அலைந்தான்.

    அன்று பகல் முழுவதும் விலங்குகள் எதுவும் அவன் கண்ணில் படவில்லை.

    அந்திசாயும் நேரத்தில் ஒரு தடாகத்தின் கரையை அடைந்தான்.

    நீர் பருகி, தாகத்தை தீர்த்துக் கொண்டான்.

    இரவு வேளையில் அத்தடாகத்தில் நீர் பருக எப்படியும் விலங்குகள் வரும் என்று நம்பினான்.

    தன்னிடம் இருந்த ஒரு குடுவையில் நீரை எடுத்துக் கொண்டு, தடாகத்தின் கரையில் இருந்த ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்தான்.

    விலங்குகளின் வருகைக்காகக் காத்திருந்தான்.

    அவன் எதிர்பார்த்தபடி, முதல் யாமத்தில் ஒரு பெண்மான் நீர் பருக வந்தது.

    அதன் மீது அம்பு தொடுக்க முற்பட்டான்.

    அந்த அசைவினால், மரத்தின் இலைகள் உதிர்ந்தன.

    குடுவை நீரின் ஒரு பகுதியும் கீழே விழுந்தது.

    தனக்கு வரவிருந்த ஆபத்தைப் பெண்மான் உணர்ந்தது.

    வேடனை நோக்கி, "ஐயா! சற்று நான் சொல்வதைக் கேளுங்கள்" என்றது.

    மானின் பேச்சைக் கேட்ட குருத்ருகன் அம்பு தொடுப்பதை நிறுத்தினான்.

    "ஐயா! உங்கள் குடும்பத்தினரின் பசியைத் தீர்க்க என் உடல் பயன்படப் போவதை எண்ணி மிக்க மகிழ்ச்சி.

    நீங்கள் எனக்குச் சிறிது நேரம் கொடுக்க வேண்டும்.

    எனக்குக் குட்டிகள் உள்ளன.

    அவற்றைக் காப்பாற்றும் வகையில், மற்றொரு பெண்மானை என் கணவருக்குத் துணையாக்கி விட்டு, உடனே வந்து விடுகிறேன்.

    அதன் பிறகு, என்னை வேட்டையாடலாம்" என்றது அப்பெண்மான்.

    முதலில் மானின் வார்த்தைகளை நம்ப மறுத்த வேடன், பிறகு மானின் உறுதிமொழியைக் கேட்டு, அதனைச் செல்ல விடுத்தான்.

    இரண்டாவது யாமத்தில் அப்பெண்மானின் சகோதரியாகிய மற்றொரு மான் வந்தது.

    அதனை வேட்டையாட முற்பட்டான் குருத்ருகன்.

    "ஐயா! எனது குட்டிகளைக் காப்பாற்றும் பொறுப்பை என் கணவரிடம் ஒப்படைத்து விட்டு உடனே வந்துவிடுவேன்,

    இது உறுதி" என்றது இரண்டாவது மான்.

    அதன் உறுதிமொழியை நம்பிய வேடன் அதனையும் செல்ல விடுத்தான்.

    மூன்றாவது யாமத்தில் ஆண்மான் "நாங்கள் ஒருவரை ஒருவர் தேடி வந்தோம். எனினும், ஒருவரை ஒருவர் சந்திக்க இயலவில்லை.

    சிறிது நேரம் கொடுங்கள், என் குட்டிகளை அவற்றின் தாய்களிடம் ஒப்படைத்து, உடனே வந்து விடுகிறேன், இது உறுதி என்றது ஆண் மான்.

    அந்த ஆண் மானையும் சென்றுவர விடுத்தான் வேடன்.

    நான்காம் யாமம் வந்தது.

    இரண்டு பெண் மான்களும், ஆண் மானும் ஆக மூன்று மான்களும் தடாகத்தின் கரைக்கு வந்தன.

    மூன்று மான்களையும் வேட்டையாட அம்பு தொடுக்க முயன்றான்.

    அப்போதும், குடுவை நீர் சிறிது விழுந்தது. மரத்தின் இலைகளும் விழுந்தன.

    இச்சம்பவம் நடந்தது ஒரு சிவராத்திரி நாள்.

    வேடன் அமர்ந்திருந்த மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருந்தது.

    நான்கு யாமங்களிலும் உதிர்ந்த மர இலைகள் வில்வதளங்கள்!

    அவ்வாறே, நான்கு யாமங்களிலும் குடுவையில் இருந்த நீர் கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தது.

