search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியலில் இளைஞர்களை சேர்க்க பாடுபட வேண்டும்
    X

    கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசியபோது எடுத்த படம்.

    வாக்காளர் பட்டியலில் இளைஞர்களை சேர்க்க பாடுபட வேண்டும்

    • தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்
    • நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் குருந்தன்கோடு கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குருந்தன்கோடு ஊராட்சி, வெள்ளிச்சந்தை ஊராட்சி போன்ற பகுதி களில் தி.மு.க. செயல்வீரர் கூட்டம் ஒன்றிய செய லாளர் சுரேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. அவைத் தலைவர் நிஜாம், துணை செயலாளர் தாமஸ் கென்னடி, பொருளாளர் பெர்வின் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் பங்கேற்று ஆலோசனை வழங்கினார். வருகிற 26, 27-ந் தேதிகளில் நடைபெறும் வாக்காளர் பட்டியரில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் இளையோர் களை ஊக்குவித்து முகாமில் கலந்து கொண்டு பயனடைய செய்ய பாடுபட வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டும் வேட்பாளர் வெற்றிபெற உழைக்க வேண்டும்.

    வாக்குச்சாவடி முக வர்களை உடனே நியமிக்க வேண்டும், அரசின் சாதனைகளை விளக்கி தொடர் தெருமுனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்திட வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    Next Story
    ×