search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alcoholism"

    கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள அருவங்காடு தெற்கு ஓடை யில் சாராய ஊறல்கள் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கிரா மங்களில் சாராயம் காய்ச்சி விற்கும் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் குடிநீரை பேரல்களில் நிரப்புகின்றனர் யூரியா, மரப்பட்டை, வெல்லம் போன்ற பல்வேறு பொருட் களை பேரல் நீரில் ஊற வைக்கின்றனர்.சில நாட்கள் கழித்து பேரல்களில் ஊறிய நீரினை அடுப்பில் வைத்து காய்ச்சுகின்றனர். இது நாட்டுச் சரக்கு என்ற பெயரில் மதுப்பிரியர்களி டம் விற்கின்றனர். இது அப்பகுதியில் மட்டு மின்றி அரியலூர், விழுப்புரம், சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுவை மாநிலத்தின் ஒரு சில இடங்க ளிலும் விற்கப்படு கிறது.

    இது தொடர்பாக கள்ளக் குறிச்சி மாவட்ட போலீசா ருக்கும், கல்வராயன்மலை போலீசாருக்கும் புகார் வருவதும், இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று சாராய ஊறல்களை அழிப்ப தும் தொடர் நிகழ்வாக உள்ளது. இருந்தபோதும் இந்த சாராய ஊறல்களை வைத்திருந்தவர்கள் யார் என்பதும், அவர்கள் இன்று வரையில் கைது செய்யப் படாததும் மர்மமாகவே உள்ளது.இந்நிலையில் கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள அருவங்காடு தெற்கு ஓடை யில் சாராய ஊறல்கள் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மோகன்ராஜ் உத்தர வின்பேரில் கல்வராயன் இன்ஸ்பெக்டர் பால கிருஷ் ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடாத் திற்கு விரைந்து சென்றனர்.அங்கு 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 பேரல்களில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் இருந்ததை கண்டறிந்தனர். உடனடியாக அதனை அங்கேயே கொட்டி அழித்தனர். மேலும், இதனை காய்ச்சு வதற்காக வைக்கப்பட்டி ருந்த அடுப்பு, ஊறல்கள் செய்வதற்கான மூலப் பொருட்கள் போன்ற வற்றையும் அழித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சாராய ஊற லை வைத்திருந்தவர்யார் என்பது குறித்து விசா ரணை நடத்தி வருகின்ற னர். மேலும், அடையாளம் தெரியாத அந்த நபரை வலை வீசி தேடி வருகின்ற னர்.

    • போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 800 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்து அழித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் அருகில் உள்ள நத்தம் பள்ளி கிராமத்தில் வனப்ப குதியில் கள்ளச்சாரயம் காய்ச்சுவதற்காக சாராய ஊரல் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் கரியாலூர் சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் கெடார் பட்டிவளவு வனப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது அங்கு 200 லிட்டர் பிடிக்கக் கூடிய 3 பிளாஸ்டிக் பேரல்களில் 800 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்து அழித்தனர். அதனை பதுக்கி வைத்த வர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • வனப்பகுதியில் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் அருகில் உள்ள ஓடையில் வண்டைக்காப்பாடி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் கள்ளச்சாரயம் காய்ச்சுவத ற்காக சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் உத்தரவின் பேரில் கரியாலூர் சப்- இன்ஸ்பெ க்டர் குணசேகரன் வண்டை க்காப்பாடி வனப்பகுதியில் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 200 லிட்டர் பிடிக்கக் கூடிய 4 பிளாஸ்டிக் பேரல்களில் 800 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்து அழித்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக சாராயம் பதுக்கி வைத்த நபர் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    • மது போதையில் தகராறு செய்த கணவரை கீழே தள்ளி கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.
    • ரேசன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    மதுரை

    மதுரை புது ராமநாதபுரம் ரோடு பழைய மீனாட்சி நகரை சேர்ந்தவர் மகாராஜா (வயது34), பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி செல்வி. இவர் ரேசன் கடையில் வேலை பார்த்து வருகிறார். மகாராஜாவுக்கு மது பழக்கம் இருந்தது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து போதையில் மனைவி யுடன் தகராறு செய்து வந்தார்.

