search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டதாரி நிலையிலான தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்
    X

    பட்டதாரி நிலையிலான தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்

    • 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலி யிடங்களை அறி வித்துள்ளது.
    • இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனை வரும் விண்ணப்பிக்கலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது :-

    மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு - 2023 தொடர்பான அறிவிப்பினை கடந்த 3-ந் தேதி வெளியிட்டுள்ளது.

    அதில் மத்திய அரசின் பல்வேறு துறைகள்,நிறு வனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் பி மற்றும் குரூப் சி நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலி யிடங்களை அறி வித்துள்ளது. இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனை வரும் விண்ணப்பிக்கலாம்.

    இப்பணிக்காலி யிடங்க ளுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வா ணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்ப டையிலான இத்தேர்வு களுக்கு உரிய கட்டணத்து டன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2023 மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 04.05.2023 ஆகும். கணினி அடிப்படையிலான தேர்வு, ஜூலை 2023-ல் தமிழ்நாட்டில் 7 மையங்களில் நடைபெற உள்ளது.

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டண மில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன.

    இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பயற்சி வகுப்பு கள் இணையதளத்தில் மற்றும் பதிவேற்ற செய்யப் பட்டு காணொளிகளை கண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது.

    எனவே. இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×