என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காளி"
- அருணகிரிநாதர் முருகப்பெருமானின் தீவிர பக்தர்.
- அரசவைப்புலவராக இருந்த சம்பந்தன் காளி தேவியிடம் வரங்கள் பல பெற்றவர்.
அருணகிரிநாதர் முருகப்பெருமானின் தீவிர பக்தர்.
அரசவைப்புலவராக இருந்த சம்பந்தன் காளி தேவியிடம் வரங்கள் பல பெற்றவர்.
அருணகிரிநாதரின் புகழில் பொறாமையுற்ற சம்பந்தன்,
தனக்கும் அருணகிரிநாதருக்குமிடைய ஒரு போட்டியை ஏற்பாடு செய்யுமாறு மன்னரைக் கேட்டுக்கொண்டார்.
அதாவது இருவரில் யார் தங்களுடைய கடவுளை நேரில் தோன்ற செய்விப்பது என்பது தான் போட்டி.
இப்போட்டியில் சம்பந்தனால் தனது தெய்வமான காளியைத் தோன்ற செய்ய இயலவில்லை.
ஆனால் அருணகிரிநாதர் வேண்டுதலின் பேரில் முருகப்பெருமான் நேரில் காட்சியளித்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பின் இத்தலம் (திருவண்ணாமலை) முருகபக்தர்கள் யாத்திரை செல்லும் புகழ் மிக்க தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
- மருத்துவச்சியோ ஏதோ கெடுதி நடப்பதற்கான அறிகுறி கனவாக கண்டது போல் திடுக்கிட்டு எழுந்தாள்.
- மனைவி காளி தேவியின் அம்சம் ஆவார்.
ஆனைமலை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இளம் கணவன் மனைவி வாழ்ந்து வந்தார்கள். இனிதே வாழ்ந்த இல்லாள் நிறைமாத கர்ப்பிணியானாள். ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பினால் பிரியமனமின்றி அவள் தன் தாய்வீடு செல்லாமல் கணவருடனே இருந்தாள்.
பிள்ளை பேறுகாலம் நெருங்கி விட்டது. இடுப்பு வலி ஆரம்பித்தது. மனைவியின் வேதனையைக் கண்ட கணவன் மருத்துவச்சியை அழைத்து வர புறப்பட்டான். ஆனால் மனைவியை தனியாக விட்டுவிட்டு செல்வதற்கு மனமில்லை. துணைக்கு ஒருவரும் இல்லை.
நன்றாக இருட்டி விட்டது. பகலிலே செல்வதற்கே அச்சமாக இருக்கும் அடர்ந்த காடு, திருடர்கள் துஷ்டர்கள் பயம் வேறு அதிகம். என்ன செய்வது என்று யோசித்தான். அவளுக்கோ பேறுகால வேதனை அதிகமானது.
கணவனின் தவிப்பை புரிந்து கொண்ட அவள் கணவனை பார்த்து, இனியும் நான் இங்கிருப்பது சரியல்ல. என் தாய்வீடு இரண்டு கல் தொலைவில் உள்ளது. அந்த ஊரில் தெய்வீகத் தன்மையுடையவளும் தர்ம சிந்தனையும் கொண்ட ஒரு மருத்துவச்சி இருக்கிறாள் அவள் முக்காலம் உணர்ந்தவள். பின்வருவதை முன் சொல்லும் ஆற்றல் உடையவள். என்னை அங்கு அழைத்துச் செல்லுங்கள். நான் மெதுவாக நடந்து வருகிறேன் என்றாள்.
அவள் சொல்வது அவனுக்கு சரி எனப்பட்டது. இருவரும் புறப்பட்டார்கள். மெதுவாக நடந்து ஒரு கல் தொலைவு சென்றார்கள். மை இருட்டாக இருந்தது. ஆந்தைகளின் அலறலும், கோட்டான்களின் சத்தமும் அச்சத்தை அதிகப்படுத்தியது. அவளுக்கோ பிரசவ வலி அதிகமானது.
