search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Father Daughter"

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, உணவு பாதுகாப்பு வட்டார அலுவலர் முருகன் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • சிக்கன் ரைஸ் உணவு மாதிரியை எடுத்து சேலம் உடையாப்பட்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் ஜீவானந்தம் (32) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டல் தினசரி மதியம் 1 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் எருமப்பட்டி அருகே உள்ள கொண்டிச்செட்டிபட்டி தேவராயபுரத்தை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (20) இந்த ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார்.

    தொடர்ந்து 7 சிக்கன் ரைஸ் பொட்டலம் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றார். அவற்றை தன்னுடைய தாய் நதியா (37), தம்பி கவுசிக் ஆதி (18), தாத்தா சண்முகம் (67), பாட்டி பார்வதி (63), சித்தி பிரேமா (35) மற்றும் இவரது இரு குழந்தைகளுக்கு வழங்கி உள்ளார்.

    இதில் சிக்கன் ரைஸ் உணவை சாப்பிட்ட நதியா, சண்முகம் ஆகியோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. உணவு சாப்பிட்ட மற்றவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

    இதுபற்றி தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, உணவு பாதுகாப்பு வட்டார அலுவலர் முருகன் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து கலெக்டர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர்களில் 2 பேருக்கு மட்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதனால் சிக்கன் ரைஸ் உணவு மாதிரியை எடுத்து சேலம் உடையாப்பட்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே உணவின் மீதியை தடயவியல் நிபுணர்கள், மருத்துவ குழுவினர் ஆய்வு செய்ததில் உணவில் விஷத்தன்மை இருப்பதை மருத்துவக்குழுவினர் உறுதி செய்துள்ளதால் ஓட்டல் உரிமையாளர் ஜீவானந்தம், மாணவர் பகவதி ஆகியோரிடம் நாமக்கல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே சிக்கன்ரைஸ் சாப்பிட்டு 2 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் துரித உணவகம் மற்றும் அசைவ உணவு ஓட்டல்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டு இதேபோல் நாமக்கல்லில் உள்ள ஒரு துரித உணவகத்தில் மாணவி ஒருவர் சவர்மா சாப்பிட்டு உயிரிழந்ததும், 20-க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    • பிரியமான மகளுக்கு பாசமான தந்தை ஒரு பரிசு அளிக்கிறார்.
    • ஒரு தந்தை அழுக்கு தண்ணீர் அடைத்த பாட்டிலை மகளுக்கு அன்பு பரிசாக வழங்கி இருக்கிறார்.

    பிரியமான மகளுக்கு பாசமான தந்தை எதை பிறந்தநாள் பரிசாக வழங்குவார்... நல்ல உடை அல்லது டெடி பியர், அல்லது விலை உயர்ந்த வாட்ச், ஐபோன்... இப்படி எதுவாகவும் இருக்கலாம்... ஆனால் ஒரு தந்தை அழுக்கு தண்ணீர் அடைத்த பாட்டிலை மகளுக்கு அன்புப் பரிசாக வழங்கியிருக்கிறார். அது நல்ல வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குகிறது என்றால் நம்புவீர்களா?

    பட்ரீசியா மவ் என்ற பெண், 'நல்ல தந்தையின் பரிசு' என்று அவர் அழுக்கு தண்ணீர் வழங்கியதை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "தந்தை தனக்கு இப்படி ஒரு பரிசை வழங்குவது இது முதல் முறையல்ல. கடந்த காலத்தில், அவர் முதலுதவி பெட்டி, பெப்பர் ஸ்பிரே, என்சைக்ளோபீடியா, ஒரு சாவிக்கொத்து, மற்றும் அவர் எழுதிய புத்தகம்... இப்படி பல பரிசுகளை வழங்கியுள்ளார். " என்று எழுதியுள்ளார்.

    இதை ஏன் கொடுக்கிறேன் என்று தந்தை விளக்கியதையும் அவர் கூறியுள்ளார். "குலுக்கும்போது, அழுக்கு பாட்டிலில் எல்லா இடமும் அசுத்தமாகி காட்சி தரும். அதுபோலவே நாம் வாழ்வில் உணர்ச்சிவசப்பட்டு படபடக்கும் போது எல்லாம் இருளாக (அழுக்காக ) தோன்றும். ஆனால் அமைதியை கடைப்பிடித்தால் அழுக்கு படிந்துவிடுவதுபோல துன்பங்கள் குறைந்து எங்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் பிரதிபலிக்கும்" என்று தந்தை கூறியதாக அவர் பதிவிட்டு உள்ளார். அவரது பதிவு பலரையும் கவர்ந்துள்ளது.

    அடேங்கப்பா அழுக்கு பாட்டிலில் ஜென் தத்துவம்...

    • சம்பவத்தன்று இவர் தனது மகள் நிவேதாவுடன் தனது மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக பொன்னாக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    களக்காடு:

    கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 61). இவர் தூத்துக்குடியில் உள்ள மீன் வளக் கல்லூரியில் ஊழியராக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மகள் நிவேதாவுடன் தனது மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தார். நாங்குநேரி அருகே பாணாங்குளம் நான்குவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முருகேசன், அவரது மகள் நிவேதா படுகாயமடைந்தனர். அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக பொன்னாக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த டிரைவரை தேடி வருகின்றனர்.

    • கனடாவில் வேலை பார்த்து வரும் இந்தியாவை சேர்ந்த ஸ்ருத்வா தேசாய் என்ற மாணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.
    • வீடியோ 10.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், சுமார் 2 லட்சம் விருப்பங்களையும் குவித்துள்ளது.

    தந்தைக்கும், மகளுக்கும் இடையிலான பாசப்பிணைப்பு தனித்துவமானது அதை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கனடாவில் வேலை பார்த்து வரும் இந்தியாவை சேர்ந்த ஸ்ருத்வா தேசாய் என்ற மாணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். மகளை ஆச்சர்யப்படுத்துவதற்காக ஸ்ருத்வா தேசாயின் தந்தை இந்தியாவில் இருந்து கனடா வரை பயணம் செய்துள்ளார். ஸ்ருத்வா தேசாய் வேலை பார்க்கும் கடைக்கு திடீரென அவரது தந்தை சென்றதும் ஆச்சரியத்தின் உச்சிக்கு சென்ற ஸ்ருத்வா தேசாய் தனது தந்தையை கட்டிப்பிடித்துக் கொண்டு உணர்ச்சிவசப்பட்ட காட்சிகளும், அவர் ஆனந்த கண்ணீரில் மூழ்கிய காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றிருந்தன.

    இந்த வீடியோ 10.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், சுமார் 2 லட்சம் விருப்பங்களையும் குவித்துள்ளது. இதை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் இந்த காட்சி கண்களை ஈரமாக்குகிறது. எந்த தந்தையும் தன் மகளை விட்டு பிரிந்துவிடக்கூடாது என்று ஆசைப்படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர் இந்த வீடியோ மிகவும் தூய்மையானது எனவும் பதிவிட்டுள்ளார்.

    ×