search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வராயன்மலையில் வேளாண் திட்டங்கள் குறித்து விழி்ப்புணர்வு முகாம்
    X

    முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு பழமர செடி தொகுப்புகள் வழங்கப்பட்ட போது எடுத்தபடம்.

    கல்வராயன்மலையில் வேளாண் திட்டங்கள் குறித்து விழி்ப்புணர்வு முகாம்

    • ஒன்றிய குழு தலைவர் சந்திரன், ஒன்றிய பொறியாளர் அருண் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • பயிர்காப் பீடு திட்டம் மற்றும் ஒன்றிய, மாநில அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மைதுறை, கால் நடைதுறை, ஊராக வளர்ச்சிதுறை ஆகிய துறைகள் இணைந்து விவசாயி களுக்கு ஆலோ சனைகள் நேற்று வழங்கப்ப ட்டது. வேளாண்மை உதவி இயக்குனர் சத்தியபிரகாஷ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, ஒன்றிய குழு தலைவர் சந்திரன், ஒன்றிய பொறியாளர் அருண் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம் வரவேற்றார். இதில் தொழில் நுட்பங்கள் மற்றும் அரசு செயல்படுத்தும் வேளாண் திட்டங்கள் குறித்து விவ சாயிகளுக்கு தெரிவிக்க ப்பட்டது. மேலும், மண்மா திரி சேகரித்தல், மண்வள அட்டை பயன்பாடு குறித்தும், மண்வளம், இணை யதளம் மற்றும் மத்திய மாநில அரசு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது.

    அதேபோல் கால்நடை மருத்துவர் கவிதா கலந்து கொண்டு கோமாரி நோய் தடுப்புமுறை, தடுப்பூசி பயன்பாடு, கால்நடை பராமரிப்பு குறித்து எடுத்து கூறினார். தோட்டக்கலை துறை சார்பில் தோட்டக்க லை உதவி இயக்குனர் சிவாமலை கலந்து கொண்டு நுண்ணீர்பாசனத்தின் முக்கியத்துவம், பயிர்காப் பீடு திட்டம் மற்றும் ஒன்றிய, மாநில அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். விழாவில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பழமர செடி தொகுப்புகள் வழங்கப் பட்டது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலு வலர்கள் ஆரோக்கியசாமி, ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் வேங்கோடு கல்யாணி கிருஷ்ணன், செல்வராஜ், ஆன்டி சீனுவாசன், குப்புசாமி, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×