திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான 5-வது கட்ட கலந்தாய்வு நாளை நடக்கிறது

கூடுதல் இடங்களில் மாணவா் சோ்க்கை நடத்திக் கொள்ள பாரதியாா் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.காலை 10 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கான 5-வது கட்ட கலந்தாய்வு நாளை 19-ந்தேதி நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு ஏற்கனவே 4 கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவின்படி கல்லூரியில் கூடுதல் இடங்களில் மாணவா் சோ்க்கை நடத்திக் கொள்ள பாரதியாா் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி வணிகவியல், சா்வதேச வணிகவியல் பாடப் பிரிவுகளில் 30 இடங்களுக்கும், கணினி பயன்பாட்டியல் (பிசிஏ) பிரிவில் 10 இடங்களுக்கும், தமிழ் இலக்கியம், பொருளியல் பாடப் பிரிவுகளில் தலா 6 இடங்களுக்கான கலந்தாய்வு நாளை காலை 10 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

மேலும், இயற்பியல், கணிதம்,ஆங்கில இலக்கியம், வரலாறு, கணினிஅறிவியல் (இரண்டாம்ஷிப்ட்) ஆகிய பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதில், தரவரிசை 2001க்குப் பிறகு உள்ளவா்களும், ஏற்கெனவே கலந்தாய்வில் பங்கேற்று இடம் கிடைக்காதவா்களும் பங்கேற்கலாம். இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கும்போது ஆன்லைனில் விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தையும், கல்லூரி இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவரிசைக் கடிதம், பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் 2 நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களைக்கொண்டுவர வேண்டும். பாஸ்போா்ட் அளவிலான 6 புகைப்படங்கள், கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகையுடன் இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com