என் மலர்
செய்திகள்

தர்மபுரி அருகே பிளஸ்-1 மாணவி தூக்குபோட்டு தற்கொலை
தர்மபுரி அருகே 4 பாடங்களில் தேர்ச்சி பெறாததால் பிளஸ்-1 மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் வெள்ளோலை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி அம்பிகா (வயது30). இவர்களுக்கு சுமித்ரா (14) என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். சுமித்ரா அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் நடந்து முடிந்த பிளஸ்-1 பொதுத் தேர்வில் 4 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மனமுடைந்த காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தர்மபுரி மதிகோன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுமித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story