கால்கள் பின்னின் ஓரடி எடுத்து வைப்பதும் கடினமாக இருந்தது. அவன் கைதாங்கலாகப் பிடித்து கொண்டான். ஆனாலும் வேதனை அதிகமானதால் என்னால் இனி நடக்க முடியாது என்று உட்கார்ந்து விட்டாள். அவன் என்ன செய்வது என்று புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தான். ஊரை நெருங்கி தான் விட்டார்கள். அதோ விளக்கொளி தெரிந்தது.
ஆனால் அவளோ வேதனை தாங்க முடியாதபடி, என்னால் நடக்க முடியாது, நீங்கள் வரும் வரை நான் பத்திரமாக இருக்கிறேன், நீங்கள் சென்று வாருங்கள், என்று கணவனை அனுப்பி வைத்தாள்.
அவனும் வேறு வழியின்றி மிகுந்த மனக்கஷ்டத்துடன் உன் விருப்பப்படியே சென்று வருகிறேன் நீ தைரியமாக இரு என்று கூறி விரைந்து வெளிச்சம் வந்த திசை நோக்கிச் சென்றான்.
அங்கு சென்று விசாரித்து மருத்துவச்சியின் வீட்டுக் கதவை தட்டினான்.
மருத்துவச்சியோ ஏதோ கெடுதி நடப்பதற்கான அறிகுறி கனவாக கண்டது போல் திடுக்கிட்டு எழுந்து கதவைத் திறந்தாள். அவன் தன் மனைவி பற்றி கூறி உதவிக்கு அவளை அழைத்தான். உடனே அவள் மருத்துவத்திற்கான பொருட்களை எடுத்துக் கொண்டு தயாரானாள்.
அதற்குள் அக்கம் பக்கத்தில் விசாரித்து அந்த ஊர் நாட்டாமை, பூசாரி மற்றும் விவரமான சில ஆட்களை அழைத்துக் கொண்டு வந்தான்.
அதற்குள் மருத்துவச்சியும் கதவை பூட்டிக் கொண்டு கிளம்பி விட்டாள். அனைவரையும் அழைத்துக் கொண்டு அவன் விரைந்து நடந்தான்.
ஆனால் அவன் மனைவியை அங்கு காணவில்லை. அப்பொழுது கடவுளே இது என்ன சோதனை நான் கண்ட கனவு நிஜமாகியதே என்று மருத்துவச்சி கதறிக் கொண்டு ஓர் இடத்திற்கு ஓடினாள். அங்கே மிகவும் கோரமான காட்சியைக் கண்டார்கள். அவன் மனைவி இறந்து கிடந்தாள்.
கதறி அழுத அவன் மருத்துவச்சியை நோக்கி தாயே என் மனைவியும் குழந்தையை இப்படி கோரமாக இறந்து கிடப்பதற்கும், நீங்கள் ஏதோ கனவு கண்டதாகச் சொன்னீர்களே அதற்கும் என்ன சம்பந்தம்? என்று வேதனையுடன் கேட்டான். இதைக் கேட்டதும் அந்த மருத்துவ மூதாட்டி தான் கண்ட கொடூரக் கனவு பற்றி கூறினாள்.
உங்கள் மனைவி காளி தேவியின் அம்சம் ஆவார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், இந்த காட்டுப்பகுதியில் வந்த போது அரக்கன் ஒருவன் அவளை வழிமறித்தான். அந்த அரக்கனிடம் இருந்து தப்ப அவள் ஓடினாள். அப்போது ஓடும் வேகத்தில் அங்கு கிடந்த மாட்டுச்சாணியில் கால் வைத்து வழுக்கி விழுந்து விட்டாள். துரத்திக் கொண்டு வந்த வஞ்சகன் அவளைத் தொட முயன்றான்.
காளிதேவியை, உலக ரட்சகி, ஜெகன் மாதா என்று தெரிந்தும் அவளின் கையைப் பிடித்தான். அவ்வளவுதான். மேகம் திரண்டு மின்னலடித்து மின்னல் தாக்கிய அவன் கண் குருடாக அலறிக் கொண்டு ஓடினான். என்ன நடந்தது? என்று உணரும் முன் அவள் கீழே சரிந்தாள்.
