search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "survey work"

    • மூன்று குழுவாக பிரிந்து சென்று கணக்கெடுத்தனர்.
    • 50 வகை பறவை இனங்களை சேர்ந்த 483 பறவைகள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

    தஞ்சாவூா்:

    தமிழ்நாடு முழுவதும் தரைவாழ் பறவைகளின் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை அருகே உள்ள வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    முன்னாள் மாவட்ட வன அலுவலர் செல்வம் முன்னிலையில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு பணியில் பேராசிரியர்கள் அசோக், கீர்த்திவாசன், ஆசிரியர்கள் சுமதி, வசந்தி, வனத்துறை அலுவலர்கள் ரஞ்சித், இளஞ்செழியன் ஆகியோருடன் தன்னார்வலர்கள், மாணவர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். மூன்று குழுவாக பிரிந்து சென்று கணக்கெடுத்தனர்.

    இந்த கணக்கெடுப்பில் குமரிப்புறா, மாங்குயில், கதிர்குருவி, அரசவால் ஈப்பிடிப்பான் ஆகிய இப்பகுதிக்கான சிறப்பு அரிய வகை பறவைகள், மயில், மாடப்புறா, மணிப்புறா, செண்பகம், சுடலைகுயில், பொன்முதுகு மரங்கொத்தி உள்பட 50 வகை பறவை இனங்களை சேர்ந்த 483 பறவைகள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது. 

    • இரவு அரசு மருத்துவமனை, பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களின் விடுதி உள்ளிட்டவற்றை கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.
    • தொல்காப்பிய குடி ஊராட்சி பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    சீர்காழி:

    தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சீர்காழியில் கடந்த 24 மணி நேர ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று காலை 9 மணிக்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு பணியை தொடங்கினார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்திற்குட்பட்ட வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தது. இரவு அரசு மருத்துவமனை, பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களின் விடுதி உள்ளிட்டவற்றை கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இரவு கொள்ளிடத்தில் தங்கினார்.

    இந்நிலையில் இன்று (1-ந்தேதி) அதிகாலையில் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியினை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    இதைத் தொடர்ந்து முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் கொள்ளிடம் புத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையல் மையத்தில் உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். பின்னர் எருக்கூர் நவீன அரிசி ஆலையில் கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து தொல்காப்பிய குடி ஊராட்சி பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    இந்த ஆய்வில் கோட்டாட்சியர் அர்ச்சனா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கண்மணி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் மஞ்சுளா கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் தியாகராஜன் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழிஉள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் ஆய்வில் உடன் இருந்தனர். 

    • தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.
    • இந்த பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    முதுகுளத்தூர்

    மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்ச கத்தின் வழிகாட்டுதலின் பேரில் மக்களியல் ஆராய்ச்சி மையம், திண்டுக்கல் காந்தி கிராமம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைந்து நடத்தும் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களி லும் தொடங்கப்பட்டுள்ளது.

    அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதிகளில் சுகாதார கணக்கெடுப்பு பணி தொடங்கியது. பேரூ ராட்சி தலைவர் ஷாஜகான் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மாலதி முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் நேதாஜி, கருணாகரசேதுபதி, கிராமப்புற செவிலியர்கள் இந்திரா, சந்தியா மற்றும் களப்பணியாளர்கள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.

    இதில் குடிநீர் வடிகால், வீட்டின் தன்மை, மக்களின் வாழ்வியல், தாய் சேய் நலம், குழந்தை பிறப்பு, இறப்பு, தடுப்பூசி, ஊட்டச்சத்து, கருவறுதல், குடும்ப கட்டுப் பாடு சேவைகள், ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, சுகா தாரம் மற்றும் சமூக நல திட்டங்களின் மதிப்பீடு பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.

    இந்த பணிகள் 4 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • வீடு வீடாக சென்று விவரங்களை சேகரித்தார்
    • அடையாள அட்டை பெற தகுதியுடையவர்களா என ஆய்வு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

    மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணியை துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதில் துறை அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களின் குடும்பத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர் உள்ளனர்.

