search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Counselling"

    • மண்டபத்தில் தி.மு.க. வார்டு செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பாடுபட அறிவுரை வழங்கப்பட்டது.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., வழிகாட்டுதலின் பேரில் நகர் தி.மு.க. சார்பில் வருகின்ற 2024 நாடாளு மன்ற தேர்தல் தொடர்பான வார்டு செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

    கூட்டத்திற்கு அவைத்தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். பேரூராட்சி கவுன்சிலர் சாதிக் பாட்ஷா வரவேற்றார். கவுன்சிலர்கள் முகமது மீரா சாகிப், வாசிம் அக்ரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மண்டபம் பேரூர் கழக செயலாளர் அப்துல் ரகு மான் மரைக்காயர் கூட்டத் தில் பேசுகையில், ராமநாத புரம் மாவட்டத்தில் வரு கின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு அனைத்து வார்டு செயலாளர்களும் பாடுபட வேண்டும் என்று பேசினார்.மாவட்ட துணை அமைப் பாளர் கே.ஜி.சுகுமார், முன் னாள் பொருளாளர் குலாம், மாவட்ட பிரதிநிதி பகுருதீன், ஐ.டி. விங்க் இளையராஜா, வெள்ளைச்சாமி, பேபி, வார்டு செயலாளர்கள் தில்லை நிஷாந்த், கஜினி, ரவி, களஞ்சியம், கருப்பசாமி உட்பட பலர் பங்கேற்றனர். நிர்வாகி அயுப்கான் நன்றி கூறினார்.

    • நடப்பு மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் முன்னேற்றம் அடைந்ததை ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
    • முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் சுகாதாரத் துறை சார்பில் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது பற்றியும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்தும் கலெக்டர் பழனி அறிவுரை வழங்கினார். ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிகழும் பிரசவங்கள், மக்களை தேடி மருத்துவச் சேவைகள் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை சேவைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரவரிசைகளோடு ஒப்பிட்டு கடந்த மாதத்தை விட நடப்பு மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் முன்னேற்றம் அடைந்ததை ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

    பொது மக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்தும் விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் இதர துறைகளின் ஒத்துழை ப்பு குறித்தும் விவாதித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் செந்தில்குமார், அரசு விழுப்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) கீதாஞ்சலி மருத்துவப் பணிகள் மற்றும் குடும்பநலத் துறை இணை இயக்குநர் லட்சுமணன், நகராட்சி சுகாதார அலுவலர் ஸ்ரீபிரியா மற்றும் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலக இரண்டாம் நிலை அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், முதன்மை மருத்துவ அலுவல ர்கள், சுகாதாரத்து றை அலுவலர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை அலுவலர்கள், மற்றும் முண்டியம்பாக்கம் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஒன்றிய குழு தலைவர் சந்திரன், ஒன்றிய பொறியாளர் அருண் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • பயிர்காப் பீடு திட்டம் மற்றும் ஒன்றிய, மாநில அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மைதுறை, கால் நடைதுறை, ஊராக வளர்ச்சிதுறை ஆகிய துறைகள் இணைந்து விவசாயி களுக்கு ஆலோ சனைகள் நேற்று வழங்கப்ப ட்டது. வேளாண்மை உதவி இயக்குனர் சத்தியபிரகாஷ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, ஒன்றிய குழு தலைவர் சந்திரன், ஒன்றிய பொறியாளர் அருண் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம் வரவேற்றார். இதில் தொழில் நுட்பங்கள் மற்றும் அரசு செயல்படுத்தும் வேளாண் திட்டங்கள் குறித்து விவ சாயிகளுக்கு தெரிவிக்க ப்பட்டது. மேலும், மண்மா திரி சேகரித்தல், மண்வள அட்டை பயன்பாடு குறித்தும், மண்வளம், இணை யதளம் மற்றும் மத்திய மாநில அரசு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது.

    அதேபோல் கால்நடை மருத்துவர் கவிதா கலந்து கொண்டு கோமாரி நோய் தடுப்புமுறை, தடுப்பூசி பயன்பாடு, கால்நடை பராமரிப்பு குறித்து எடுத்து கூறினார். தோட்டக்கலை துறை சார்பில் தோட்டக்க லை உதவி இயக்குனர் சிவாமலை கலந்து கொண்டு நுண்ணீர்பாசனத்தின் முக்கியத்துவம், பயிர்காப் பீடு திட்டம் மற்றும் ஒன்றிய, மாநில அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். விழாவில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பழமர செடி தொகுப்புகள் வழங்கப் பட்டது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலு வலர்கள் ஆரோக்கியசாமி, ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் வேங்கோடு கல்யாணி கிருஷ்ணன், செல்வராஜ், ஆன்டி சீனுவாசன், குப்புசாமி, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சர்க்கரை நோய்களுக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
    • முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை எம்.எல்.ஏ. ஸ்கூல் கல்வி அறக்கட்டளை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் சுவாமிமலையில் நடைபெற்றது.