கர்ப்பத்தில் இருந்த சிசுவும் உயிரற்று வெளியில் வந்தது. அவள் உடலிருந்து ஆவி ஜோதி ரூபமாகி வானளாவி நின்றது. அதில் கோடி சூரியப்பிரகாசமாய் ஒளிர்ந்தது. மேல் எழும்பிய ஜோதி, காளி போல் ஆக்ரோஷமாக சுழன்று அவனை பிடித்து இழுத்து நெஞ்சைப் பிளந்து கொண்டு வந்து அப்பெண்ணின் காலடியில் போட்டது. இப்படித்தான் நான் கனவு கண்டேன் என்று அந்த மருத்துவச்சி கூறினாள்.
இதை கேட்ட கணவன் அழுது புலம்பினான். இந்த அடர்ந்த காட்டில் என் மனைவியை தனியே விட்டு இந்த நிலைமைக்கு ஆளாகி விட்டனே! தெய்வமே இது என்ன சோதனை, என் மனைவியையும் குழந்தையையும் இப்படி பறிகொடுத்துட்டேனே என்று கண்ணீர் விட்டான்.
அங்கு கூடி இருந்தவர்கள் அதிர்ச்சியுற்று செய்வதறியாது திகைத்து நின்றார்கள். அப்பொழுது அவர்கள் எல்லோரையும் பார்த்து ஞானிக்கு நிகரான மருத்துவ முதாட்டி இறந்து போன தாயும் சேயும் சாதாரணமானவர்கள் அல்ல. இவர்கள் அம்மனின் அவதாரம். இவர்கள் சாதாரணமாக பிறக்கவில்லை.
வானத்தில் இருந்து மண்ணிற்கு தேவதைகள் போல தேரில் வந்தவர்கள். விண்ணகத்திலுள்ள தேவர்களும் முனிவர்களும் பூமாரி பொழிவது என் அகக்கண்களுக்குத் தெரிகிறது. இவர்கள் அவதார நோக்கம் நிறைவேறியபடியால் மீண்டும் தெய்வமானார்கள் என்றாள்.
மாட்டுச்சாணியில் வழுக்கி விழாமல் இருந்திருந்தால் வேறு ஏதாவது நடந்திருக்கலாம் என்று அங்கிருந்த நாட்டாமைக்காரர் கூறினார். அதற்கு மூதாட்டி, அய்யா அது அப்படி இல்லை இவளின் மானிடப் பிறவி எடுத்து இந்த சாணியை மிதித்தால் இது சாப விமோச்சனம் அடைந்தது என்று கூறினாள்.
சாணிக்கு சாப விமோச்சனமா? அது எப்படி? என்று அந்த ஊர் பூசாரி கேட்க, மீண்டும் மருத்துவ மூதாட்டி ஒரு விளக்கம் அளித்தாள்.
முன்னொரு காலத்தில் தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் வேண்டி திருபாற்கடலை கடைந்த போது அதில் இருந்து காமதேனு கற்பகவிருட்சம் போன்ற பல அரிய பொக்கிஷங்கள் கிடைத்தன.
அதில் காமதேனுவையும், கற்பக விருட்சத்தையும், வெள்ளையானை (ஐராவதம்) ஆகியவற்றை தேவர்கள் எடுத்துக் கொண்டார்கள். அதைக் கண்டு பொறுக்காத அசுரர்கள் காமதேனுவை கைப்பற்ற ஆசை கொண்டு அதை இழுத்துச் செல்ல முயன்றார்கள். இதை உணர்ந்த காமதேனு பார்வதி பரமேஸ்வரனை தியானித்து அடைக்கலம் வேண்டி சரணடைந்தது. அதற்கு இரங்கி பார்வதி பரமேஸ்வரரும் அஞ்சாதே என்று கூறி ஒரு நந்தவனத்தில் அடைக்கலம் கொடுத்தார்கள்.
இதற்கிடையில் தேவர்கள் தங்கள் காமதேனுவை காணாமல் தேடி அலைந்தார்கள். முடிவில் பார்வதி பரமேஸ்வரனிடம் முறையிட எண்ணி தவம் இருந்தனர். இது கண்ட பார்வதி தேவியும், காமதேனுவைப் பார்த்து உன்னை அழைத்துச் செல்ல தேவர்கள் வந்திருக்கிறார்கள் என்று கூற அப்பொழுது காமதேனு அசுரர்கள் பிடித்து இழுத்த போது ஏற்பட்ட பயம் காரணமாக பார்வதி தேவியின் முன்தான் சாணம் போட்டதை இழிசெயலாக கருதி வருத்தப்பட்டது.
