search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narayanaswamy"

    • இந்த ஆண்டு ஆடி மாத திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • நேற்று காலை 11 மணிக்கு நாராயணருக்கு சிறப்பு பூஜையும், மாலையில் தீர்த்தவாரியும் நடைபெற்றது.

    முக்கூடல்:

    முக்கூடல் நகரில் அமைந்துள்ள நாராயணசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடக்கும். இந்த ஆண்டு ஆடி மாத திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் இரவு அன்னதானம், சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. நேற்று 9-வது நாள் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி காலை 11 மணிக்கு நாராயணருக்கு சிறப்பு பூஜையும், மாலையில் தீர்த்த வாரியும் நடைபெற்றது.

    தொடர்ந்து இரவில் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நாராயணர் செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தார். நாராயணரின் சப்பரத்தின் முன்பாக சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய வேடங்களை உயரமாக அமைத்து ஆடி, பாடி வந்தனர். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். நேற்று முக்கூடல் முத்தமிழ் பேரவையின் இலக்கிய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நிதி முறைகேடு புகார் தொடர்பாக உள்துறை அனுமதி பெற்று கவர்னர் மீது விசாரணை நடத்தப்படும் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். #Narayanasamy #Governor
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமூக பங்களிப்பு நிதிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து தொழிற்சாலைகளிடம் வசூல் செய்யப்பட்டதாக நான் குற்றம்சாட்டியிருந்தேன். அதற்கு கவர்னர் நாங்கள் யாரிடம் இருந்தும் சமூக பங்களிப்பு நிதி வசூலிக்கவில்லை. யாரிடமிருந்தும் பணம் பெறவில்லை என்று கூறியுள்ளார்.

    கவர்னருக்கான பணிகள் என்ன என்று அரசியலமைப்பு சட்டத்திலும், யூனியன் பிரதேச சட்டத்திலும் கூறப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் அதிகாரம், பணிகள் என்ன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. புதுவை அரசு சார்பில் தொழிற்சாலைகளிடம் இருந்து சமூக பங்களிப்பு நிதி பெற ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு தலைவராக முதல்-அமைச்சர் உள்ளார். உறுப்பினர்களாக தலைமை செயலாளர், தொழிலாளர் துறை அதிகாரி, 4 அரசு செயலர்கள் இடம் பெற்றுள்ளனர். சமூக பங்களிப்பு நிதி வழங்க வேண்டும் என விரும்பினால் இந்த குழுவிடம்தான் வழங்க வேண்டும்.

    இந்த குழு நிதியை காசோலையாகவோ, டிராப்ட்டாகவோ, பணமாகவோ பெற்றுக்கொண்டு அதற்கான அத்தாட்சி ரசீதை வழங்கும். இந்த குழுவே அந்த நிதியின் கீழ் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும். திட்டம் முறையாக நிறைவேற்றப்படுகிறதா? என கண்காணிப்பும் செய்யும். இதுதான் சமூக பங்களிப்பு நிதி பெறுவதற்கும், செயல் படுத்துவதற்குமான நடைமுறைகளாகும்.

    ஆனால் கவர்னர் எனது கவனத்திற்கு வராமலேயே கடந்த 24.9.2018 அன்று தொழிற்சாலைகளிடம் இருந்து சமூக பங்களிப்பு நிதி பெற ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். கவர்னர் மாளிகை அதிகாரி ஆஷாகுப்தா, குறைதீர்ப்பு அதிகாரியான போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் ஆகியோர் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்கள் போன்மூலம் பல தொழிலதிபர்களை, தொழிற்சாலைகளை தொடர்புகொண்டு பணம் கேட்டுள்ளனர். இதன்மூலம் சில திட்டங்களை நேரடியாக செயல்படுத்தியுள்ளனர். இதற்கு கவர்னர் மாளிகையே ஒப்பந்ததாரர்களுடன் இணைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கவர்னர் தான் பணம் எதுவும் பெறவில்லை என உண்மைக்கு புறம்பான தகவலை கூறியுள்ளார்.

    அதேநேரத்தில் பாகூரில் ஒரு திட்டத்திற்கு ரூ. ஒரு கோடி வசூலாகும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் ரூ.80 லட்சம் மட்டுமே வசூலாகியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

    சமூக பங்களிப்பு நிதியை பெற கவர்னருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ஒருவர் சமூக பங்களிப்புக்கு நிதி அளித்தால் அவர் வரி கட்டியுள்ளாரா? குற்ற பின்னணி உடையவரா? என்பதை ஆராய்ந்துதான் நிதி பெறுகிறோம். இன்னும் சிலர் அரசிடம் சலுகை பெற இத்தகைய நிதியை தருவார்கள். இதையும் ஆராய்ந்தே நிதி பெற வேண்டும்.

