search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "results"

    • சகோதரிகள் இருவரும் பிளஸ் 2வில் 600க்கு 571 மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியம் அளித்துள்ளனர்.
    • இரட்டையர்களான சுக்கி, இப்பானி சந்திரா இருவரும் 10-ம் வகுப்பில் 620 மதிப்பெண்கள் எடுத்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் சுக்கி மற்றும் இப்பானி சந்திரா ஆகியோர் பிளஸ் 2 வில் 600க்கு 571 மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியம் அளித்துள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுக்கு முன் 10ம் வகுப்பு தேர்விலும் இருவரும் 625க்கு 620 மதிப்பெண்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக சகோதரிகளில் ஒருவரான சுக்கி கூறுகையில், இது ஒரு தற்செயலான நிகழ்வு. நாங்கள் எப்படி ஒரே மதிப்பெண் பெற்றோம் என்பது எங்களுக்கே தெரியவில்லை என்றார்.

    நாங்கள் பிறப்பில் மட்டும் இரட்டைப் பிறவி அல்ல, மதிப்பெண்கள் எடுப்பதிலும் ஒரே மாதிரி என இருவரும் சொல்லிவைத்தாற் போல் ஒரே மதிப்பெண்கள் எடுத்த சம்பவம் பெங்களூருவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 179 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
    • இதையடுத்து கடந்த மே மாதம் 19-ந்தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் 2022-2023 கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி முடிவடைந்தது.

    சேலம்

    சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 179 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. அரசு பள்ளி, மாநகராட்சி பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, உண்டு உறைவிட பள்ளி, தனியார் பள்ளிகள் என மொத்தம் 537 பள்ளிகளை சேர்ந்த 21 ஆயிரத்து 835 மாணவர்களும், 21 ஆயிரத்து 593 மாணவிகளும் என மொத்தம் 43ஆயிரத்து 428 பேர் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வை எழுதினர்.

    இதையடுத்து கடந்த மே மாதம் 19-ந்தேதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் 19 ஆயிரத்து 168 மாணவர்களும், 20 ஆயிரத்து 410 மாணவிகளும் என மொத்தம் 39 ஆயிரத்து 578 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் 3,850 பேர் தேர்ச்சி பெறவில்லை.

    நாமக்கல்

    இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 300 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 121 மாணவர்களும், 9 ஆயிரத்து 392 மாணவிகளும் என மொத்தம் 19 ஆயிரத்து 513 பேர் தேர்வை எழுதி இருந்தனர். இவர்களின் 9 ஆயிரத்து 170 மாணவர்களும், 8 ஆயிரத்து 973 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 143 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    மறுகூட்டல்

    இந்த நிலையில் 10- வகுப்பு தேர்வு எழுதிய மாணவ- மாணவிகள் சிலர் மறுகூட்டல் ேகாரி கடந்த சில வாரங்களுக்கு முன்பு விண்ணப்பித்தனர். இதையடுத்து அவர்களுடைய விடைத்தாள் மீண்டும் மறுகூட்டல் செய்யப்பட்டது.

    மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது. அரசு தேர்வுகள் இயக்ககம் இணையதளத்தில் மறுகூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

    மதிப்பெண் சான்றிதழ்

    மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, மதிப்பெண் மாற்றங்களுடன் அரசு தேர்வுகள் இயக்ககம் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வு ஆங்கிலம் பாடத்தில் ஒரே ஒருவருக்கு 100-க்கு 100 மதிப்பெண் எடுத்தார்.
    • தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை நேற்று பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியிட்டது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் 2021-2022 கல்வி ஆண்டுக்கான பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 10-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிவடைந்தது.

    இதில் சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 325 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 19 ஆயிரத்து 254 பேர், மாணவிகள் 20 ஆயிரத்து 227 பேர் என மொத்தம் 39 ஆயிரத்து 481 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினார்கள்.

