search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panchayat election"

    • தினாஜ்பூர் மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்கள் 3 பேரை சுட்டுக்கொன்றனர்.
    • வீடு ஒன்றில் 7 பைகளில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளின் போது எதிர்கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை மனுதாக்கல் செய்யவிடாமல் தடுத்ததாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இதற்கிடையில் தினாஜ்பூர் மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்கள் 3 பேரை சுட்டுக்கொன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

    இன்று காலை பாங்கூர் என்ற பகுதியில் ஆட்கள் யாரும் இல்லாத வீடு ஒன்றில் 7 பைகளில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி அறிந்ததும் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து சென்றனர்.

    7 பைகளில் இருந்த வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வெடிகுண்டுகளை பதுக்கி வைத்தது யார்?என்று தெரியவில்லை. பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்கும் வகையில் நாசவேலைக்காக இந்த குண்டுகளை யாராவது வைத்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது மேற்கு வங்க மாநிலத்தில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஜம்மி-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் 75.2 சதவீதம் வாக்குகள் பதிவாகின. #Kashmirpanchayatelection
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள்  கடந்த 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறுகிறது. நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். எனினும், கடந்த மாதம் நடைபெற்ற நகராட்சி தேர்தல்களில் மக்கள் பெருமளவில் வாக்களித்திருந்தனர்.



    இந்நிலையில், முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தல் கடந்த 17-ம் தேதி நடந்து முடிந்தது. ஜம்மு பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள், காஷ்மீர் பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள் என மொத்தம் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மூன்றாவதுகட்ட தேர்தலில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைந்தது.

    இன்றைய மூன்றாம்கட்ட தேர்தலில் 96 கிராம தலைவர் பதவி மற்றும் 1,437 கவுன்சிலர் பதவிக்கான நபர்கள் போட்டியின்றி ஏற்கனவே தேர்வாகி விட்டனர்.

    மீதமுள்ள 358 கிராம தலைவர் பதவி மற்றும் 1,652 கவுன்சிலர் பதவிக்கு மொத்தம் 5,239 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் தகுதியானவர்களை தேர்தெடுக்க சுமார் 3.20 லட்சம் வாக்களர்கள் தங்களது ஜனநாயக கடமையை இன்று நிறைவேற்றினர்.

    இன்றைய தேர்தலில் ஜம்மு பகுதியில்  அதிகபட்சமாக 83 சதவீதமும், காஷ்மீர் பகுதியில் 55.7 சதவீதமும், ஒட்டுமொத்தமாக 75.2 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது.

    கடந்த 17-ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.1 சதவீதம் வாக்குகளும், 20-ம் தேதி நடந்த இரண்டாம்கட்ட தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தது நினைவிருக்கலாம். இன்று பதிவான வாக்குகள் ஒன்பதுகட்ட தேர்தலும் முடிந்த பின்னர் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #Kashmirpanchayatelection
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடந்து முடிந்த இரண்டாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. #Kashmirpanchayatelection
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள் இன்று (17-ம் தேதி) தொடங்கி 9 கட்டங்களாக நடைபெறவுள்ளது. நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். எனினும், கடந்த மாதம் நடைபெற்ற நகராட்சி தேர்தல்களில் மக்கள் பெருமளவில் வாக்களித்திருந்தனர்.

    இந்நிலையில், முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தல் கடந்த 17-ம் தேதி நடந்து முடிந்தது. ஜம்மு பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள், காஷ்மீர் பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள் என மொத்தம் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இரண்டாவதுகட்ட தேர்தலில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைந்தது.

    இந்த இரண்டாம்கட்ட தேர்தலில் 90 கிராம தலைவர் பதவி மற்றும் 1,069 கவுன்சிலர் பதவிக்கான நபர்கள் போட்டியின்றி ஏற்கனவே தேர்வாகி விட்டனர். மீதமுள்ள 281 கிராம தலைவர் பதவி மற்றும் 1,286 கவுன்சிலர் பதவிக்கு மொத்தம் 4014 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் தகுதியானவர்களை தேர்தெடுக்க மொத்தம் 2,179 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.



    இன்றைய தேர்தலில் ஒட்டுமொத்தமாக 71.1 சதவீதம் வாக்குகள் பதிவாகின, அதிகபட்சமாக ஜம்மு பகுதியில் 80.4 சதவீதமும், காஷ்மீர் பகுதியில் 52.2 சதவீதமும் பதிவாகியுள்ளது. ஜம்முவில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் மிக அதிகபட்சமாக 83.9 சதவிதம் வாக்குகள் பதிவானது.

    இன்றைய தேர்தலில் மிக மோசமாக அனந்த்பூர் மாவட்டத்தில் வெறும் ஒரு சதவீதம் வாக்குகளே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இன்று பதிவான வாக்குகள் ஒன்பதுகட்ட தேர்தலும் முடிந்த பின்னர் எண்ணப்படும். #Kashmirpanchayatelection
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது. #Kashmirpanchayatelection
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள்  இன்று (17-ம் தேதி) தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறவுள்ளது. நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். எனினும், கடந்த மாதம் நடைபெற்ற நகராட்சி தேர்தல்களில் மக்கள் பெருமளவில் வாக்களித்திருந்தனர்.

    இந்நிலையில், முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது.

