search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water level reduced"

    கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 122 அடியாக குறைந்துள்ளது. #MullaperiyarDam
    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை கைகொடுத்த நிலையில் வைகை, முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டமும் சரிய தொடங்கியுள்ளது.

    தற்போது பனியின் தாக்கம் அதிகரித்து வருவதால் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை.

    கூடலூர், கம்பம், லோயர்கேம்ப் உள்ளிட்ட இடங்களில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் காலை 10 மணிவரை வெளியேற பொதுமக்கள் தயங்கி வருகின்றனர். மேலும் மழை இல்லாததால் முல்லைபெரியாறு அணைக்கு 132கனஅடி நீரே வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 122.25 அடியாக குறைந்துள்ளது.

    900கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 2-ம் போக சாகுபடிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் நீர்திறப்பை குறைக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இருந்தபோதும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 56.25 அடியாக உள்ளது. 630 கனஅடிநீர் வருகிறது. மதுரைமாநகர குடிநீருக்காக 60 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46.40 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 111.68 அடியாக உள்ளது. 9 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை. #MullaperiyarDam
    ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் 5½ அடியாக குறைந்ததால் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
    செம்பட்டி:

    மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, ஆடலூர், பன்றிமலை, பண்ணைக்காடு, புல்லாவெளி, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, சோலைக்காடு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் ஓடைகள் வழியாக மலையடிவாரத்தில் உள்ள ஆத்தூர் காமராஜர் அணைக்குவருகிறது.

    இந்த அணையில் இருந்து திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அணை நிரம்பி மறுகால் பாய்ந்தது.

    தற்போது பண்ணைக்காடு, தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை பகுதிகளில் பருவமழை முறையாக பெய்யவில்லை. இதனால் ஆத்தூர் காமராஜர் அணைக்கு நீர்வரத்து இல்லை. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 5½ அடியாக காணப்பட்டது. இதனால் அணை குட்டைப்போல் காட்சியளிக்கிறது. இதனால் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. 
    ×