    அவர்களின் ஊனம் குறித்த தகவல்கள் மேலும் இவர்கள் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்றவர்களா அல்லது அடையாள அட்டை பெற தகுதியுடையவர்களா என்பதை நேரில் ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சி பக்ரிதக்கா பகுதியில் நேற்று வருவாய் கோட்ட அலுவலர் பானு அப்பகுதியில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டார்.

    துறை அலுவலர்களை கண்காணித்து ஆய்வு செய்தார். அப்போது வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து விவரங்களை சேகரித்தார். ஆய்வின்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையில் பணி நடந்து வருகிறது.
    • தேங்கும் தண்ணீர் கிட்டதட்ட 25 கி.மீ., தூரத்துக்கான நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும்.

    அவினாசி :

    கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி அத்திக்கடவு - அவிநாசி திட்டப்ப ணிகள் நிறைவு பெற்று வெள்ளோ ட்டம் பார்க்கப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: - பெருந்துறையில் துவங்கி கோவை மாவட்டம் காரமடை வரை பல்வேறு இடங்களை உள்ளடக்கி 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையில் பணி நடந்து வருகிறது. பவானி ஆற்றில் இருந்து வெளியே காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் உபரிநீர் தான் இத்திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது. நீலகிரி, மாயாறு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்தே உபரி நீர் வெளியேற்றம் அமையும். பருவமழை கைகொடுத்தால் ஆகஸ்டு 15க்கு பிறகு அத்தகைய சூழல் ஏற்படும். அதன்பின் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்.இத்திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை சேர்க்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை அடிப்படையில் பொதுப்பணித்துறையின் திட்ட உருவாக்கப்பிரிவு அதிகாரி தலைமையிலான குழுவினர், கள ஆய்வு நடத்தி திட்டத்தின் இர ண்டாம் கட்ட திட்ட அறிக்கை தயாரித்து வருகி ன்றனர். தற்போது நிறைவேற்றப்பட உள்ள திட்டத்தின் வெற்றியை பொறுத்து இரண்டாம் கட்டத்தை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். இந்நிலையில் அவிநாசி கருவலூர் அருகே பெரிய கானூரில் 148 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த ஏரி உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து கானூர் ஏரி பாதுகாப்பு சங்கம்என்ற அமைப்பை ஏற்படுத்தி குளத்தை ஆக்கிரமித்திருந்த சீமை கருவேலன் மரங்களை அகற்றினர்.குளத்தை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட துறை அதிகாரிகளுக்கு மனு வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டத்தில் சுற்றியுள்ள குளம், குட்டைகளில் வெள்ளோ ட்ட அடிப்படையில் தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையில், பெரிய கானூர் குளத்துக்கு மட்டும் தண்ணீர் திறந்துவிடாமல் இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து கானூர் ஏரி பாதுகாப்பு சங்கத்தினர் கூறியதாவது:-கோவை கவுசிகா நீர் கரங்களுடன் இணைந்து இக்குளத்தை இயன்றளவு பராமரித்துள்ளோம். இதில் தேங்கும் தண்ணீர் கிட்டதட்ட 25 கி.மீ., தூரத்துக்கான நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும். இதன் வாயிலாக சுற்றியுள்ள பஞ்சாயத்துகளில் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வுகிடைக்கும்.கால்நடைகள் மற்றும் பறவைகள்வாயிலாக பல்லுயிர்பெருக்கம் ஏற்படும்.தற்போது பொதுப்பணித்துறை சார்பில் ஏரிக்கரையை பலப்படுத்தும் பணியை நல்ல முறையில் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ்வெ ள்ளோட்ட அடிப்படையில் இதுவரை தண்ணீர் திறந்து விடாதது ஏமாற்றமளி க்கிறது. சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும்.இவ்வாறுஅவர்கள் கூறினர். 

    • ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்யேக எண் வழங்கப்பட்டிருக்கும்.
    • இறுதி கட்ட கணக்கெடுப்பு மே மூன்றாம் வாரத்தில் இருந்து துவங்கப்படும்.