    முகாமில் மகளிர் சிறப்பு மருத்துவம், உடல் ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்ளிட்டவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும், இதய நோய் மற்றும் சர்க்கரை நோய்களுக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்களின் ஆலோச னைகள் வழங்கப்பட்டது.

    நிகழ்வில் சுவாமிமலை எம்.எல்.ஏ. பள்ளி தாளாளர் எம்.எல்.ஏ. அப்துல் மாலிக் தலைமை தாங்கினார்.

    இஸ்லாமிய நலச்சங்க தலைவர் ஜாஹிர் உசேன், செயலாளர் அப்துல் மாலிக், பொருளாளர் பக்கீர் முகம்மது, பேரூராட்சி உறுப்பினர் பக்ருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர். பாலமுருகன், தணிக்கை துறையின் துணை பொது மேலாளர் காஜா நஜ்முதீன், டாக்டர் குருநாதன் மற்றும் மதுபாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
    • வாகன ஓட்டுனர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஆட்டோ மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகன ஓட்டு நர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்டோ மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகன ஓட்டுனர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்து லட்சுமி, கண்காணிப்பாளர் செந்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் மற்றும் வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ- மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டு முகாம் நடந்தது.
    • உயர் கல்விக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்து வக் கல்லூரி கலையரங்க கூடத்தில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டு தல் முகாம் மற்றும் கடந்த கல்வியாண்டில் 12-ம் வகுப்பு முடித்த உயர்கல்வி யில் சேரும் மாணவர்களுக் கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (சனிக் கிழமை) நடைபெறவுள்ளது.

    பள்ளிக்கல்வித்துறையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள் அவை தொடர்பான வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் களை எளிதில் பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகின்றன.

    மேலும் 12-ம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்தும் நோக்கில், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் வழங்கி தொடர்ச்சியான நட வடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் கடந்த கல்வி யாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இதுவரை கல்லூரி யில் சேர விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கும் வகையிலும், மாணவர்கள் தங்கள் உயர்கல்விக்கு தேவையான ஆலோசனை கள் மற்றும் உதவிகள் பெறு வதற்கும், வருவாய்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் நலத் துறை, பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை கள் ஒருங்கிணைந்து நடத் தும், உயர்கல்விக்கான வழி காட்டுதல் முகாம் மற்றும் கடந்த கல்வியாண் டில் 12-ம் வகுப்பு முடித்த உயர் கல்வியில் சேரும் மாணவர் களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மருத்துவக்கல்லூரி கலை யரங்க கூடத்தில் நடைபெற வுள்ளது.

    இந்த முகாமில் மாணவர்கள் தங்கள் உயர் கல்விக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை பெறலாம் என மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் தெரிவித்துள்ளார்.

    • முதற்கட்ட கலந்தாய்வில் பல்வேறு பாடப்பிரிவுகளில் 578 இடங்கள் நிரப்பப்பட்டன.
    • தரவரிசை 1388 முதல் 2906 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்ளலாம்.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு 2- ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 12 ம் தேதியன்று நடைபெற உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வர். சோ.கி.கல்யாணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதற்கட்ட கலந்தாய்வில் பல்வேறு பாடப்பிரிவுகளில் இருந்த 864 இடங்களில் 578 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள 286 காலி இடங்களுக்கு 2- ம் கட்ட கலந்தாய்வு 12 ம் தேதி நடைபெற உள்ளது.அறிவியல் பாடப்பிரிவு தரவரிசை 1388 முதல் 2906 வரையுள்ள விண்ணப்பதாரர்களில், இயற்பியல்,கணிதம், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் சேருவதற்குத் தகுதியுள்ள, பிளஸ்-2வில் கணிதம் பயின்றவர்கள் கலந்துகொள்ளலாம்.

    கணினி அறிவியல்(சுழற்சி II),தாவரவியல் ,வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பின்தங்கிய வகுப்பில் (பிசி.,) ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன.இவ்விடங்களுக்கான கலந்தாய்வில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த, பிளஸ்-2வில் – கணிதம், கணினி அறிவியல், வேதியியல், இயற்பியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களைப் பயின்ற விண்ணப்பதாரர்கள் 12 -ந் தேதியன்று காலை 9 மணிக்கு கலந்து கொள்ளலாம்.

    கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளில் பிபிஏ, பி.காம், பிகாம்(சிஏ), பி.காம்(இ.காம்) , அரசியல் அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மீதமுள்ள இடங்களுக்கான சேர்க்கைக் கலந்தாய்வில்,பிளஸ்-2வில் தொழில்முறை பாடப்பிரிவில் பயின்ற, கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவு தரவரிசை 1208 முதல் 2651 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் காலை 11 மணிக்கு கலந்து கொள்ளலாம்.இளங்கலைத் தமிழ் இலக்கியப் பாடப்பிரிவில் உள்ள பின்தங்கிய வகுப்பு (பி.சி.,) மற்றும் மிகவும் பின்தங்கிய வகுப்பு (எம்.பி.சி.) இடங்களுக்கு மட்டும், தமிழ் பாடப்பிரிவு தரவரிசை 2001 முதல் 3000 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் 12.6.2023 அன்று பிற்பகல் 1மணிக்குக் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.இளங்கலை ஆங்கில இலக்கியப் பாடப்பிரிவில் உள்ள காலியிடங்களுக்கு அனைத்து வகுப்பினை சேர்ந்த, ஆங்கில பாடப்பிரிவு தரவரிசை 2001 முதல் 3000 வரையுள்ள விண்ணப்பதாரர்கள் பிற்பகல் 2 மணிக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். முதற்கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ளத் தவறிய விண்ணப்பதாரர்களும் 2- ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.மேலும் கூடுதல் விவரங்களுக்கு கல்லூரியின் www.gacudpt.in என்ற இணையதளத்தை பார்வையிடுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • முதல் கட்ட கலந்தாய்வில் 578 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர்
    • மாணவர்கள் பெற்றோர்களை அழைத்து வரவேண்டும்.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பொதுப் பிரிவு மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்தது. இதில் 578 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். 2- ம் கட்ட கலந்தாய்வு வருகிற12-ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கி.கல்யாணி கூறியதாவது:-

    2023- 2024 -ம் கல்வி ஆண்டிற்கு இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெற்று வருகிறது. இளநிலை அறிவியல் பாடப் பிரிவுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் 81 மாணவர்கள் சேர்ந்தனர்.அதைத் தொடர்ந்து பிற்பகலில் நடைபெற்ற தமிழ் இலக்கிய பாடப்பிரிவில் 38 மாணவர்களும் ஆங்கில இலக்கிய பாடப்பிரிவில் 24 மாணவர்களும் சேர்ந்தனர் .அந்த வகையில் இயற்பியல் பாடப்பிரிவில் 23 மாணவர்களும்,வேதியியல் பாடப்பிரிவில் 13 மாணவர்களும், கணிதவியல் பாடப்பிரிவில் 3 மாணவர்களும்,புள்ளியியல் பாடப்பிரிவில் 3 மாணவர்களும், தாவரவியல் பாடப்பிரிவுகளில் 11 மாணவர்களும்,அரசியல் அறிவியல் பாடப் பிரிவில் 8 மாணவர்களும்,கணினி அறிவியல் பாடப் பிரிவில் 20 மாணவர்களும்,தமிழ் இலக்கியப் பாடப்பிரிவில் 38 மாணவர்களும், ஆங்கில இலக்கியப் பாடப் பிரிவில் 24 மாணவர்களும்ஆ க மொத்தம் 143 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர்.

    இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன. முதல் கட்ட கலந்தாய்வின் முடிவில் இளநிலை கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளில் 382 மாணவர்களும்,இளநிலை அறிவியல் பாடப்பிரிவுகளில் 196 மாணவர்களும் ஆக மொத்தம் 578 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர்.இளநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கான 2- ம் கட்ட கலந்தாய்வு வருகின்ற 12 ந் தேதியன்று இனசுழற்சி மற்றும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது.2-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள வருகை தரும் மாணவர்கள் 10 ,11, 12ம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் , மாற்றுச் சான்றிதழ் , ஆதார் அட்டை , சாதிச்சான்றிதழ் ஆகிய அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் 3 நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் 6 புகைப்படம் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல்,தரவரிசை நகல் , கல்லூரி கட்டணம் உள்ளிட்டவற்றை கொண்டு வரவேண்டும்.மாணவர்கள் பெற்றோர்களை அழைத்து வரவேண்டும் .இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

    • 14 இளநிலை பட்டப்படிப்புகளும் 10 முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளன.
    • பொதுப்பிரிவு மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் பொதுப்பிரிவு மாணவ- மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கீ.கல்யாணி கூறியதாவது:- உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 14 இளநிலை பட்டப்படிப்புகளும் 10 முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளன. இதில் 2023- 2024 ம் கல்வியாண்டிற்கு இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட கலந்தாய்வில் சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை, விளையாட்டு துறை என மொத்தம் 21 பேர் சேர்ந்தனர். அதைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் பெற்ற தரவரிசைப்படி பொதுப்பிரிவு மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.