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை நேற்று பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியிட்டது. அதில், 15 ஆயிரத்து 879 மாணவர்களும், 19 ஆயிரத்து 109 மாணவிகளும் என மொத்தம் 34 ஆயிரத்து 988 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    அதன்படி பிளஸ்- 1 தேர்ச்சி சதவீதம் 88.62 சதவீதம் ஆகும். தேர்வு முடிவு அடிப்படையில் மாநிலத்தில் சேலம் மாவட்டம் 23-வது இடம் பிடித்துள்ளது. கடந்த காலங்களில் 10 முதல் 15 இடங்களுக்குள் வந்த சேலம் மாவட்டம் தற்போது 23-வது இடத்துக்கு சென்றுள்ளது.

    பிளஸ்-1 பாடங்களில் 1651 மாணவ- மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றனர். அதில் பிரதான மொழிப்பாடமான ஆங்கிலம் பாடத்தில் ஒரே ஒருவர் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளார். கணக்கு பாடத்தில் 45 பேர், இயற்பியல்- 34 பேர், வேதியியல்- 6 பேர், உயரியல்- 24 பேர், வணிகவியல்- 23 பேர், கணக்கு பதிவியல்- 63 பேர், பொருளியல்- 21 பேர், கணினி அறிவியல்- 29 பேர், கணினி பயன்பாடு- 58 பேர், செவிலியல்- 33 பேர், வணிகக்கணிதம் மற்றும் புள்ளியல் - தலா 6 பேர் மற்றும் தொழிற்கல்வி பாடங்களில் 1,308 பேர் என மொத்தம் 1,651 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியீடு சேலம் மாவட்டத்தில் 88.62 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
    • 34 ஆயிரத்து 988 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் 2021-2022 கல்வி ஆண்டுக்கான பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 10-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிவடைந்தது. இதில் சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 325 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 19 ஆயிரத்து 254 பேரும், மாணவிகள் 20 ஆயிரத்து 227 பேரும் என மொத்தம் 39 ஆயிரத்து 481 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினார்கள்.

    தேர்வு முடிவு வெளியீடு

    இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இன்று பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியிட்டது. சேலம் மாவட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் பிளஸ்-1 தேர்வு முடிவை வெளியிட்டனர். அதில், 34 ஆயிரத்து 988 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    வழக்கமாக மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 15 ஆயிரத்து 879 பேர் மாணவர்களும், 19 ஆயிரத்து 109 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    88.62 சதவீதம் தேர்ச்சி

    அதன்படி பிளஸ்- 1 தேர்ச்சி சதவீதம் 88.62 சதவீதம் ஆகும். அதில் மாணவர்கள் 82.47 சதவீதமும், மாணவிகள் 94.47 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் 12 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளில் எண்ணிக்கை 114 ஆகும். 2020-ம் ஆண்டு 105 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தது. ஆனால் 2021-2022 கல்வி ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கொண்டாட்டம்

    முன்னதாக இன்று காலை 9.30 மணி அளவில் 325 பள்ளிகளிலும் அறிவிப்பு பலகையில் தேர்வு முடிவு மதிப்பெண் விபரங்களுடன் ஒட்டப்பட்டது. தற்போது பிளஸ்-2 படித்து வரும் மாணவ- மாணவிகள் தங்களுடைய பிளஸ்-1 மதிப்பெண் விபரங்களை அறிந்து கொண்டனர்.

    பள்ளிக்கல்வித் துறையின் அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்திலும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் மாணவ- மாணவிகளுக்கு எஸ்.எம்.எஸ். வாயிலாகவும் தேர்வு முடிவு தெரிவிக்கப்பட்டது.

    பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி ெசலுத்தி மாணவ- மாணவிகள் தாங்கள் எடுத்த மதிப்பெண்களை பார்த்து தெரிந்து கொண்டனர். மேலும் மதிப்பெண் பட்டியலை பிரிண்ட் எடுத்துக்கொண்டனர்.

