search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில் சுகாதார துறை திறனாய்வு கூட்டம்
    X

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் சுகாதாரத் துறை சார்பில் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    விழுப்புரத்தில் சுகாதார துறை திறனாய்வு கூட்டம்

    • நடப்பு மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் முன்னேற்றம் அடைந்ததை ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
    • முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் சுகாதாரத் துறை சார்பில் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது பற்றியும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்தும் கலெக்டர் பழனி அறிவுரை வழங்கினார். ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிகழும் பிரசவங்கள், மக்களை தேடி மருத்துவச் சேவைகள் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை சேவைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரவரிசைகளோடு ஒப்பிட்டு கடந்த மாதத்தை விட நடப்பு மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் முன்னேற்றம் அடைந்ததை ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

    பொது மக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்தும் விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் இதர துறைகளின் ஒத்துழை ப்பு குறித்தும் விவாதித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் செந்தில்குமார், அரசு விழுப்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) கீதாஞ்சலி மருத்துவப் பணிகள் மற்றும் குடும்பநலத் துறை இணை இயக்குநர் லட்சுமணன், நகராட்சி சுகாதார அலுவலர் ஸ்ரீபிரியா மற்றும் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலக இரண்டாம் நிலை அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், முதன்மை மருத்துவ அலுவல ர்கள், சுகாதாரத்து றை அலுவலர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை அலுவலர்கள், மற்றும் முண்டியம்பாக்கம் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×