search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Somanatha Swami Temple"

    • 2-வது நாளான நேற்று காலையில் சோமாஸ்கந்தர், சோமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது.
    • மாலையில் சோமநாத சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அம்பாளுக்கு தோள் மாலை மாற்றுதல் நடைபெற்றது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமு கநேரி சோம சுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவி லில் ஐப்பசி திருக்கல்யா ண விழா கடந்த 7-ந்தேதி முகூர்த்த கால் நாட்டுத லுடன் தொடங்கியது.

    முன்னதாக விநாயகர் பூஜை நடந்தது. மாலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், திருகாப்பு கட்டுதல் மற்றும் தீபாரதனை நடைபெற்றன.

    2- வது நாளான நேற்று காலையில் சோமாஸ்கந்தர், சோமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக தீபாரா தனை நடந்தது. பின்னர் சோமசுந்தரி அம்பாள் தவக்கோலத்தில் பூஞ்சப்ப ரத்தில் எழுந்தருளி தபசு மண்டபத்தில் அருள் பாலித்தார்.

    மாலையில் சோமநாத சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அம்பாளுக்கு தோள் மாலை மாற்றுதல் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி- அம்பாளுக்கு சேர்க்கை தீபாராதனையும், கதிர் குளிப்பு அபிஷேகமும் நடந்தன.

    பின்னர் மங்கல வாத்தி யம் முழங்க அம்பாளுக்கு சுவாமி திருமாங்கல்யம் பூட்டுதல் நடைபெற்றது. பூஜை வைபவங்களை ஆலய பூஜகர் அய்யப்ப பட்டர், சண்முகம் பட்டர், பிரகாஷ், விக்னேஷ், விஜய், ஓதுவார்கள் சங்கர நயினார், தெரிசை அய்யப்பன், இளைய பெருமாள் குழு வினர் செய்திருந்தனர். மண்டகப்படிதாரர்கள் அரிகிருஷ்ணன், பூபால் ராஜன், தியாகராஜன், பேராசிரியர் அசோக்குமார், தங்கபாண்டியன், பால விக்னேஸ்வரன், அபிஷேக், கீழவீடு பாஸ்கர், முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்ராஜ், ஜீவா, அனந்த நாராயணன், விநாயக மூர்த்தி, சுவாமி முருகன், டாக்டர் வேல்குமார், சுப்பிர மணியன், அய்யப்பன் மற்றும் தங்கமணி, அமிர்த ராஜ், சைவ வேளாளர் சங்க நிர்வாகிகள் சங்கரலிங்கம், நடராஜன், கற்பக விநாயகம், நடராஜ தேவார பக்த ஜன சபை செயலாளர் ராமச் சந்திரன், மோகன், சேகர், ஐகோர்ட் துரை உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று காலையில் அபிஷேகம் மற்றும் பட்டின பிரவேசம் நடைபெற்றது. தொடர்ந்து 3 நாட்கள் பொன்னூஞ்சல் நடை பெறுகிறது. நிறைவாக தீபாவளியன்று காலை சுவாமி- அம்பாளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், மாலையில் பூஞ்சப்பரபவனி, பைரவர் பூஜை ஆகியவையும் நடைபெறுகின்றன.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் மணியம் சுப்பையா செய்து வருகிறார்.

    • நடராஜருக்கு ஆண்டு ஒன்றிற்கு ஆறு முறை அபிஷேகங்கள் நடைபெறும்.
    • அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

     ஆத்தூர்:

    ஆத்தூர் ஸ்ரீசோமநாத சுவாமி சமேத ஸ்ரீசோமசுந்தரி அம்பாள் கோவிலில் நடராஜர் அபிஷேகம் நடைபெற்றது. சைவ சமய ஆகமங்களின் படி நடராஜருக்கு சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி மற்றும் மாசி வளர்பிறை சதுர்த்தசி என ஆண்டு ஒன்றிற்கு ஆறு முறை அபிஷேகங்கள் நடைபெறும்.

    புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி தினமான நேற்று ஶ்ரீ சோமநாத சுவாமி சமேத ஶ்ரீ சோமசுந்தரி அம்பாள் கோவில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலை யாகசாலை பூஜை நடைபெற்றது, நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படி தாரர் விஜயலெட்சுமி நயினார்குல சேகரன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • விழா நாட்களில் தினசரி மாலையில் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
    • 9-வது நாள் காலையில் சுவாமி பிக்சாடன கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது.

    ஆறுமுகநேரி:

    திருவாவடுதுறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ சோமநாத சுவாமி கோவிலின் ஆனி உத்திர திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.

