search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துப்பேட்டையில் இளைஞர் திறன் திருவிழா
    X

    திறன் பயிற்சியில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்.

    முத்துப்பேட்டையில் இளைஞர் திறன் திருவிழா

    • திறன் பயிற்சியில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • மகளிர் திட்ட இயக்குநர் வடிவேல் தலைமையில் நடைபெ‌ற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இளைஞர் திறன் திருவிழா மாரிமுத்து எம்.எல்.ஏ. , மகளிர் திட்ட இயக்குநர்வடிவேல் ஆகியோர் தலைமையில் நடைபெ‌ற்றது.உதவி திட்ட இயக்குநர் தில்லைமணி கண்ணன் வரவேற்புரை வழங்கினார்.

    இந்த திறன் பயிற்சியில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கனிஅமுதா ரவி, பேருராட்சி தலைவர் மும்தாஜ் நவாஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அமுதாமனோகரன் மற்றும்தமயந்தி, பேருராட்சி செயலாளர் கார்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி மற்றும் கமல்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் உமேஷ்பாபு, நகர செயலாளர் காரல் மார்க்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

    முடிவில் வட்டார இயக்க மேலாண்மை மேலாளர் ராதிகா நன்றி தெரிவித்தார்.

    Next Story
    ×