    பிளஸ்-1 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் தங்கள் வகுப்பறைகளில் மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பெற்றோர் மற்றும் ஆசிரியர், ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். தங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர், ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவர்களை விட மாணவிகள் 10.13% கூடுதலாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
    • 10 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

    சென்னை:

    11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பப்பட்டுள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.

    பிளஸ் 1 தேர்வு எழுதியவர்களில் 94.99% மாணவிகள் மற்றும் 84.86% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13% கூடுதலாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

    10 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை மாநில அளவில் 95.56% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் 95.44% தேர்ச்சியுடன் 2ம் இடத்தையும், மதுரை மாவட்டம் 95.25% தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இணையதளங்கள் மூலம் மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
    • மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. மொத்தம் 8,83,882 பேர் தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பப்பட்டுள்ளது.

    www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.

    • சேலம், நாமக்கல் பட்டதாரிகள் எழுதிய டி.என்.பி.எஸ்.சி.குரூப்-1, 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகிறது.
    • `குரூப்-2, 2 ஏ’ வினாத்தாளுக்கான விடைக்குறிப்பு டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வெளியிடப்பட்டது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் ேதர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் சார் பதிவாளர், நகராட்சி கமிஷனர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் உள்பட 67 வகை பதவிகளில் 5,529 காலியிடங்களை நிரப்ப `குரூப்-2, 2 ஏ' முதல்நிலை தேர்வு கடந்த ேம மாதம் 21-ந்தேதி நடைபெற்றது.

    தேர்வில் 9.95 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் பட்டதாரிகள் பலர் பங்கேற்று எழுதினர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு `குரூப்-2, 2 ஏ' வினாத்தாளுக்கான விடைக்குறிப்பு டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வெளியிடப்பட்டது.

    அதனை தொடர்ந்து இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டு, விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் இந்த தேர்வு முடிவு வெளியிடப்படும்.

    இதேபோல் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட குரூப்-1 பதவியில் 66 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரதான தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவு அடுத்த மாதம் வெளியிடப்படும். அதேபோல், 50 குற்றவியல் உதவி வக்கீல் பதவிக்கான பிரதான தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

    • சேலம், நாமக்கல் பட்டதாரிகள் எழுதிய டி.என்.பி.எஸ்.சி.குரூப்-1, 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகிறது.
    • `குரூப்-2, 2 ஏ’ வினாத்தாளுக்கான விடைக்குறிப்பு டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வெளியிடப்பட்டது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் ேதர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் சார் பதிவாளர், நகராட்சி கமிஷனர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் உள்பட 67 வகை பதவிகளில் 5,529 காலியிடங்களை நிரப்ப `குரூப்-2, 2 ஏ' முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21-ந்தேதி நடைபெற்றது.

    தேர்வில் 9.95 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் பட்டதாரிகள் பலர் பங்கேற்று எழுதினர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு `குரூப்-2, 2 ஏ' வினாத்தாளுக்கான விடைக்குறிப்பு டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வெளியிடப்பட்டது.

    அதனை தொடர்ந்து இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்பட்டு, விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் இந்த தேர்வு முடிவு வெளியிடப்படும்.

    இதேபோல் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட குரூப்-1 பதவியில் 66 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரதான தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவு அடுத்த மாதம் வெளியிடப்படும். அதேபோல், 50 குற்றவியல் உதவி வக்கீல் பதவிக்கான பிரதான தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

    • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி). குரூப்-7 ஏ 8 உதவி இயக்குனர் பதவிகளை நிரப்ப தேதி அறிவிப்பு வெளியிட்டது.
    • தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வருகிற 29-ந்தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி). குரூப்-7 ஏ பிரிவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில் 25 செயல் அலுவலர் நிலை-1 பதவிகள், கூட்டுறவு தணிக்கை துறையில் 8 உதவி இயக்குனர் பதவிகள் நிரப்ப கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

    இதையடுத்து தமிழகம் முழுவதிலும் இருந்து பட்டதாரிகள் விண்ணப்பித்தனர்.