அதற்கு பார்வதிதேவி, நீ செய்த இச்செயல் வருந்தத்தக்கதல்ல. இது நான் இந்த பூமியில் அவதாரம் எடுப்பதற்காகவே நடந்தது என்றாள்.
காமதேனுவும் மகிழ்ந்து தேவியிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தது. தாயே ஈஸ்வரி பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல உன் அவதாரத்தோடு என் பெயரும், இந்த நந்தவனமும் புனிதமாக விளங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
தேவியும் ஆகட்டும் என அருள்பாலித்து மேலும் காமதேனுவிடம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் எப்படி உருமாறி அவதாரமெடுத்து வந்தாலும் மக்கள் அடையாளம் கண்டு என்னை போற்றி வழிபடுகிறார்களோ, அதுபோல் உன் அம்சமாக வழிவரும் பசுக்களால் போடப்படும் சாணமும், கோமியமும் புனிதப் பொருளாக கருதப்படும்.
தேவர்களும், மானுடர்களும் அவைகளை துஷ்ட நிவாரணியாக பூஜாதிகாரியங்களுக்குப் பயன்படுத்துவார்கள். உன் அம்சமாக பூமியில் விளங்கும் பசுக்களை கோமாதா என அனைவரும் வணங்குவார்கள் என்று ஆசீர்வதித்தாள்.
காமதேனுவும் அன்னையின் அன்பான அருள்வாக்கினால் பயம் தெளிந்து மகிழ்ச்சியுடன் வணங்கி விடைபெற்றுச் சென்றது. காமதேனுவை தேவர்களிடம் கொடுத்து பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படியாகச் சொன்னாள்.
இந்த காடே அந்த நந்தவனம். அம்பிகையின் அவதாரமான இந்த பெண் இங்கு கிடந்த புனிதமான சாணியில் வழுக்கி விழுந்து நமக்கெல்லாம் அடையாளம் காட்டி நாம் பூஜிக்கும் அம்மனாக அவதரித்துள்ளாள் என்றாள்.
மேலும் இந்த பெண் பிறவியில் பிரியவிரதன் மகளாகப் பிறந்து அம்பிகையின் குழந்தையாக ஆட்கொள்ளப்பட்டாள் என்றும் மருத்துவ மூதாட்டி கூறினாள். அப்படியா அது என்ன கதை என்று அனைவரும் கேட்டனர். அதற்கும் மூதாட்டி விளக்கம் அளித்தனர். அப்பெண்ணின் கணவன் பிரியவிரதன் யோகமார்க்கமே சிறந்ததென்று இல்லறம் ஏற்காமல் வாழ்ந்து வந்தான். இது கண்ட பிரியவிரதனின் தந்தை மகனிடம் நீ இல்லறம் ஏற்காவிடில் உனக்கு பிதுர்க்கடன் செய்ய கூட புத்திரபேறு இல்லாமல் போய்விடுமே என்றான்.
ஆனால் மகனோ திருமணத்தை மறுக்கவே பிரிய விரதனின் மனம் மாறியது. அவனுக்கு திருமணமானது. ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் புத்திர பாக்கியம் இல்லை.
இதனால் கவலையடைந்த பிரியவிரதனும் அவன் மனைவி மாலதியும், புத்திர காமேஷ்டி யாகம் செய்து ஈஸ்வரியை தியானிக்க, தாயும் அருள் கனிந்தாள். மாலதி கருவுற்று நிறைமாத கர்ப்பிணியானாள்.
அவளுக்கு பேறுகாலத்தின் போது தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்த சிசு, வானத்தை பார்த்த விழிகளுடன் மல்லாந்து இருந்து அது வெறித்துப் பார்த்தபடி உயிரற்றுக் கிடந்தது. இது கண்டு பெற்றோர் துடித்தார்கள்.
