

வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த புலம் பெயர் தொழிலாளி ராம் சந்தர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவைச் சேர்ந்த ராம் சந்தர் என்பவருக்கு வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் அறிவிப்பு பலகையின் கண்ணாடியை உடைத்து கழுத்தை அறுத்து தனது உயிரை மாய்த்து அவர் கொண்டார் .