என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
122 அடியாக குறைந்த பெரியாறு அணை நீர்மட்டம்
Byமாலை மலர்3 Jan 2019 11:45 AM GMT (Updated: 3 Jan 2019 11:45 AM GMT)
கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 122 அடியாக குறைந்துள்ளது. #MullaperiyarDam
கூடலூர்:
தென்மேற்கு பருவமழை கைகொடுத்த நிலையில் வைகை, முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டமும் சரிய தொடங்கியுள்ளது.
தற்போது பனியின் தாக்கம் அதிகரித்து வருவதால் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை.
கூடலூர், கம்பம், லோயர்கேம்ப் உள்ளிட்ட இடங்களில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் காலை 10 மணிவரை வெளியேற பொதுமக்கள் தயங்கி வருகின்றனர். மேலும் மழை இல்லாததால் முல்லைபெரியாறு அணைக்கு 132கனஅடி நீரே வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 122.25 அடியாக குறைந்துள்ளது.
900கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 2-ம் போக சாகுபடிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் நீர்திறப்பை குறைக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இருந்தபோதும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 56.25 அடியாக உள்ளது. 630 கனஅடிநீர் வருகிறது. மதுரைமாநகர குடிநீருக்காக 60 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46.40 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 111.68 அடியாக உள்ளது. 9 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை. #MullaperiyarDam
தென்மேற்கு பருவமழை கைகொடுத்த நிலையில் வைகை, முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டமும் சரிய தொடங்கியுள்ளது.
தற்போது பனியின் தாக்கம் அதிகரித்து வருவதால் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை.
கூடலூர், கம்பம், லோயர்கேம்ப் உள்ளிட்ட இடங்களில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் காலை 10 மணிவரை வெளியேற பொதுமக்கள் தயங்கி வருகின்றனர். மேலும் மழை இல்லாததால் முல்லைபெரியாறு அணைக்கு 132கனஅடி நீரே வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 122.25 அடியாக குறைந்துள்ளது.
900கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 2-ம் போக சாகுபடிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் நீர்திறப்பை குறைக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இருந்தபோதும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 56.25 அடியாக உள்ளது. 630 கனஅடிநீர் வருகிறது. மதுரைமாநகர குடிநீருக்காக 60 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46.40 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 111.68 அடியாக உள்ளது. 9 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை. #MullaperiyarDam
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X