search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health services"

    • நடப்பு மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் முன்னேற்றம் அடைந்ததை ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
    • முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் சுகாதாரத் துறை சார்பில் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது பற்றியும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்தும் கலெக்டர் பழனி அறிவுரை வழங்கினார். ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிகழும் பிரசவங்கள், மக்களை தேடி மருத்துவச் சேவைகள் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை சேவைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரவரிசைகளோடு ஒப்பிட்டு கடந்த மாதத்தை விட நடப்பு மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் முன்னேற்றம் அடைந்ததை ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

    பொது மக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்தும் விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் இதர துறைகளின் ஒத்துழை ப்பு குறித்தும் விவாதித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் செந்தில்குமார், அரசு விழுப்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) கீதாஞ்சலி மருத்துவப் பணிகள் மற்றும் குடும்பநலத் துறை இணை இயக்குநர் லட்சுமணன், நகராட்சி சுகாதார அலுவலர் ஸ்ரீபிரியா மற்றும் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலக இரண்டாம் நிலை அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், முதன்மை மருத்துவ அலுவல ர்கள், சுகாதாரத்து றை அலுவலர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை அலுவலர்கள், மற்றும் முண்டியம்பாக்கம் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ரூ.57 லட்சத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கு பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றியக் குழு தலைவர் தெரிவித்தார்.
    • ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் புதிய கட்டிட கூட்டரங்கில் நடைபெற்றது.

    காங்கயம்:

    காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் புதிய கட்டிட கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கினார்.

    இதில் 15-வது நிதி்க்குழு திட்டத்தில் காங்கயம் வட்டார வளர்ச்சிக்கு ரூ.68 லட்சத்தில் பள்ளி சீரமைப்பு, சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.மேலும் ஊராட்சி ஒன்றியப் பொது நிதியிலிருந்து ரூ.57 லட்சத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கு பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றியக் குழு தலைவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் குடிநீர்க் குழாய்கள் மேம்படுத்துவது, கிணற்று மின்மோட்டார் பழுது நீக்குதல், ஒன்றியத்திக்குப்பட்ட ஊரக பகுதிகளில் உள்ள ஆரம்ப பள்ளி, நடுநிலை பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்தல் மற்றும் ஊதியம், சுகாதார உபகரணங்கள் வாங்குதல், காங்கயம் ஊராட்சி ஒன்றிய பழைய கட்டிடத்தை வணிக பயன்பாட்டிற்காக 3 ஆண்டுகளுக்கு மாத வாடகைக்கு ஒப்படைத்தல் உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்தக்கூட்டத்தில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஜீவிதா ஜவகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலா தேவி, ஹரிஹரன், ஒன்றிய கவுன்சிலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • நுழைவாயில் திறக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மருந்து கிடங்கு மற்றும் நுழைவாயில் வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது.

    இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.27 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மருந்து கிடங்கு மற்றும் நுழைவாயில் கட்டப்பட்டது. விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் டாக்டர். சிவசுப்பிரமணி முன்னிலை வகித்தார்.

    புதிய கட்டிடத்தையும் நுழைவாயிலையும் கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    உடன் டாக்டர்.செந்தில் , நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    • தாராபுரம் நகரின் 14 -வது வாா்டு பகுதியில் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.
    • மக்கும் குப்பை-மக்காத குப்பைகள் பிரித்துக் கொடுக்கப்படுகிறதா என்றும் மக்களிடம் கேட்டறிந்தாா்.

    தாராபுரம்:

    தாராபுரம் நகரில் கழிவு நீா்க் கால்வாய்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.இதையடுத்து, தாராபுரம் நகரின் 14 -வது வாா்டு பகுதியில் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.

    அப்போது, சாக்கடைக் கால்வாய்கள் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா, மக்கும் குப்பை-மக்காத குப்பைகள் பிரித்துக் கொடுக்கப்படுகிறதா என்றும் மக்களிடம் கேட்டறிந்தாா்.  

    ×