என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Snakebite"

    • தனது க்ராக்ஸ் ஷூக்களை கழற்றிவிட்டு ஓய்வெடுக்க தனது அறைக்குச் சென்றார்.
    • அதனால் பாம்பு கடித்ததை பிரகாஷால் உணரமுடியவில்லை

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஷூவுக்குள் இருந்த பாம்பு கடித்து ஐடி ஊழியர் ஒருவர் பரிதாபகமாக உயிரிழந்தார்.

    இறந்தவர் பெங்களூருவின் பன்னேர்கட்டாவில் உள்ள ரங்கநாத லேஅவுட்டைச் சேர்ந்த மஞ்சு பிரகாஷ் ஆவார்.

    டிசிஎஸ் ஊழியரான பிரகாஷ்,நேற்று, அருகிலுள்ள கரும்புக் கடைக்குச் சென்றுவிட்டு மதியம் 12.45 மணியளவில் வீடு திரும்பியதாகவும், பின்னர் தனது க்ராக்ஸ் ஷூக்களை கழற்றிவிட்டு ஓய்வெடுக்க தனது அறைக்குச் சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

    சிறிது நேரம் கழித்து, ஷூவின் அருகே பாம்பு இறந்து கிடப்பதைக் கண்ட குடும்ப உறுப்பினர்கள், அறைக்குச் சென்று பிரகாஷை பார்த்தனர். பிரகாஷ் வாயில் நுரை தள்ளியதாகவும், காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து ரத்தம் வழிந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    பின்னர் பிரகாஷை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

    2016 ஆம் ஆண்டு நடந்த ஒரு கார் விபத்தில் பிரகாஷின் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இதன் பின் பிரகாஷின் ஒரு காலில் எந்த உணர்வும் இல்லை. அதனால் பாம்பு கடித்ததை பிரகாஷால் உணரமுடியவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர்.  

    • மத்திய பிரதேசத்தில் விஷப்பாம்பு ஒன்று இளைஞரை கடித்துள்ளது.
    • அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பாம்பு உயிரிழந்து போனது.

    போபால்:

    பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்பிடம் இருக்கும் விஷமே அதற்கு காரணம். விஷமுள்ள பாம்பு மனிதன் ஒருவனை தீண்டினால் அவனது உயிர் போய்விடும். இதனாலேயே, பாம்பைக் கண்டால் அனைவரும் அலறி ஓடி விடுகின்றனர்.

    இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் பாலகாட் மாவட்டத்தில் இளைஞரை கடித்த பாம்பு ஒன்று இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    குட்சோடி கிராமத்தில் வசித்து வரும் சச்சின் நாக்பூரே (25), என்ற இளைஞர், தற்செயலாக பாம்பு ஒன்றை மிதித்துள்ளார். அப்போது, விஷப் பாம்பு அவரைக் கடித்துள்ளது. அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பாம்பு இறந்து போனது.

    பாம்புக் கடியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சச்சின் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது அரிதிலும் அரிதான நிகழ்வு என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மனிதனை கடித்து பாம்பு இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

    • 78வது உலக சுகாதார சபையில், உலகளாவிய பாம்புக்கடி பணிக்குழு வெளியிட்ட அறிக்கை இதை வெளிப்படுத்தி உள்ளது.
    • பாம்புக்கடி சிகிச்சைக்கான பயனுள்ள வசதிகள் கூட இல்லை என்பதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

    உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5.4 மில்லியன் மக்கள் பாம்புகளால் கடிக்கப்படுகிறார்கள், இதன் விளைவாக 81,000 முதல் 138,000 வரை இறக்கின்றனர். இந்நிலையில் உலகளவில் பாம்புக்கடி இறப்புகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

    சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற 78வது உலக சுகாதார சபையில், உலகளாவிய பாம்புக்கடி பணிக்குழு வெளியிட்ட அறிக்கை இதை வெளிப்படுத்தி உள்ளது.

    'Time to Bite Back: Catalyzing a Global Response to Snakebite Envenoming' என்ற அறிக்கை, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 58,000 இறப்புகள் பதிவாகின்றன என்று தெரிவித்துள்ளது.

