search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chappara Bhavani"

    • இந்த ஆண்டு ஆடி மாத திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • நேற்று காலை 11 மணிக்கு நாராயணருக்கு சிறப்பு பூஜையும், மாலையில் தீர்த்தவாரியும் நடைபெற்றது.

    முக்கூடல்:

    முக்கூடல் நகரில் அமைந்துள்ள நாராயணசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடக்கும். இந்த ஆண்டு ஆடி மாத திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் இரவு அன்னதானம், சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. நேற்று 9-வது நாள் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி காலை 11 மணிக்கு நாராயணருக்கு சிறப்பு பூஜையும், மாலையில் தீர்த்த வாரியும் நடைபெற்றது.

    தொடர்ந்து இரவில் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நாராயணர் செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தார். நாராயணரின் சப்பரத்தின் முன்பாக சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய வேடங்களை உயரமாக அமைத்து ஆடி, பாடி வந்தனர். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். நேற்று முக்கூடல் முத்தமிழ் பேரவையின் இலக்கிய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • 2-வது நாளான நேற்று காலை யாக பூஜையை தொடர்ந்து சுவாமி, அம்பாள் பூஞ்சப்பர பவனி நடந்தது.
    • நந்தினி சீனிவாசன் முன்னிலையில், சாகுபுரம் மகளிர் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவில் ஆனி உத்திர திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    2-வது நாளான நேற்று காலை யாக பூஜையை தொடர்ந்து சுவாமி, அம்பாள் பூஞ்சப்பர பவனி நடந்தது. இரவில் 5 சப்பரங்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், சோமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் எழுந்தருளல் நடந்தது. இந்த 5 சப்பரங்களின் பவனியை சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். முன்னதாக நந்தினி சீனிவாசன் முன்னிலையில், சாகுபுரம் மகளிர்

    குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    நிறைவாக சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பூஜை வைப வங்களை அய்யப்ப பட்டர் நடத்தினார்.இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் சார்பில் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் கோவில் மணியம் சுப்பையா, டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் உதவி தலைவர் சுரேஷ், ஓதுவார் சங்கர நயினார், தெரிசை அய்யப்பன், தங்க மணி, ராஜாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முத்துகிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை கொடை விழா யாக பூஜையுடன் தொடங்கி 8 நாட்கள் நடைபெற்றது.
    • இரவில் சாம பூஜையை தொடர்ந்து அம்மனின் சிம்ம வாகனத்தில் சப்பர பவனி நடைபெற்றது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி முத்துகிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை கொடை விழா யாக பூஜையுடன் தொடங்கி 8 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் திருவிளக்கு பூஜை, வில்லிசை, கும்மி அடித்தல், வான வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு நாள் விழா அன்று காலையில் ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் அமைந்துள்ள செந்தில் விநாயகர் ஆலயத்தில் இருந்து அலங்கார யானை முன் செல்ல பால்குட பவனி நடந்தது. இதனை சாகுபுரம் டி.சி.டபுள்யூ நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து அம்மனுக்கு கும்ப பூஜையும், பின்னர் அன்னதானமும் நடைபெற்றன. மதியம் அம்மனுக்கு அபிஷேகம், மஞ்சள் காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தன. தொடர்ந்து சுவாமிகள் மஞ்சள் நீராடி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வருதல், பெண்கள் முளைப்பாரி எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

    இரவில் சாம பூஜையை தொடர்ந்து அம்மனின் சிம்ம வாகனத்தில் சப்பர பவனி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    ×