அழுது புலம்பி அந்த ஆதிபராசக்தியிடம் முறையிட்டார்கள். குழந்தையை அம்மன் காலடியில் போட்டான் பிரியவிரதன். திருமணம் வேண்டாம் என்றிருந்த என் மனதை மாற்றி என்னை சம்சாரசாகரத்தில் வீழ்த்தி பாசவலைக்குள் போட்டாயே நான் என்ன பாவம் செய்தேன்? இந்த கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை. என் உயிரையும் எடுத்துக்கொள் என புரண்டு அழுதான்.
கருணை உள்ளம் கொண்ட சக்திதேவி மனம் இரங்கி ஜோதி ரூபவதியாக காட்சியளித்தாள். பிரிய விரதா மனம் கலங்காதே. இன்ப துன்பங்கள் நிறைந்ததுதான் இல்லறம். இக்குழந்தை என்னுடைய அம்சமாக உனக்கு வந்து பிறந்துள்ளது. என் அருளால் இது உயிர்பெறும். உனக்கு நீ விரும்பியது போல் ஆண் குழந்தை பிறக்கும்.
அதுவரை இப்பெண் குழந்தையை அன்போடு வளர்த்துவா. குறிப்பிட்ட காலத்தில் அவள் என்னோடு ஐக்கியமாவாள். பிறகு காமதேனுவின் வேண்டுகோளுக்கேற்ப மறுபடியும் என் அம்சமாக தர்மத்தை காக்க இப்பூமியில் அவதரிப்பாள் என கூறி அருள்புரிந்தாள்.
அதன்படி மாலதியின் குழந்தையாக அவதரித்து இன்று மண்ணில் துஷ்டனை சம்ஹாரம் செய்து தர்மத்தை காக்கும் பொருட்டு காமதேனுவின் மாட்டுச்சாணத்தில் வழுக்கி விழுந்து தெய்வமானாள்.
இவள் அன்னை பராசக்தியின் அவதாரம். மக்கள் குறை தீர்க்கும் அருள் உடையவளாகவும், பிணி தீர்க்கும் மருந்தாகவும் வையகம் போற்றும் மாபெரும் வடிவாகவும், வடிவாம்பிகையாகவும், நீதி வழங்கும் துலாபாரமாகவும் விளங்குவாள் என கூறினாள்.
இது கேட்டு அங்கு கூடி இருந்தவர்கள் ஆறுதல் அடைந்தார்கள். அப்பெண்ணின் கணவனும் சற்று மனதை தேற்றிக் கொண்டு, அவள் தெய்வப்பிறவி உலகை ரட்சிக்க வந்தவள் என்று எண்ணி மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.
விதிக்குட்பட்டதுதான் மனிதப்பிறவி தெய்வமே மனிதன் அவதாரம் எடுத்தாலும் விதிவசத்திற்குற்பட்டு மனித அவஸ்தை பட்டுத்தான் தீர வேண்டும். அதன்படி இப்பொழுது அக்கிரமத்தையும், அதர்மத்தையும் செய்து வந்த இந்த கொடிய அரக்கனை வேரறுத்து சம்ஹாரம் செய்தாள்.
இவள் பராசக்தியே. இப்பெண் தெய்வத்தை மாதர்குலமே போற்றிக் கொண்டாடும். நாம் அனைவரும் இந்த மாபெரும் சக்தியைத் துதித்து வணங்குவோம் என அனைவரும் கைதொழுதனர். அம்மனுக்குரிய மஞ்சள் பட்டாடை அணிவித்து சமாதானப்படுத்தினார்கள்.
அனைவருக்கும் அருள்புரியும் பொருட்டு பராசக்தி தேவி, தியானம், ஜெபம், நிஷ்டை சமாதி முதலிய நான்கு நிலைகளில் ஒன்றான சமாதி நிலையில் வைத்து மண்மேடையாக்கினார்கள். அதன் மேல் அம்மன் உருவத்தை மண்ணால் செய்து வைத்துவிட்டு வந்தார்கள்.
ஆனால் மக்கள் அந்த பக்கம் செல்லவில்லை. சமாதி என்று நினைத்து பயந்தார்கள். இவ்வாறிருக்க ஒரு நள்ளிரவில் சாமக்கோடாங்கி ஒருவன் பூஜை நடத்த மயானத்திற்கு சென்றான். அப்பொழுது அந்த அம்மன் சமாதியான இல்லத்தில் ஓர் அரிய காட்சியைக் கண்டான். மெய்சிலிர்த்தான்.
தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும், காளி பைரவியும் அங்கு வழிபாடு செய்வதை பார்த்து அந்த அம்மனின் மகாசக்தியை ஊர் மக்களுக்கு சொன்னான். பிறகு ஊர்க்காரர்கள் அனைவரும் அங்கு சென்று வழிபட ஆரம்பித்தார்கள். நாளடைவில் அது மாசாணி தலமாக மாறி புகழ்பெற்றது.
- காத்யாயினி அம்மனுக்கும் தனி சன்னதி உள்ளது.
- காளியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட லிங்கங்கள் உள்ளன.
காளத்தியப்பரைத் திருமால், துர்க்கை, காளி, சீனிவாசப் பெருமாள், எமன், சனி, சித்திரகுப்தன், சப்தரிஷிகள், அகத்தியர் மார்க்கண்டேயர், வியாசர், ராமன் கண்ணன், அனுமன், சீதை, பரமதன், தருமர் ஆகியோர் வழிபட்டு பூஜை செய்துள்ளனர். அவர்களுடைய திருவுருவங்களும் இவர்கள் பிரதிஷ்டை செய்து பூஜித்த லிங்கங்களும் பிரகாரம் முழுவதும் காணப்படுகின்றன.
காளத்தீஸ்வரரை வழிபட்ட விஷ்ணு சூரியநாராயணர், காளத்திக் கணநாதரை வழிபட்ட துர்க்கையம்மன் காலகாம்பாள், கனக துர்க்கையம்மன் என்ற பெயர்களுடன் தனிச் சன்னதிகளில் உள்ளாள். காத்யாயினி அம்மனுக்கும் தனிச் சன்னதி உள்ளது.
கடவுளை பழித்துச் செய்யப்பட்ட தட்சன் நடத்திய யாகத்தில் தாட்சாயிணி நெருப்புக் குண்டத்தில் விழுந்து துவண்டுபோனதைக் கண்ட சப்தரிஷிகள் தட்சனின் கொடுமைகள் முற்றுப்பெற அருளுமாறு பரமேஸ்வரனைப் பூஜை செய்து தொழுதனர். வீரபத்திரர், பத்ரகாளி என்ற பெயருடைய இரண்டு தெய்வங்களை ஈசன் படைத்தருளினார்.
தட்சனின் யாகத்தில் பங்கு பெற்ற பாவத்திற்காக தேவியர்களை இருவரும் தண்டித்தனர். தட்சனின் தலையை அறுத்து எறிந்த வீரபத்திரர் வடக்கேயுள்ள கயிலைமலைக்கு சென்று சிவ நினைவில் மூழ்கினார். ஆனால் பத்திரகாளியோ வெறி அடங்காமல் கண்ணில் பட்ட எல்லோரையும் தாக்கி துன்புறுத்தினாள்.
காளியின் கொடுமைக்கு ஆளான மண்ணுலக வாசிகளும், விண்ணுலக வாசிகளும் மகேஸ்வரனை பூஜை புரிந்து தங்களை காத்தருளுமாறு வேண்டினர். ஆடல் நாயகனான கனகசபேசன் திருவாலங்காட்டில் வெளிப்பட்டுத் தோன்றி திருநடனம் ஆடினார்.
காளியும் போட்டி போட்டுக் கொண்டு ஆட வந்தாள். கால்கட்டை விரலை காது வரையிலும் உயர்த்தி ஆடும் ஊர்த்துவத் தாண்டவம் என்ற நடனத்தை அம்பலவாணர் ஆடினார்.
நடன நூல்களில் கூறப்படாத, நாட்டியக் கலைஞர்கள் அறியாத, முப்பத்தாறு தத்துவங்களுக்கு அப்பாற்பட்ட அருள்மேனி கொண்ட எல்லாம் வல்ல பரம்பொருளால் மட்டுமே நிகழ்த்தக்கூடிய இந்த நுணுக்கமான அரிய நடனத்தை காளி ஆட முடியாமல் போனதால் கோபமும் வெறியும் அடங்கி அமைதியடைந்தாள்.
