search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Twin sisters"

    • சகோதரிகள் இருவரும் பிளஸ் 2வில் 600க்கு 571 மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியம் அளித்துள்ளனர்.
    • இரட்டையர்களான சுக்கி, இப்பானி சந்திரா இருவரும் 10-ம் வகுப்பில் 620 மதிப்பெண்கள் எடுத்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் சுக்கி மற்றும் இப்பானி சந்திரா ஆகியோர் பிளஸ் 2 வில் 600க்கு 571 மதிப்பெண்கள் எடுத்து ஆச்சரியம் அளித்துள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுக்கு முன் 10ம் வகுப்பு தேர்விலும் இருவரும் 625க்கு 620 மதிப்பெண்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக சகோதரிகளில் ஒருவரான சுக்கி கூறுகையில், இது ஒரு தற்செயலான நிகழ்வு. நாங்கள் எப்படி ஒரே மதிப்பெண் பெற்றோம் என்பது எங்களுக்கே தெரியவில்லை என்றார்.

    நாங்கள் பிறப்பில் மட்டும் இரட்டைப் பிறவி அல்ல, மதிப்பெண்கள் எடுப்பதிலும் ஒரே மாதிரி என இருவரும் சொல்லிவைத்தாற் போல் ஒரே மதிப்பெண்கள் எடுத்த சம்பவம் பெங்களூருவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இரட்டை சகோதரிகளும் தங்களது விபரீத காதலை ஒரே வாலிபருடன் வளர்த்து வந்தனர்.
    • காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனவேதனை அடைந்த இரட்டைசகோதரிகள் மற்றும் மகேஷ் ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவாலங்காடு அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய இரட்டை சகோதரிகள் 10-ம் வகுப்பு படித்து முடித்து உள்ளனர். பிளஸ்-1 படிக்க இருந்தனர்.

    இவர்கள் இருவரும் உறவினரான அதே பகுதியில் வசித்து வரும் மகேஷ் (22) என்பவரை காதலித்தனர். அவரும் இரட்டை சகோதரிகளை காதலிப்பதாக கூறி இருவரிடமும் நெருங்கி பழகினார். மகேஷ் ஐ.டி.ஐ. படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இரட்டை சகோதரிகளும் தங்களது விபரீத காதலை ஒரே வாலிபருடன் வளர்த்து வந்தனர். இந்த விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கும் தெரிந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மகேசையும், இரட்டை சகோதரி மாணவிகளையும் பெற்றோர் கண்டித்து அறிவுரை கூறினர். எனினும் அவர்களது காதல் தொடர்ந்து நீடித்து வந்தது.

    இந்நிலையில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனவேதனை அடைந்த இரட்டைசகோதரிகள் மற்றும் மகேஷ் ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று மாலை அவர்கள் அப்பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆறு அருகே சென்று கொக்கு மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதில் இரட்டை சகோதரி மாணவிகளில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு மாணவி மற்றும் மகேஷ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது நிலைமையும் மோசமாக உள்ளது. இச்சம்பவம் திருவாலங்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×