என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு
    X

    ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு

    • ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் நாளை இரவு முழுவதும் 4 கால பூஜைகள் நடைபெற இருக்கிறது.
    • பூஜை ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்பாள் கோவிலில் சிவராத்திரி தினமான நாளை( சனிக்கிழமை )இரவு முழுவதும் 4 கால பூஜைகள் நடைபெற இருக்கிறது. மகா சிவராத்திரி முதலாம் கால பூஜை நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி தொடர்ந்து இரண்டாம் காலம், மூன்றாம் காலம் மற்றும் நான்காம் பூஜைகள் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை முதலாம் கால பூஜை மண்டகப்படிதாரர் ராஜாராம், இரண்டாம் கால பூஜை மண்டகப்படிதாரர் அண்ணாமலை சுப்ரமணியன், மூன்றாம் கால பூஜை மண்டகப்படிதாரர் பழக்கடை கணேசன், நான்காம் கால பூஜை மண்டகப்படிதாரர் அய்யம்பெருமாள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×