ஈசனை தொழுது வணங்கினாள். அம்பலத்தரசனின் திருவருளால் எல்லைத் தெய்வமாக விளங்கும் பேறு பெற்ற காளி இரும்பை மாகாளம், அம்பர் மாகாளம் போன்ற பல தலங்களிலும் பரமேஸ்வரனை பூஜை செய்து வழிபட்ட பின் காளஹஸ்தியை அடைந்தாள்.
வாயுலிங்கப் பரம்பொருளைப் பூஜை செய்து வணங்கிய பின் உஜ்ஜயினிக்குப் பயணமானாள். திருக்காளத்தீஸ்வரரை வழிபட்ட காளிக்கு காளத்திநாதர்க் கோவிலில் தனி சன்னதியுள்ளது.
காளி சன்னதிக்கு அருகே காளியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட லிங்கங்கள் உள்ளன.
மேலும் பிரகாரத்திலும்உ ள்ளன. தனிச் சன்னதி கொண்டும் அமைந்துள்ளன. காளிகாதேவி சன்னதிக்கு உள்ளும் லிங்கம் உள்ளது.
- பிரபல ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை.
- இவர் வெளியிட்ட காளி ஆவணப்பட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரபல ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை தான் இயக்கிய, 'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டார். அந்த போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. கனடாவில் வெளியிடப்பட்ட இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் போஸ்டர் வெளியிட்ட லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டனர்.
லீனா மணிமேகலை மீதான புகாரின் அடிப்படையில் டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்யக்கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, லீனா மணிமேகலையை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறும் அவரது தயாரிப்பு நிறுவனமான டூரிங் டாக்கீஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்டும் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்குகளுக்கு எதிராக லீனா மணிமேகலை உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த வழக்குகளால் தான் கைது செய்யக்கூடும் என்றும் தனக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. லீனாவின் வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், அவருடைய மனு தொடர்பான வாதத்தை விளக்கமளிக்க மத்திய அரசு, டெல்லி, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேச மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கைது செய்யவும் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது.
- கர்நாடக மாநிலத்தில் நாளை பிரதிஷ்டை செய்யப்படுகிறது
- அந்த சிலை 6 டன் எடையுடன் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் 100-க்கும் மேற்பட்ட சிற்பக் கலைக்கூடங்கள் உள்ளன. அங்கு கல்லில் செதுக்கப்படும் சாமி சிலைகள் இந்தியா முழுவதும் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் திருமுருகன்பூண்டியில் உள்ள ஒரு சிற்பக்கலைக்கூடத்தில் 12 அடி உயரத்தில், பல்வேறு சிறப்பம்சங்களுடன் கொல்கத்தா காளி சிலை செதுக்கப்பட்டுள்ளது. அந்த சிலை 6 டன் எடையுடன் ஒரே கல்லில், 10 தலைகள், 10 கால்கள், ஏகசூலம், சங்கு, கதை, ரத்த கின்னம், கதிர் அரிவாள், அரக்கன் தலை, கத்தி, சாட்டை, வில் அம்பு, டமாரம் என 10 கைகளிலும் 10 ஆயுதங்களுடன் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் காளி சிவன் ரூபத்தில் வந்து கொடூர அரக்கனை காலடியில் போட்டு மிதிப்பது போன்றும் சிலை செதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காளிக்கு 20 மனித தலைகள் கொண்ட மாலை அணிவித்திருப்பது போன்ற தோற்றத்துடன் சிலை சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. சிற்பி சிவக்குமார் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் 6 மாதங்களில் இந்த சிலை வடிவமைப்பு பணியை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்த சிலை நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருமுருகன்பூண்டியில் இருந்து கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சாந்திராம கிராமத்தில் உள்ள கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக லாரி மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
- பிரபல ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை.
- இவர் வெளியிட்ட காளி ஆவணப்பட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரபல ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை தான் இயக்கிய, 'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டார். அந்த போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.
கனடாவில் வெளியிடப்பட்ட இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் போஸ்டர் வெளியிட்ட லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டனர்.
காளி போஸ்டர்
லீனா மணிமேகலை மீதான புகாரின் அடிப்படையில் டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, லீனா மணிமேகலை மீண்டும் சிவன், பார்வதி வேடமிட்ட இருவர் புகைப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார்.