    யார் கொடுத்தாலும் பெற்றுக்கொள்வது நடைமுறைக்கு முரண்பாடானது.

    அரசு கொறடா தொகுதியில் உள்ள ஒரு பள்ளியிலிருந்து ரூ.7 லட்சம் நிதி கவர்னர் மாளிகை பெற்றுள்ளது. இதுபோல எங்கு, எவ்வளவு நிதி பெறப்பட்டது என கவர்னர் மாளிகை தெரிவிக்க வேண்டும். அவர்கள் இதை வெளிப்படையாக தெரிவிப்பார்கள் என நம்புகிறோம்.



    புதுவையின் நீர் ஆதாரத்தை பெருக்கியுள்ளதாக கவர்னர் கூறியுள்ளார். என் மீது முதல்-அமைச்சருக்கு பொறாமை என்றும் கூறியுள்ளார். அவர் மீது நான் பொறாமைப்பட வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. இதுவரை ரூ.85 லட்சம் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளது. யாரிடம், எங்கு பெற்றார்கள் என தெரிவிக்க வேண்டும். இந்த பணிகளுக்கு எந்த அடிப்படையில் ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்? யாருக்கு டெண்டர் கொடுத்தீர்கள்? என தெரிவிக்க வேண்டும்.

    புதுவை அரசின் பொதுப்பணித்துறை ஒரே ஒரு பணியை செய்தததாக தெரிவித்துள்ளனர். மற்ற பணிகளுக்கும், பொதுப் பணித்துறைக்கும் தொடர்பில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    கவர்னர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு இலவசமாக உணவு வழங்க கவர்னர் மாளிகையில் இருந்து போன் செல்கிறது. இதுபோல 100 பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்க 3 ஓட்டல்களுக்கு கவர்னர் மாளிகை உத்தரவு சென்றுள்ளது. ஒரு ஓட்டல் 100 பேருக்கு சாப்பாடு கொடுத்து விட்டனர். மீதமுள்ள 2 ஓட்டல்களில் இருந்து பணம் பெற்றுள்ளனர்.

    இதுபோல கவர்னர் மாளிகை பண வசூல் செய்யும் மையமாக மாறியுள்ளது. கவர்னர் மீது தன்னிச்சையாக எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது. இதனால் உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று கவர்னர் மீது விசாரணை நடத்தவுள்ளோம். இதற்காக உள்துறை அமைச்சகத்திற்கு நான் கடிதம் அனுப்ப உள்ளேன்.

    ஓய்வுபெற்ற அதிகாரி தேவநீதிதாசை தன் ஆலோசகராக நியமிக்க உள்துறைக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் உள்துறை அமைச்சகம் கன்சல்டன்சியாக நியமிக்க கூறியது. இதை மீறி சிறப்பு அதிகாரியாக தேவநீதிதாசை பணி நியமனம் செய்துள்ளார். இதற்கு மத்திய உள்துறை எந்த அனுமதயும் தரவில்லை.

    ஓய்வுபெற்ற அதிகாரி அரசு அதிகாரிகளோடு ஆலோசனை நடத்த முடியாது. அவர்களுக்கு உத்தரவிட முடியாது. ஆனால் தேவநீதிதாஸ் தொடர்ந்து இந்த பணிகளை செய்து வருகிறார். ஆரம்ப காலம் முதல் கவர்னர் மாளிகை விதிகளை மீறி செயல்படுகிறது என கூறி வருகிறோம். தொடர்ந்து விதிகளை மீறியே வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன் ஆகியோர் உடனிருந்தனர். #Narayanasamy #Governor
    கவர்னர் உத்தரவிட்டாலும் அமைச்சர்களை கேட்காமல் பதில் அனுப்பக்கூடாது என்று அதிகாரிகளுக்கு நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். #Narayanasamy

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு துறைகளுக்கான இணை செயலாளரை நேரடியாக துறைகளுக்கு நியமிக்க நேற்றைய தினம் ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது.

    துறை இணை செயலாளர் பதவிக்கு ஐ.ஏ.எஸ். தகுதி பெற்றவர்கள், பதவி உயர்வு மூலம் பல கட்டங்களில் பணியாற்றிய பிறகு இணை செயலாளராவது வழக்கம்.

    ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்றவர்கள் 20 ஆண்டுக்கு பின்னரே இணை செயலாளர் பதவியை அடைய முடியும். ஆனால், மத்திய அரசு வெளிமார்க்கெட்டிலிருந்து நேரடியாக இணை செயலாளர் பதவிக்கு நியமிக்க முடிவு செய்திருப்பது நிர்வாகத்தை சீர்குலைக்க செய்யும். அதிகாரிகளின் பாரம்பரியத்தையும் அழிப்பதாக அமையும்.

    ஏற்கனவே மத்திய அரசு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சி பெறும் காலத்தில் பெறும் மதிப்பெண்ணையும் கணக்கிட்டு பணிகளை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது.

    இதற்கு நாடு முழுவதும் உள்ள முதல்-அமைச்சர்களும், அதிகாரிகளும், மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இணை செயலாளர் பதவியில் இருப்பவர்கள் முதல்-அமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் கோப்புகளை அனுப்பும் நிலையில் இருப்பர். அரசின் கொள்கை முடிவுகள் எடுக்க துணையாக இருப்பர்.

     


    எனவே வெளி மார்க்கெட்டில் இருந்து நேரடியாக நியமனம் செய்வது ஏற்க முடியாதது. மத்திய பா.ஜனதா தொடர்ந்து அரசு அமைப்புகளை சீர்குலைவிற்கு ஆளாக்கும் செயலை செய்து வருகிறது. திட்ட கமி‌ஷனை கலைத்து நிதி அயோக் அமைப்பை ஏற்படுத்தினர்.

    அதேபோல மத்திய அரசின் திட்டங்களை முடக்கம் செய்தனர். சில திட்டங்களுக்கு பெயரை மாற்றி பயன்படுத்தினர். அரசு துறைகளை தங்கள் கட்டுப்பாட்டில் கைப்பாவையாக கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

    சி.பி.ஐ., வங்கிகள், வருவாய்த்துறை ஆகியவற்றை தங்கள் கைக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் தற்போது இணை செயலாளர் பதவியை நேரடியாக நியமிக்க நினைப்பது மத்திய அரசு விதிமுறைகளுக்கு மீறிய செயல்.

    ஏற்கனவே ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்றவர்கள் பயிற்சியின்போது எடுக்கும் மதிப்பெண்ணையும் கணக்கிடும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.

    தற்போது இணை செயலாளர் பதவியை நேரடியாக நியமிக்கவும் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதவுள்ளேன். இத்தகைய நிலைப்பாடு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ். மகத்துவத்தை குறைத்துவிடும்.

    வாட்ஸ்-அப், டுவிட்டர் போன்ற சமூகவலை தளங்களில் அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது ஏற்கத்தக்கதல்ல. அந்த உத்தரவுகளுக்கு அதிகாரிகள் செயல்படக்கூடாது என ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி இருந்தோம்.

    தற்போது மக்கள் வாட்ஸ்-அப் மூலம் புகார் அளித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் கூறியுள்ளார். இது ஏற்கத்தக்கதல்ல. கவர்னர் எழுத்துப்பூர்வமாக உத்தரவு அளித்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், துறை செயலர்கள், தலைமை செயலர், அமைச்சர், முதல்- அமைச்சர் ஒப்புதல் பெற்றே கவர்னருக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

    இதுதான் மாநில நிர்வாகத்தில் நடை முறையாக உள்ளது. வாட்ஸ்-அப் அங்கீகரிக்கப்பட்டதல்ல. வாட்ஸ்அப்பில் பல தவறான தகவல்கள், வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் திருபுவனை கூட்டுறவு வங்கியில் கொள்ளை நடந்தததாக தகவல் வெளியானது.

    இதுகுறித்து விசாரித்த போது வங்கி லாக்கரை உடைக்க முடியாமல் திருடர்கள் தப்பி சென்றதாக தகவல் கிடைத்தது. இத்தகைய தகவல்களை யார் அனுப்புகிறார் என கண்டுபிடிக்க முடிய வில்லை. என்னைப்பற்றியும் தவறான தகவல்கள் பரப்புகின்றனர்.

    இதுதொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டால் அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும் என்கின்றனர். ஏற்கனவே 19 முறை இதுதொடர்பாக கடிதம் மூலமாக கவர்னரிடம் எடுத்துக்கூறியுள்ளேன். கவர்னருக்கு எந்த விளக்கம் அளிக்கும் முன்பும் அமைச்சர்களிடம் ஆலோசனை பெற்றே அதிகாரிகள் விளக்கம் தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளேன். இதை மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Narayanasamy

    ×