    பச்சை சாத்தி சப்பர பவனி

    விழா நாட்களில் காலை, மாலை, சப்பரபவனி நடந்தது. தினசரி மாலையில் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    7-ம் நாள் திருவிழா அன்று நடராஜர், சிவகாமி அம்பாள் சிவப்பு பட்டு அணிந்து, செம்மலர் சூடி ருத்ரசொரூபமாக சிவப்பு சாத்தி சப்பரபவனி நடைபெற்றது.

    மறுநாள் காலையில் நடராஜமூர்த்தி வெள்ளைபட்டு உடுத்தி, வெண்மலர் சூடி பிரம்மா சொரூபமாக வெள்ளை சாத்தி பவனியும் இரவில் நடராஜர் மகாவிஷ்ணு சொரூபமாக பச்சை சாத்தி சப்பர பவனியும் நடைபெற்றது.

    9-வது நாள்

    9-வது நாள் காலையில் சுவாமி பிக்சாடன கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகள் டி.சி. டபிள்யூ நிறுவனம் சார்பில் செய்யப்பட்டது. நிறைவு நாளான நேற்று காலை சுவாமி, அம்பாள் பூஞ்சப்பர பவனியும். தீர்த்தவாரி அபிஷேகமும் நடந்தன. மதியம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

    இரவில் சிறப்பு தீபாராதனையை தொடர்ந்து 5 சப்பரங்களின் பவனி தொடங்கியது. இதன்படி மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் சுப்பிரமணியரும், ரிஷப வாகனத்தில் அம்பாள் சகித சோமாஸ்கந்த மூர்த்தியும், மற்றொரு ரிஷப வாகனத்தில் பிரியாவிடை அம்பாளும், சப்பரத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினர்.

    வாத்தியங்கள் முழங்க....

    மேளதாளம் மற்றும் திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க 5 சப்பரங்களின் பவனி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. சப்பரம் சுமந்த சீர்பாத குழுவினர் 30 பேரை தொழிலதிபர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் கவுரவித்தார். பின்னர் சுவாமி. அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நிறைவாக சண்டிகேஸ்வரர் பூஜையும், பைரவர் பூஜையும் நடைபெற்றது. பூஜைகளை ஆலய பூஜகர் அய்யப்ப பட்டர் நடத்தினார்.

    நிகழ்ச்சிகளில் அரிகிருஷ்ணன், தெரிசை அய்யப்பன், தொழிலதிபர்கள் பூபால்ராஜன், தியாகராஜன், பேராசிரியர் அசோக்குமார், தங்கமணி, அமிர்தராஜ், நடராஜன், கீழவீடு பாஸ்கர், கார்த்திகேயன், சிவராஜ், ராதா அம்மாள், 5-வது வார்டு கவுன்சிலர் தமயந்தி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவசங்கரி, விஜிலா, கற்பக விநாயகம்,

    சங்கரலிங்கம், இளையபெருமாள், தவமணி, சேகர், முத்துச்சாமி, ராஜாமணி, அழகேசன், அனந்த நாராயணன், கந்தசாமி பாண்டியன், சிவகுமார், வெற்றிவேல், சுடர்மாரி, கந்தபழம், காந்தி ராமசாமி, ஐகோர்ட் துரை, வனகுமார், சிவன் பாய்ஸ் குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா பிள்ளை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • 2-வது நாளான நேற்று காலை யாக பூஜையை தொடர்ந்து சுவாமி, அம்பாள் பூஞ்சப்பர பவனி நடந்தது.
    • நந்தினி சீனிவாசன் முன்னிலையில், சாகுபுரம் மகளிர் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவில் ஆனி உத்திர திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    2-வது நாளான நேற்று காலை யாக பூஜையை தொடர்ந்து சுவாமி, அம்பாள் பூஞ்சப்பர பவனி நடந்தது. இரவில் 5 சப்பரங்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், சோமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் எழுந்தருளல் நடந்தது. இந்த 5 சப்பரங்களின் பவனியை சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். முன்னதாக நந்தினி சீனிவாசன் முன்னிலையில், சாகுபுரம் மகளிர்

    குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    நிறைவாக சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பூஜை வைப வங்களை அய்யப்ப பட்டர் நடத்தினார்.இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் சார்பில் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் கோவில் மணியம் சுப்பையா, டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் உதவி தலைவர் சுரேஷ், ஓதுவார் சங்கர நயினார், தெரிசை அய்யப்பன், தங்க மணி, ராஜாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×