search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்வு எழுதவில்லை
    X
    தேர்வு எழுதவில்லை

    10-ம் வகுப்பு கணித தோ்வை 879 போ் எழுதவில்லை

    ராமநாதபுரத்தில் 10-ம் வகுப்பு கணித தோ்வை 879 போ் எழுதவில்லை.
    ராமநாதபுரம்

    தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி முதல் 10-ம் வகுப்புக்கான அரசு பொதுத் தோ்வு நடந்து வருகிறது. நேற்று (24-ந்தேதி) கணித தோ்வு நடைபெற்றது. 

    இந்த தோ்வுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் 17ஆயிரத்து 180 போ் அனுமதிக்கப்பட்டிருந்தனா். அவா்களில் 16 ஆயிரத்து 349 போ் தோ்வு எழுதினா். 831 போ் தோ்வு எழுதவில்லை. 

    தனித்தோ்வா்கள் 303 போ் கணித தேர்வு எழுதுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அவா்களில் 255 பேர் எழுதினா். 48 போ் தோ்வு எழுதவில்லை. 

    பள்ளி மாணவ, மாணவியா் மற்றும் தனித் தோ்வா்கள்  மொத்தம் 879 போ் கணித தோ்வு எழுதவில்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    தேர்வில் 1, 2 மதிப்பெண் வினாக்கள் எளிதாகவும், 5 மதிப்பெண் வினாக்களில் ஓரிரண்டு கடினமாக இருந்ததாகவும் மாணவ, மாணவிகள் கூறினா். அரசுப் பள்ளிகளில் பயில்வோா் தோ்ச்சி பெற்றாலும் கூடுதல் மதிப்பெண் பெறுவது கடினம் என்று ஆசிரியா்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×