    சம்பவத்தன்றும் மது போதையில் வீட்டுக்கு வந்தார். இதனை மனைவி கண்டித்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் மகாராஜா மனைவியை அடிக்க முயன்றார். அதனை தடுத்த மனைவி மகா ராஜாவை கீழே தள்ளினார். அதனால் அவர் தடுமாறி விழுந்தார். அதன் அசை வில்லாமல் கிடந்துள்ளார்.

    மனைவி அவரை எழுப்ப முயன்றபோது பேச்சு, மூச்சில்லாமல் இருந்துள் ளார். உடனடியாக அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து மகாராஜா வின் தாய் சுந்தரி தெப்பக் குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி செல்வியை கைது செய்தனர்.

    • அந்தோணிசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    நடுவீரப்பட்டு அடுத்த சிலுவை பாளையத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 60). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள நிலத்தில் பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் இருந்தார். இதனை தொடர்ந்து அந்தோணிசாமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அந்தோணிசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல்,நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 37). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. சம்பவத்தன்று தனது மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தராததால் அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் இருந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மெரினா கடற்கரையில் தங்கி, அங்கு வருபவர்களிடம் யாசகம் பெற்று குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்து வந்ததாக தெரிவித்தார்.
    • போலீசார் 2 நாட்களாக விசாரித்தும் எந்த தகவலையும் அவர் தெரிவிக்காததால் போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே நேற்று முன்தினம் இரவு நடைபாதையில் இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது அருகே 2 வயது பெண் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. 6 மாத ஆண் குழந்தை அழுதபடி காணப்பட்டது.

    அப்போது கடற்கரைக்கு வந்த சிலர் அந்த பெண்ணை எழுப்பியபோது அவர் எழுந்திருக்கவில்லை. இது குறித்து அவர்கள் மெரினா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மயங்கி கிடந்த பெண்ணை பார்த்தனர். அப்போது அவர் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது. அருகில் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை பசி மயக்கத்தில் காணப்பட்டது. 6 மாத ஆண் குழந்தையும் பசியால் அழுது கொண்டு இருந்தது.

    இதையடுத்து அந்த பெண்ணையும் 2 குழந்தைகளையும் போலீசார் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பசி மயக்கத்தில் இருந்த 2 வயது குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு போலீசார் உணவு வாங்கி கொடுத்தனர். 6 மாத ஆண் குழந்தையும் பால் கொடுத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே போதை தெளிந்த நிலையில் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பெண் ஆதரவற்ற நிலையில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக மெரினா கடற்கரையில் தங்கி, அங்கு வருபவர்களிடம் யாசகம் பெற்று குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்து வந்ததாக தெரிவித்தார்.

    அந்த பெண்ணிடம் போலீசார் பெயர், கணவர் பெயர், சொந்த ஊர் பற்றிய விவரங்களை கேட்டனர். இந்தியில் பேசிய அவர் போலீசார் கேட்ட எந்த விவரங்களையும் சொல்ல மறுத்துவிட்டார். அந்த பெண் சொந்த மாநிலத்தின் பெயரை சொன்னால் அந்த மாநிலத்தை சேர்ந்தவரை வரவழைத்து அந்த பெண்ணிடம் பேச வைத்து அவரைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று போலீசார் திட்டமிட்டனர். ஆனால் அந்த பெண் சொந்த மாநிலத்தின் பெயரையும் சொல்ல மறுத்துவிட்டார்.

    மேலும் அந்த பெண்ணிடம் குழந்தைகளுடன் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்து விடுகிறோம் என்று போலீசார் கூறினார்கள். அதற்கு மறுத்த அவர் சிகிச்சைக்கும் ஒத்துழைக்காமல் ஆஸ்பத்திரியில் இருந்து திடீரென்று ஓட்டம் பிடித்தார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை பிடித்து வந்து சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    போலீசார் 2 நாட்களாக விசாரித்தும் எந்த தகவலையும் அவர் தெரிவிக்காததால் போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். அந்த பெண் காப்பகத்துக்கு செல்லமாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளார். என்னை மீண்டும் மெரினா கடற்கரைக்கே அனுப்புங்கள். ஏதாவது வேலை செய்து என் 2 குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்வேன் என்று போலீசாரிடம் கூறி வருகிறார்.