    குருத்ருகன், சிவராத்திரி நாளில், உண்ணாமல் இருந்து, நீர் ஊற்றி அபிஷேகம் செய்து,

    வில்வர்ச்சனை செய்ததாக எண்ணிய சிவபெருமான் அவ்வேடனுக்குப் பெரும்பேறு அளித்தான்.

    இவ்வரலாறு சிவமகாபுராணத்தில் இடம் பெற்றுள்ளது.

    நாமும் சிவராத்திரி நாளில் ஈசனை வழிபட்டுப் பேரருள் பெறுவோம்.

    பூக்களை முழுதாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, கிள்ளி பொடிப்பொடியாக்கி வழிபாடு செய்தல் கூடாது.

    பூஜைக்கு ஆகாத பூக்கள்

    அசுத்தமான கைகளினால் தொட்டு பறிக்கப்பட்டது. கொண்டுவரப்பட்டது. தானாக விழுந்தது, காய்ந்தது, மற்றவர்களினால் முகர்ந்து பார்க்கப்பட்டது. அசுத்தமான இடங்களில் மலர்ந்தது, அசுத்தமான கூடையில் வைத்து கொண்டுவரப்பட்டது போன்ற புஷ்பங்களை பகவானுக்கு அர்ப்பணிக்கக்கூடாது.

    பறித்த பிறகு மலர்ந்து பூக்கள், வாடிப்போன பூக்கள் பழைய பூக்கள், ஆமணக்கு இலையில் கட்டி வைத்த பூக்கள், பூச்சிகள் கடித்த பூக்கள், சிலந்தி இழை சுற்றிய பூக்கள், பறவைகள் எச்சமிட்ட பூக்கள், முடிக்கற்றை பட்ட பூக்கள், இரவு நேரத்தில் பறித்த பூக்கள், தண்ணீரில் முழுகிய பூக்கள் ஆகியவை பூஜைக்கு ஆகாத பூக்கள்.

    தற்போது பலர் கைகளில் மலர்களை எடுத்து அவற்றை துண்டு துண்டாக்கி கைகளினால் கிள்ளி பூஜை செய்கின்றனர். இது மிகவும் தவறானது.

    பூக்களை முழுதாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, கிள்ளி பொடிப்பொடியாக்கி வழிபாடு செய்தல் கூடாது. வில்வ இலை, துளசி இலை ஆகியவற்றை தளமாகச் சாத்த வேண்டும்.

    தெய்வங்களுக்கு ஆகாத மலர்கள்

    அட்சதை வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியன விஷ்ணுவுக்கு ஆகாதவை, செம்பரத்தை, தாழம்பூ குந்தம், கேசர, குடஜமம், ஜபாபுஷ்பம் ஆகியவை சிவபெருமானுக்கு ஆகாதவை.

    அறுகு வெள்ளெருக்கு மந்தாரம் இவை அம்மனுக்கு ஆகாதவை. வில்வம் சூரியனுக்கு ஆகாது. துளசி விநாயகருக்கு கூடாது. பவழமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்வது கூடாது.

    விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தினால் அர்ச்சனை செய்யலாம். அது போல சிவசம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே வில்வ தளத்தினால் அர்ச்சனை செய்யலாம்.

    துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக பூஜைக்கு உபயோகிக்கக் கூடாது. அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்துவது நல்லது. ஒருமுறை இறைவனின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை மறுபடியும் எடுத்து மீண்டும் அர்ச்சனை செய்வது கூடாது.

    வில்வம் துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.

    சமபகமாட்டு தவிர வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

    முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு மிகவும் உகந்தவை. துளசி, மகிழம், சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, நாயுருவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உகந்தவை.

    கடம்பம், ஊமத்தை, ஜாதி ஆகிய பூக்களை இரவில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். இதுபோலவே தாழம்பூஜை அர்த்த ராத்திரி பூஜைகளில் மட்டுமே உபயோகிக்கலாம். பகல் காலங்களில் விலக்க வேண்டும்.

    குருக்கத்தி, ஆனந்ததிதா, மதயந்திகை, வாகை, ஆச்சா, உச்சித்திலகம், ஆமல், மாதுளை, தென்னை, நீர்த்திப்பிலி, பருத்தி, குமிழம், இலவு, பூசனி, மலைஆல், பொன்னாங்கண்ணி, விளா புளி ஆகியவற்றின் பூக்கள் பூஜைக்கு ஆகாதவை.

    விலக்கப்பட்ட பூக்களை அலங்காரம் செய்வதற்கு உபயோகித்துக் கொள்ளலாம்.

    ×