    உலகளவில் பாம்புக்கடியால் ஏற்படும் இறப்புகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம் இந்தியாவில் நிகழ்கிறது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

    பெரும்பாலான இறப்புகள் ஏழை மற்றும் பழங்குடி சமூகங்களிடையே நிகழ்கின்றன. பாரம்பரிய மருத்துவத்தை நம்பியிருப்பதால் சிகிச்சையில் தாமதம் ஏற்படுகிறது மற்றும் தரமான பராமரிப்பு இல்லாததால் இறப்புகள் ஏற்படுகின்றன.

    2030 ஆம் ஆண்டுக்குள் பாம்புக்கடியால் ஏற்படும் இறப்புகள் மற்றும் குறைபாடுகளை பாதியாகக் குறைக்க வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் இலக்கை அடைவதில் இந்தியா சவால்களை எதிர்கொள்கிறது என்பதையும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

    பொது சுகாதார ஆர்வலரும் அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவருமான டாக்டர் யோகேஷ் ஜெயின் கூறுகையில், "பாம்புக்கடி மரணங்களைத் தடுக்க இந்தியா தவறிவிட்டது. அதன் சுகாதார அமைப்பு எப்போதும் தயாராக இல்லை. மருத்துவர்களிடம், திறம்பட சிகிச்சையளிப்பதற்கான பயிற்சி, உபகரணங்கள் அல்லது நம்பிக்கை பெரும்பாலும் இல்லை" என்று கூறினார்.

    2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த அறிக்கை, பாம்புக்கடி இறப்புகளைக் குறைப்பதில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டுகிறது.

    இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமூக சுகாதார மையங்களில் பாம்புக்கடி சிகிச்சைக்கான பயனுள்ள வசதிகள் கூட இல்லை என்பதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 

    • காளியப்பன் ரெட்டியாபுரம் விலக்கில் உள்ள பஸ் நிறுத்தத்தில் படுத்திருந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு காளியப்பன் அனுப்பி வைக்கப்பட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் தெற்கு வீரவநல்லூர் பெரியார் நகரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது58). கூலித் தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள ரெட்டியாபுரம் விலக்கில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்று மாலை படுத்திருந்தார். அப்போது அவரை பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் வாயில் நுரை தள்ளியவாறு காளியப்பன் மயங்கி கிடந்தார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சேரன் மகா தேவி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பல னின்றி இன்று அதிகாலை காளியப்பன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்தியா முழுவதும் 30-40 லட்சம் பேர் பாம்பு கடியால் பாதிக்கப்படுகின்றனர் என்று சரண் எம்.பி., கேள்வி எழுப்பினார்.
    • பாம்பு கடியால் உலகிலேயே இந்தியாவில்தான் அதிக உயிரிழப்பு ஏற்படுவதாக பாஜக எம்.பி. கூறினார்.

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. அதில் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை எம்.பி.க்கள் எழுப்பினர். அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும், இந்தியா முழுவதும் 30-40 லட்சம் பேர் பாம்பு கடியால் பாதிக்கப்படுகின்றனர் என்று சரண் எம்.பி., விவாதத்தின் போது இந்த பிரச்சினையை எழுப்பினார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாம்பு கடியால் உலகிலேயே இந்தியாவில்தான் அதிக உயிரிழப்பு ஏற்படுவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இதனால் 50,000 பேர் உயிரிழக்கின்றனர் எனவும் பாஜக எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஏழ்மை மற்றும் இயற்கை பேரிடர் இரண்டையும் தாங்கி வாழும் ஏழ்மையான மாநிலம் பீகார். இந்தியா முழுவதும் 30 முதல் 40 லட்சம் பேரை பாம்பு கடிக்கிறது. அதில், 50,000 பேர் உயிரிழக்கிறார்கள். இது உலகிலேயே அதிகம். பல இறப்புகளைத் தடுக்க முடியும். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட தாக்கம், பாம்புக்கடி சம்பவங்களை அதிகரிக்கிறது. என்றார்.

    ×