search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rabid dog"

    • சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களான நட்சத்திர ஏரி, கலையரங்கம் பகுதிகளில் அண்மைக்காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • சுமார் 4 க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் தூய்மை பணியாளர்கள் உட்பட பொதுமக்கள் சிலரை கடித்து காயப்படுத்தியது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களான நட்சத்திர ஏரி, கலையரங்கம் பகுதிகளில் அண்மைக்காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கலையரங்கம் பகுதியில் சுமார் 4 க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் தூய்மை பணியாளர்கள் உட்பட பொதுமக்கள் சிலரை கடித்து காயப்படுத்தியது. உடனே காயம் பட்டவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள் அலட்சியத்தால் இது போன்ற செயல்கள் நடைபெறுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே வெறி நாய்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    • மாநகராட்சி ஊழியர்கள் தெருநாய்களை பிடித்து கருத்தடை ஆபரேஷன்
    • விரட்டி விரட்டி பிடித்து சென்றனர்

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. அவைகள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளையும், நடந்து செல்லும் பாதசாரிகளையும் இடையூறு ஏற்படுத்துகின்றன. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளை அச்சுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவிலுக்கு ஏராளமா னவர்கள் வந்திருந்தனர். மேலும் அங்கு பஸ் நிறுத்ததிலும் பொதுமக்கள் பலர் நின்றிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த வெள்ளை நிற தெருநாய் ஒன்று திடீரென அங்கிருந்த பொதுமக்களை கடிக்க தொடங்கியது. ஒருவரை அடுத்து ஒருவரை விடாமல் துரத்திச் சென்று அந்த நாய் கடித்தது. இதைப்பார்த்ததும் பயத்தில் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். சிலர் நாயை அங்கிருந்து விரட்ட முயன்றனர். எனினும் நாய் அவர்களை விடாமல் கடித்தது. நடந்து சென்றவர்கள் மட்டுமில்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களையும் பதம் பார்த்தது. பொதுமக்கள் திரண்டு விரட்டியதும் அந்த நாய் அங்கிருந்து சர்வீஸ் சாலை வழியாக ஓடியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு சுமார் 30 பேரை கடித்தது.

    பொதுமக்களை நாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து சத்துவாச்சாரி பகுதியில் இன்று மாநகராட்சி சார்பில் நாய்களை பிடிக்கும் பணி நடந்தது.

    சத்துவாச்சாரி கெங்கை அம்மன் கோவில் வளாகம் பெரிய தெரு பள்ளிக்கூட தெரு கானார் தெரு பகுதிகளில் சுற்றித்திரிந்த தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் வலைகள் மற்றும் சுருக்கு கம்பிகளைக் கொண்டு பிடித்தனர்.

    அப்போது தெரு நாய்கள் அவர்களை கண்டு ஓட்டம் பிடித்தன. நாய்களை விரட்டி விரட்டி பிடித்தனர்.கலெக்டர்அலுவலக வளாகம் மற்றும் அதன் அருகில் நின்றநாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர். இன்று காலை வரை சுமார் 20 தெருநாய்கள் பிடிக்கப்பட்டன.

    பிடிபடும் தெரு நாய்கள் வேலூர் கோட்டை அருகே உள்ள கால்நடை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வைத்து தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் மற்றும் வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்த நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தெருநாய் விஷயத்தில் மட்டுமின்றி செல்லப்பிராணிகளிடம் நாம் கவனமுடன் இருக்க வேண்டும் என்கிறார் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி பொதுமருத்துவத்துறை பேராசிரியர்
    • நாய்கடித்த நாளே தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம்

     திருப்பூர் :

    பெரும்பாலும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை விட, சாலையில் சுற்றித்திரியும் நாய்களே பிறரை கடிப்பவையாக இருப்பது குறித்து குற்றச்சாட்டு எழுகிறது.தெருநாய் விஷயத்தில் மட்டுமின்றி வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளிடம் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். தக்க நேரத்தில் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்கிறார் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி பொதுமருத்துவத்துறை இணை பேராசிரியர் செண்பகஸ்ரீ.இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாய்களிடம் குழந்தைகள், கர்ப்பிணிகள் மிக கவனமாக இருக்க வேண்டும். நாய் அருகில் குழந்தைகளை தனியே விளையாட விடக் கூடாது. முன்னெச்சரிக்கை முக்கியம்.நாய் கடித்தால் மறைக்காமல், சொல்ல வேண்டுமென பெற்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.நாய் கடித்தது ஆனால் ரத்தம் வரவில்லை. பற்கள் பதியவில்லை, லேசாக நகத்தில் பிராண்டியது என்றாலும், டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    நாய்க்கடிக்கு பொதுவாக முதல்நாள், 3-வது, 7-வது, 14 மற்றும் 28வது நாள் என 5 தடுப்பூசி செலுத்தப்படுகிறது.நாய்கடித்தவர் ஒருமுறை தடுப்பூசி செலுத்துமிடத்தில் பதிவு செய்து விட்டால் மறுமுறை அங்கு தான் வர வேண்டும் என்பதில்லை. பதிவு செய்து பதிவுஅட்டை பெற்று எந்த மருத்துவமனையிலும் வேண்டுமானாலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஆனால் கட்டாயம் 5 தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டும்.நாய்க்கடித்து சரியான நேரத்துக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல், அலட்சியமாக இருந்து விட்டால் 6மாதம் கழித்து கூட தொந்தரவு வர வாய்ப்புள்ளது. எந்த நாயிடம் ரேபிஸ் கிருமி இருப்பது என்பது நமக்கு தெரியாது.

    நாய்க்கடி வேறு, வெறிநாய்க்கடி வேறு. கடித்த நாய்க்கு ரேபிஸ் கிருமி இருந்தால் நமக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.தடுப்பூசி போடவில்லையென்றால், ரேபிஸ் வைரஸ் நரம்புகளில் குடியேறும். வீரியத்தை காட்டும். தண்ணீர் குடிக்க, சாப்பிட பிரச்னை ஏற்படும். நரம்புகள் பாதிப்பதால் உணவு எடுக்க முடியாமல் இறப்பை தழுவ நேரிடலாம்.நாய் கடித்த இடத்தை தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். ரத்த போக்கு குறைந்தவுடன், நாய்கடித்த நாளே தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம்.இவ்வாறு டாக்டர் செண்பகஸ்ரீ கூறினார்.

    ×