    திருப்பூர்:

    பள்ளிக்கல்வி மேலாண்மை முறைமை (எமிஸ்) மூலமாக தான், மாணவர் சேர்க்கை, ஆசிரியர் கலந்தாய்வு, ஹால்டிக்கெட் வழங்குதல் உட்பட அனைத்து வகையான கல்விசார் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.இதில், ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்யேக எண் வழங்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு செல்ல எமிஸ் எண் பெற்றால் போதுமானது.

    புதிய பள்ளிக்கு மாணவரின் அனைத்து விபரங்களும் பகிரப்படும். டி.சி., பெறாமல் பள்ளிக்கே வராத இடைநிற்றல் மாணவர்களின் விபரங்கள், எமிஸ் பொதுத்தளத்தில் இடம்பெறும். இம்மாணவர்களுக்கும் சேர்த்து ஹால்டிக்கெட் வழங்கியதால் தான் சமீபத்தில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆப்சென்ட் ஆனதாக புகார் எழுந்தது.இந்நிலையில் எமிஸ் பொதுத்தளத்தில் இடம்பெற்ற மாணவர்களின் நிலையை அறிய, பிரத்யேகமாக கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புக்கான செயலியில், இம்மாணவர்களின் தற்போதைய நிலை குறித்து போட்டோக்களுடன் அப்டேட் செய்யப்படுகிறது. மே இறுதியில் இப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், இக்கல்வியாண்டில் இரண்டு முறை கணக்கெடுப்பு நடத்தியதில் தொழில்நுட்ப கோளாறால் பள்ளிக்கல்வியை நிறைவு செய்தோர், 10-ம் வகுப்புக்கு பின் தொழிற்கல்வி சேர்ந்தோர் பெயர்கள், மீண்டும் பொதுத்தளத்தில் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. சிலர் வெளி மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இறுதி கட்ட கணக்கெடுப்பு மே மூன்றாம் வாரத்தில் இருந்து துவங்கப்படும். இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகே பொதுத்தளத்தில் மொத்தம் இடம்பெற்ற மாணவர்கள், அவர்களின் தற்போதைய நிலை குறித்த புள்ளிவிபரங்கள் தெரியவரும் என்றனர்.

    • மதுரை மாவட்டத்தில் சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் ஊரகப்பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சிகளில் வாழும் வீடு இல்லாத ஏழை குடும்பங்களுக்கு வீடு வழங்க பல்வேறு வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆதிதிராவிடர் வீட்டு வசதி, இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் 1985 -86 முதல் 2010-11 வரை கட்டப்பட்ட கான்கிரீட் மேற்கூரை மிகவும் மோசமாக உள்ள வீடுகள், மோசமான நிலையில் வாழ தகுதியில்லாத வீடுகள் கணக்கெடுப்பு இன்று (8-ந் தேதி) முதல் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், சமுதாய வள பயிற்றுநர் மூலம் Repairs to Rural Houses என்ற செல்போன் செயலி வாயிலாக கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

    அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த கணக்கெடுப்பை சிறந்த முறையில் முடிக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணி துவங்கியது, இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, நகராட்சிகளிலும் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    கொரோனா பாதிப்பு குறைந்த பின் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர். மாநில அரசும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுத்து வருகிறது.ஒன்று முதல் பிளஸ் 2 வரை, 100 சதவீதம் மாணவர் சேர்க்கையை உறுதி செய்யவும், தொடர்ந்து அனைவரும் கல்வியை தொடரவும், பள்ளி கல்வித்துறையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

    அவ்வகையில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவரை கண்டறிந்து அவர்களுக்கு ஒருங்கிணைந்த சிறப்பு பயிற்சி மையம் வாயிலாக கல்வி பயில ஏற்பாடு செய்யப்படுகிறது.

