search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயர் கல்வி வழிகாட்டு முகாம்
    X

    உயர் கல்வி வழிகாட்டு முகாம்

    • மாணவ- மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டு முகாம் நடந்தது.
    • உயர் கல்விக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்து வக் கல்லூரி கலையரங்க கூடத்தில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டு தல் முகாம் மற்றும் கடந்த கல்வியாண்டில் 12-ம் வகுப்பு முடித்த உயர்கல்வி யில் சேரும் மாணவர்களுக் கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (சனிக் கிழமை) நடைபெறவுள்ளது.

    பள்ளிக்கல்வித்துறையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள் அவை தொடர்பான வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் களை எளிதில் பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகின்றன.

    மேலும் 12-ம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்தும் நோக்கில், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் வழங்கி தொடர்ச்சியான நட வடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் கடந்த கல்வி யாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இதுவரை கல்லூரி யில் சேர விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கும் வகையிலும், மாணவர்கள் தங்கள் உயர்கல்விக்கு தேவையான ஆலோசனை கள் மற்றும் உதவிகள் பெறு வதற்கும், வருவாய்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் நலத் துறை, பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை கள் ஒருங்கிணைந்து நடத் தும், உயர்கல்விக்கான வழி காட்டுதல் முகாம் மற்றும் கடந்த கல்வியாண் டில் 12-ம் வகுப்பு முடித்த உயர் கல்வியில் சேரும் மாணவர் களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மருத்துவக்கல்லூரி கலை யரங்க கூடத்தில் நடைபெற வுள்ளது.

    இந்த முகாமில் மாணவர்கள் தங்கள் உயர் கல்விக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை பெறலாம் என மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×