    பின்னர் செயல் அலுவலர் பணிக்கு தாள்-1, தாள்-2, தாள்-3 ேதர்வும், கூட்டுறவு உதவி இயக்குனர் பணிக்கு தாள்-1, தாள்-2 தேர்வும் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்டன.

    இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பட்டதாரிகள் ஏராள–மானோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இந்த 2 தேர்வுகளுக்குமான முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வருகிற 29-ந்தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.

    • 12-ம்வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது.
    • சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் செந்தில்நாதன், பள்ளி முதல்வர் முத்துகண்மணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பாரதிநகர் தமிழ்நாடு சர்வோதயா சங்கம் காந்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி 10மற்றும் 12-ம்வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது.இந்த ஆண்டும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.இதில் 12-ம்வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி அனுபிரபா 600க்கு 595 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவி ஸ்ரீநிதி 590 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவர் பிரேம் 588 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    10-ம்வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி கமலேஸ்வரி 500க்கு 478 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். தீட்சிகா 474 மதிப்பெண் பெற்று 2-ம் இடம், கிருபாஸ்ரீ473 மதிப்பெண் பெற்று 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

    சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் செந்தில்நாதன்,பள்ளி முதல்வர் முத்துகண்மணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.   

    • பிளஸ்-2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் 2-வது இடம் பிடித்தது.
    • விருதுநகர் மாவட்டத்தில் 22 ஆயிரத்து 208 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தனர்.

    விருதுநகர்

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சென்னை கோட்டூர்புரம் நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை வெளியிட்டார்.

    விருதுநகர் மாவட்டத்தில் 22 ஆயிரத்து 208 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தனர். இதில் 21 ஆயிரத்து 602 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.25 சதவீதம் தேர்ச்சி ஆகும். விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    சேலம், நாமக்கல் மாவட்ட பட்டதாரிகள் எழுதிய பயோடெக்னாலஜி தகுதித் தேர்வு முடிவு வெளியீடு மதிப்பெண் அட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
    சேலம்:

    இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை  பட்டதாரி  பயோடெக்னாலஜி திறன் தேர்வு (GAT - B) மற்றும்  பயோடெக்னாலஜி தகுதித் தேர்வு (BET) - 2022  அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து கணினி வழி முறையில்  இந்தியா முழுவதும் 56 நகரங்களில் 23.04.2022 அன்று  தேர்வு நடத்தியது.  

     சமூக இடைவெளியை கடைபிடித்து, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு  தேர்வுகள் நடத்தப்பட்டன.

    பட்டதாரி பயோடெக்னாலஜி திறன் தேர்வுக்கு (GAT-B) 6359 பெண்களும், 3219 ஆண்களும்  என மொத்தம் 9578 பேர் விண்ணப்பித்தனர். இதில் 5722 பெண்கள்,  2955 ஆண்கள் என  8677 பேர் தேர்வு எழுதினர்.

    இதேபோல்  பயோடெக்னாலஜி தகுதித் தேர்வு (BET)  எழுத பெண்கள்- 9448, ஆண்கள்- 4251 என 13699 பேர்  பதிவு செய்தனர். இதில் பெண்கள்- 8013,  ஆண்கள்- 3758 என மொத்தம் 11771 பேர் தேர்வு எழுதினார்கள். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த முதுநிலை பட்டதாரிகள் பலர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.

    இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது.  விண்ணப்பதாரர்கள் தேர்வில் எடுத்த  மதிப்பெண்கள்  தேசிய தேர்வு முகமை இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப எண், பாஸ்வேர்டு கொடுத்து  பார்க்கலாம்.  மேலும் ரேங்க் கார்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    தேர்ச்சி பெற்றவர்கள்  மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறையில்  முதுகலை படிப்பில் சேர அட்மிஷன் வழங்கப்படுகிறது. இதைத்தவிர   பயோடெக்னாலஜி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் பங்கேற்று ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பயோடெக்னாலஜி ஆராய்ச்சியைத் தொடர உதவிகளும் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    ×