    அதன்படி நடப்பாண்டு மொபைல்ஆப் வாயிலாக இக்கணக்கெடுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணி துவங்கியது. இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதற்காக பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர் பயிற்றுனர், கிராம சுகாதார செவிலியர், அங்கன்வாடி பணியாளர், தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தொடர்ந்து ஒரு மாதம் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பள்ளிக்கு செல்லாதவர்கள், இதுவரை பள்ளிக்கே வராத மாணவர்கள், 8-ம் வகுப்புக்கு முன்னரே பள்ளியை விட்டு இடை நின்ற மாணவர்கள் கண்டறியப்படுவர்.இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, நகராட்சிகளிலும் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல ெரயில்வே நிலையம், பஸ் நிலையம், உணவகம், மார்க்கெட், குடிசை பகுதியில் உள்ள குழந்தைகள் மீதும் சிறப்புக்கவனம் செலுத்தப்படும். வருகிற 11-ந்தேதி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.இதற்கு மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • உடுமலை நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • தங்களுடைய வியாபார இடத்துக்கே வந்து புகைப்படம் எடுத்து கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படும்.

    உடுமலை:

    உடுமலை நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இது குறித்து உடுமலை நகராட்சித் தலைவா் மு.மத்தீன், ஆணையா் சத்யநாதன் ஆகியோா் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உடுமலை நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவுற்றவுடன் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டையை அரசின் பல்வேறு உதவித் திட்டங்களுக்கும், பாரத பிரதமரின் சாலையோர வியாபாரிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வங்கியில் கடனுதவி பெறவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    கணக்கெடுப்பு பணிக்கு வியாபாரிகள் தங்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, குடியிருப்பு முகவரி குறித்த ஆதாரத்துடன் தயாா் நிலையில் இருக்குமாறும், தங்களுடைய வியாபார இடத்துக்கே வந்து புகைப்படம் எடுத்து கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படும். மேலும், விவரங்களுக்கு நகரமைப்பு பிரிவிலோ அல்லது சமுதாய அமைப்பாளா்களையோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கற்றல் இழப்பை சரிசெய்ய இல்லம் தேடி கல்வி மூலம் தன்னார்வலர்களை கொண்டு சுமார் 353 மையங்களில் பயிற்சி நடைபெற்று வருகின்றது.
    • 15 வயது முதல் 35 வயது வரை முழுமையாக எழுத,படிக்க தெரியாதவர்கள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்று வருகின்றது.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றியத்தில் கொரோனா காலத்தில் மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரிசெய்ய இல்லம் தேடி கல்வி மூலம் தன்னார்வலர்களை கொண்டு சுமார் 353 மையங்களில் பயிற்சி நடைபெற்று வருகின்றது.

    இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் உத்தரவின் படி 15 வயது முதல் 35 வயது வரை முழுமை யாக எழுத படிக்க தெரியாதவர்கள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்று வருகின்றது. திருமுல்லைவாசல் கடைத்தெரு மற்றும் கடற்கரை பகுதியில் உள்ள மீன் விற்பனை செய்யும் இடத்தில் இதை சார்ந்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இப்பணியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி ஆசிரியர் பயிற்றுநர் ஐசக்ஞானராஜ் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் அருட்செல்வி ஆகியோர் ஈடுபட்டனர்.

    ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளது.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஆண்டு தோறும் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நேற்று தொடங்கியுள்ளது. ராஜபாளையம் அய்யனார் கோவில் பகுதி மற்றும் தேவதானம் சாஸ்தா கோவில் வனப்பகுதிகளில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் கணக்கெடுப்பு பணியில் வன துறையினர் மற்றும் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் குழுவிற்கு 5 நபர்கள் வீதம் 6 குழுக்களாக வன விலங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த குழுவினர் அய்யனார் கோவில், சாஸ்தா கோவில், மலட்டாறு, அம்மன் கோவில் பீட், மாவரசியம்மன் கோவில், நாவலூத்து, கோட்டை மலை, பிறாவடியார், நீராவி அருவி உள்ளிட்ட பகுதிகளில் வன விலங்குகளின் கால் தடங்கள், எச்சம், வகைகளை சேகரித்து வனத்துறை அலுவலகத்திற்கு அறிக்கையாக வழங்குவார்கள். 
    ×