    காஷ்மீர் மற்றும் ஜம்மு வட்டாரங்களில் ஏற்கனவே 85 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 1676 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 420 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 1845 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தம் 5585 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இதற்காக காஷ்மீர் பகுதியில் 1303 வாக்குச்சாவடிகள், ஜம்முவில் 1993 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 3296 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் காஷ்மீர் பகுதிக்குட்பட்ட 491 வாக்குச்சாவடிகள்,  ஜம்முவில் உள்ள 196 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 687 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன.



    இந்நிலையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றன. பிற்பகல் 2 மணியுடன் இன்றைய வாக்குப்பதிவு நிறைவடையும்.

    இன்று பதிவாகும் வாக்குகள் ஒன்பதுகட்ட தேர்தலும் முடிந்த பின்னர் எண்ணப்படும். #Kashmirpanchayatelection

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல்கள் நவம்பர் 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #J&KPanchayatpolls
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இந்த தேர்தல்களில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய தேர்தல் அப்போது புர்ஹான் வானி என்னும் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற பின்னர் ஏற்பட்ட கலவரம், வன்முறை மற்றும் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது, அங்கு பதற்றம் தணிந்து, இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வரும் அக்டோபர் முதல் தேதி முதல் ஐந்தாம் தேதிவரை நகராட்சி தேர்தல்களும், நவம்பர் 8-ம் தேதியில் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல்களும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாதிகள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

    இதேபோல், தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் பரூக் அப்துல்லாவும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார். உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியும் அறிவித்துள்ளார்.

    காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷலீன் காப்ரா நேற்று அறிவித்தார்.

    மேற்கண்ட நாட்களில் காலை 7 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். 4 கட்ட வாக்குப்பதிவும் முடிந்த பின்னர் அக்டோபர் 20-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என ஜம்மு-காஷ்மீர் மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தல்கள் நவம்பர் 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

    நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறும். இந்த தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படும். பதிவாகும் வாக்குகள் அன்றைய தினமே எண்ணப்பட்டு, இறுதிகட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் முடிவுகள் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி ஷலீன் காப்ரா இன்று அறிவித்துள்ளார். #Panchayatpolls #J&KPanchayatpolls
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறவுள்ள நகராட்சி, பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களுக்கு காஷ்மீர் பிரிவினைவாதிகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. #Panchayatelectionsboycott #JKPanchayatelections
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இந்த தேர்தல்களில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. 

    இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய தேர்தல் அப்போது புர்ஹான் வானி என்னும் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற பின்னர் ஏற்பட்ட கலவரம், வன்முறை மற்றும் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது, அங்கு பதற்றம் தணிந்து, இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் வரும் அக்டோபர் முதல் தேதி முதல் ஐந்தாம் தேதிவரை நகராட்சி தேர்தல்களும், நவம்பர் 8-ம் தேதியில் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல்களும் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாதிகள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை இன்று வலியுறுத்தியுள்ளனர்.

    பிரிவினைவாதிகள் சையத் அலி கிலானி, மிர்வாயிஸ் உமர் பாரூக் மற்றும் யாசின் மாலிக் ஆகியோர் ஹைதர்போரா பகுதியில் உள்ள சையத் அலி கிலானியின் இல்லத்தில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    பின்னர், கூட்டு எதிர்ப்பு தலைமை (Joint Resistance Leadership) என்ற பெயரில் இன்று மாலை இவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வாழும் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், இங்குள்ள நிறுவனங்களை பலப்படுத்துவதிலும் அக்கறை காட்டாத மத்திய அரசு பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்களை  நம்மீது பலவந்தப்படுத்தி, திணிக்க நினைக்கின்றது.

    மக்கள்மீது முன்னரும் திணிக்கப்பட்ட இதுபோன்ற தேர்தல்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மீதான டெல்லியின் பிடியையும் அதிகாரத்தையும் பலப்படுத்துவதற்குதான் துணை புரிந்துள்ளன. எனவே, இந்த தேர்தல்களை நாம் புறக்கணிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற காஷ்மீர் சட்டசபை தேர்தலின்போதும், தேர்தலை புறக்கணிக்குமாறு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

    ஆனால், அதை பொருட்படுத்தாத மக்கள் அம்மாநில சட்டசபை தேர்தலில் கடந்த 25 ஆண்டுகால வரலாறு காணாத வகையில் சுமார் 65 சதவீதம் வாக்குகளை பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Panchayatelectionsboycott  #JKPanchayatelections
    மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்துள்ளதால் தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என யெச்சூரி வலியுறுத்தியுள்ளார். #Yechury #PanchayatElection #Pollviolence
    புது டெல்லி :

    மேற்கு வங்காளம் மாநிலத்தின்பஞ்சாயத்து தேர்தல் வாக்குபதிவு  இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரும் கலவரம் வெடித்துள்ளது.

    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர்  சீதாராம் யெச்சூரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது :-

    தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மையை மேற்கு வங்காள தேர்தல் ஆணையம் மீட்டெடுக்க வேண்டும். இல்லையேல் ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் திரிணாமுல் காங்கிரஸின் செயலுக்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருப்பது போலாகிவிடும்.

    மேலும்,  ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் திரிணாமூல் காங்கிரசின் இந்த செயல் மேற்கு வங்காள மாநிலத்துக்கு வெளியிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறு யெச்சூரி தெரிவித்துள்ளார். #Yechury #PanchayatElection #Pollviolence
    ×