    அந்த பெண்ணுக்கும் 2 குழந்தைகளுக்கும் எப்படி ஆதரவு கொடுப்பது என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்கள்.

    • பெருநகரங்களில் பெண்களும் பாருக்கு வருகிறார்கள்.
    • டெல்லியில் மதுவிற்பனை ஒட்டுமொத்தமாக 87 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.

    புதுடெல்லி :

    மது குடிக்கும் பழக்கம் தற்போது ஒரு 'பேஷன்' ஆகி விட்டது. பெருநகரங்களில் பெண்களும் பாருக்கு வருகிறார்கள். இந்தநிலையில் டெல்லியில் பெண்களின் மது பழக்கம், கொரோனாவுக்கு முன்பு இருந்த நிலையைவிட தற்போது அதிகரித்து உள்ளது. இதற்கு கொரோனா கால ஊரடங்கே முக்கிய காரணம் என பெண்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    ஒரு தொண்டு நிறுவனம் இது தொடர்பான ஆய்வை 5 ஆயிரம் பெண்களிடம் நடத்தியது. இதில் கொரோனாவுக்கு பிறகு பெண்களிடையே மது அருந்தும் பழக்கம் 37 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் தங்களை குடிகாரிகளாக மாற்றிவிட்டதாக பல பெண்கள் கூறியுள்ளனர். மேலும், டெல்லியில் மதுபானத்துக்கு அளிக்கப்பட்ட 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்', சிறப்பு தள்ளுபடி விற்பனை, டோர் டெலிவரி போன்ற சலுகைகளும் மது வாங்க தங்களை தூண்டியதாக 77 சதவீத பெண்கள் தெரிவித்து உள்ளனர்.

    மது அருந்தும் பெண்களில் 38 சதவீதம் பேர் வாரத்துக்கு இருமுறையும், 19 சதவீதம் பேர் வாரத்துக்கு 4 முறையும் மது அருந்துவதாக கூறியுள்ளனர். ஒரு அமர்வுக்கு 4 'பெக்'குகள் வரை தள்ளுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    பெண்களிடம் மட்டுமின்றி ஆண்களிடமும் மது அருந்தும் பழக்கம் டெல்லியில் அதிகரித்துள்ளது. இதன்மூலம் டெல்லியில் மதுவிற்பனை ஒட்டுமொத்தமாக 87 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. இதில் விஸ்கி விற்பனை 59.5 சதவீதம், பீர் விற்பனை 5.5 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வீரன் மற்றும் அண்ணாமலை வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.
    • படுகாயமடைந்த வீரன்,அண்ணாமலையை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    கடலூர் 

    வடலூர் வள்ளலார் நகர் சித்தர் தெருவை சேர்ந்தவர் ராஜவன்னியன் என்பவரின் மகன் வீரன் மற்றும் தம்பி அண்ணாமலை. இவர்கள் இருவரும் வடலூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 24-ம் தேதி மாலையில் வீரனும் தம்பி அண்ணாமலையும் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்கு செல்லும் வழியில் இளைஞர்கள் மது போதையில் பட்டாசுகளை வெடித்துக் கொண்டு இருந்தனர். இதைப் பார்த்த வீரன் மற்றும் அண்ணாமலை வழியில் செல்கின்ற பொது மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் ஏன் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு இளைஞர்கள் நாங்கள் இப்படி தான் செய்வோம் எனவும் உன் வேலையை பார்த்துக் கொண்டு போ என்று கூறி வீரன் மற்றும் அண்ணாமலையிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் இருவருக்கும் கொலை மிரட்டல் செய்துள்ளனர்.