    இதில் பிபிஏ., பாடப்பிரிவில் 10 மாணவர்களும்,பி.காம் பாடப்பிரிவில் 52 மாணவர்களும்,பி.காம்(சிஏ) பாடப்பிரிவில் 59 மாணவர்களும்,இ.காமர்ஸ் பாடப்பிரிவில் 11மாணவர்களும்,பொருளியல் பாடப்பிரிவில் 6 மாணவர்களும், அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 2 மாணவர்களும் ஆக மொத்தம் 140 மாணவ, மாணவிகள் சேர்ந்தனர் .முதல் கட்ட கலந்தாய்வின் 3- ம் நாளான இன்று கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அறிவியல் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.கலந்தாய்வுக்கு வருகை தரும் மாணவர்கள் 10,11,12-ம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் , மாற்று சான்றிதழ்,ஆதார் அட்டை,சாதிச்சான்றிதழ் ஆகிய அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் 3 நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 6 , இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல்,தரவரிசை நகல் , கல்லூரிக்கட்டணம் உள்ளிட்டவற்றை கொண்டு வரவேண்டும்.கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் கட்டாயம் பெற்றோருடன் வரவேண்டும்.இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

    • ராமநாதபுரத்தில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.
    • மருத்துவ குழுவினர் 100-க்கும் அதிகமானோருக்கு பரிசோதனை நடத்தி ஆலோசனைகள் வழங்கினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் மதுரை குரு மருத்துவமனை, ராமநாதபுரம் வர்ஷா பல் மருத்துவமனை மற்றும் பனைக்குளம் நகர எஸ்.டி.பி.ஐ. கட்சி இணைந்து குழந்தையில்லா தம்பதிகள் மற்றும் கர்ப்பப்பை நோய்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாமை நடத்தியது. கட்சியின் செயலாளர் அனஸ் தலைமை தாங்கினார்.

    மாநில செயற்குழு உறுப்பினர் ஜெமிலுன்னிஸா முகாமை தொடங்கி வைத்தார். மருத்துவர்கள் கல்பனா, ஜெமிலுன்னிஸா தலைமையில் மருத்துவ குழுவினர் 100-க்கும் அதிகமானோருக்கு பரிசோதனை நடத்தி ஆலோசனைகள் வழங்கினர். ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொதுசெயலாளர் அப்துல் ஜமீல், மாவட்டச் செயலாளர் அபுல் கலாம் ஆசாத், நஜிமுதீன், மாவட்ட மீனவரணி தலைவர் பஹ்ருதீன், திருவாடானை தொகுதி தலைவர் முகமது ஹனீப், தொகுதி செயலாளர் நூர் முகமது, தொகுதி இணைச் செயலாளர் அஸ்லம், ஊராட்சி மன்ற உறுப்பினர் சித்தி நிஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
    • சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    அம்மாபேட்டை:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டையில் வருமுன் காப்போம் மருத்துவமுகாம் நடைபெற்றது.

    அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் தலைமை தாங்கி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    அனைவரையும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் வரவேற்றார்.

    ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்மாபேட்டை வட்டார மருத்துவ அலுவலர் அஜந்தன் உரையாற்றினார்.

    முகாமில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இ.சி.ஜி., எக்ஸ்ரே உள்பட பல்வேறு பரிசோதனைகள் செய்து சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    முகாமில் அம்மாபேட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள்.

    மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சுகாதார ஆய்வாளர் பெரியண்ணன் நன்றி கூறினார்.

    • கூடுதல் இடங்களில் மாணவா் சோ்க்கை நடத்திக் கொள்ள பாரதியாா் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.
    • காலை 10 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கான 5-வது கட்ட கலந்தாய்வு நாளை 19-ந்தேதி நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு ஏற்கனவே 4 கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவின்படி கல்லூரியில் கூடுதல் இடங்களில் மாணவா் சோ்க்கை நடத்திக் கொள்ள பாரதியாா் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி வணிகவியல், சா்வதேச வணிகவியல் பாடப் பிரிவுகளில் 30 இடங்களுக்கும், கணினி பயன்பாட்டியல் (பிசிஏ) பிரிவில் 10 இடங்களுக்கும், தமிழ் இலக்கியம், பொருளியல் பாடப் பிரிவுகளில் தலா 6 இடங்களுக்கான கலந்தாய்வு நாளை காலை 10 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

    மேலும், இயற்பியல், கணிதம்,ஆங்கில இலக்கியம், வரலாறு, கணினிஅறிவியல் (இரண்டாம்ஷிப்ட்) ஆகிய பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    இதில், தரவரிசை 2001க்குப் பிறகு உள்ளவா்களும், ஏற்கெனவே கலந்தாய்வில் பங்கேற்று இடம் கிடைக்காதவா்களும் பங்கேற்கலாம். இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கும்போது ஆன்லைனில் விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தையும், கல்லூரி இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவரிசைக் கடிதம், பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் 2 நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களைக்கொண்டுவர வேண்டும். பாஸ்போா்ட் அளவிலான 6 புகைப்படங்கள், கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகையுடன் இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×