    இந்நிலையில் போதையில் இருந்த இளைஞர்கள் திடீரென்று எதிர்பாராத விதமாக அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு பைப்பினால் இருவரையும் தாக்கினர். இதில் வீரன் மற்றும் தம்பி அண்ணாமலை இருவருக்கும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த வீரன்,அண்ணா மலையை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து வீரன் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரமணி எஸ்ஐ சங்கர் தலைமையிலான போலீசார் இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வடலூர் புதுநகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் கோபிநாத் என்கிற விக்னேஷ் (வயது 19) கோட்டக்கரை மாருதி நகரைச் சார்ந்த ரகோத்தமன் மகன் சஞ்சய் (19) அன்னை சத்யா வீதியை சேர்ந்த முருகன் மகன் பிரவீன் குமார் (18) ஆகிய 3 இளைஞர்களையும் கைது செய்து கடலூர் சிறையிலும் மேலும் 17 வயது சிறுவர்கள் 3 பேரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இளைஞர்கள் போதையில் தகராறில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • ரவிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.
    • சிகிச்சை பலனின்றி நேற்று ரவி உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளையத்தை சேர்ந்தவர் திருமலை (32). திருமணம் ஆகவில்லை. இவரது அண்ணன் ரவி (40). இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    திருமலை, ரவி ஆகியோரின் பெற்றோர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். எனவே, திருமலை, தனது அண்ணன் ரவியின் வீட்டிலேயே வசித்து வந்தார்.

    ரவிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி அன்று இரவு மல்லிகை பூவிற்கு அடிக்கும் மருந்தை (விஷம்) குடித்து ரவி வாந்தி எடுத்துள்ளார். மனைவி சத்யா விசாரித்தபோது அவர் எதுவும் கூறவில்லையாம். இதையடுத்து மறுநாள் ரவியின் உடல் நிலை மோசமடையவே உடனடியாக அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    பின்னர் உயர்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ரவி உயிரிழந்தார்.

    இதுகுறித்து, ரவியின் தம்பி திருமலை அளித்த புகாரின் பேரில் பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே குடிகார கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
    • வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே கொண்ட சமுத்திரம் பகுதியைசேர்ந்தவர் சண்முகம்.அவரது மனைவி அம்சவல்லி (வயது 28) இவர்களுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சண்முகத்திற்கு குடி ப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை ஏற்படும். இதனால் மன உளைச்சலில் இருந்த அம்சவல்லி நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயம் அரளி விதையை அரைத்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டுவிழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்து வமனையில் சிகி ச்சைக்காக சேர்த்தனர். அங்கு அம்சவல்லியை பரிசோதனை செய்த டாக்ட ர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுஅம்சவல்லி உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இது குறித்து அம்சவல்லி தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    • இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • முத்துமாரி தீவிர சிகிச்சை பலன் காரணமாக உயிர் பிழைத்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சூலக்கரையை சேர்ந்தவர் ஈரக்கஞ்சையன், கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி (வயது 30) இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக கணவர் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வீட்டுக்கு வந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது‌. மது பழக்கத்தை நிறுத்துமாறு முத்துமாரி பலமுறை கணவரிடம் கூறினார். ஆனால் அவர் கேட்கவில்லை.

    2 மாதத்துக்கு முன்பு இந்தப் பிரச்சினையில் கணவரை மிரட்டுவதற்காக முத்துமாரி பிளீச்சிங் பவுடரை கலந்து குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட முத்துமாரி தீவிர சிகிச்சை பலன் காரண மாக உயிர் பிழைத்தார்.

    இந்த நிலையில் மனைவி தற்கொலைக்கு முயன்றும் ஈரக்கஞ்சையன் அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் மது குடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 9-ந் தேதி கணவன்- மனைவி இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த தின்னரை எடுத்து முத்துமாரி தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரி சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துமாரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் அருகே உள்ள ஆத்திக்குளம் காலனி தெருவைச் சேர்ந்தவர் ராஜமுருகன் (38). இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் விரக்தியில் இருந்த ராஜமுருகன் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×