இந்நிலையில் இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்யக்கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, லீனா மணிமேகலையை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறும் அவரது தயாரிப்பு நிறுவனமான டூரிங் டாக்கீஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்டும் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
- காளி பட போஸ்டர் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி டெல்லி போலீசில் புகார்.
- இந்து கடவுளை அவமரியாதை செய்வதாக கனடா இந்து அமைப்புகள் குற்றச்சாட்டு.
இயக்குனர் லீனா மணிமேகலை தற்போது இயக்கியுள்ள காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
காளி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட் புகைப்பது போன்றும், கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தி இருப்பது போன்றும் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது.
லீனா மணிமேகலை
இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதாக கூறி பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் காளி பட போஸ்டர் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இயக்குனர் லீனா மணிமேகலை மீது டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச மாநில போலீசார் 153A மற்றும் 295A ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே டொராண்டோவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகம், இந்திய தூதரகம் அறிவுறுத்தலின் படி காளி ஆவணப்படத்தை திரையிடுவதிலிருந்து நீக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தொடர்ந்து எழுந்த சர்ச்சை காரணமாக இயக்குனர் லீனா மணிமேகலை வெளியிட்ட காளி ஆவணப்பட போஸ்டர் சமூக வலைதள நிறுவனத்தால் நீக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தை சேர்ந்த திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை என்பவர் ‘’காளி’’ என்ற பெயரில் ஒரு ஆவணப்படத்தை எடுத்துள்ளார்.
- லீனா மணிமேகலையை கைது செய்து, தவறுக்கான தண்டனையை மத்திய அரசு கண்டிப்பாக கொடுத்தே ஆகவேண்டும் என சித்தர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கோரம்பள்ளம், அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தை சேர்ந்த திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை என்பவர் ''காளி'' என்ற பெயரில் ஒரு ஆவணப்படத்தை எடுத்துள்ளார். இந்த ஆவணப்படத்தில் இவரே நடித்துள்ளதுடன், இந்துக்களின் தெய்வமான காளியை படபோஸ்டரில் புகை பிடிப்பது போன்று அவதூறாக சித்தரித்துள்ளார்.
மதவழிபாடுகளில் முன்னோர்கள் காலம் முதல் இப்போது வரையிலும் பாரம்பரியத்தை தவறாமல் கடைபிடித்து வரும் தமிழகத்தை சேர்ந்த இந்த இயக்குநர் இந்த அளவுக்கு கீழ்த்தரமாக நடந்துகொண்டுள்ளது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
இந்து தெய்வத்தின் புனிதத்தை பாழ்படுத்தியற்காக இந்த லீனா மணிமேகலையை கைது செய்து, தவறுக்கான தண்டனையை மத்திய அரசு கண்டிப்பாக கொடுத்தே ஆகவேண்டும்.
மேலும், அவரது ஆவணப்படத்தை உலகின் எந்தப்பகுதியிலும் வெளியிட முடியாத அளவிற்கு மத்திய அரசு தகுந்த நடவடிக்கையை தாமதமின்றி உடனடியாக எடுத்திடவேண்டும். சமூகவலை–தளங்களில் பதிவிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தின் போஸ்டர்களை எல்லாம் முற்றிலுமாக இல்லாமல் செய்திடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காளி பட போஸ்டர் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி டெல்லி போலீசில் புகார்.
- இந்து கடவுளை அவமரியாதை செய்வதாக கனடா இந்து அமைப்புகள் குற்றச்சாட்டு.
இயக்குநர் லீனா மணிமேகலை தற்போது இயக்கியுள்ள காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
காளி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட் புகைப்பது போன்றும், கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தி இருப்பது போன்றும் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதாக கூறி பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் காளி பட போஸ்டர் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இயக்குனர் லீனா மணிமேகலை மீது டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய போஸ்டர் தொடர்பாக 153A மற்றும் 295A ஆகிய பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி காவல்துறை பி.ஆர்.ஓ. சுமன் நல்வா, தெரிவித்துள்ளார்.
இதனிடையே டொராண்டோவில் உள்ள ஆகாகான் அருங்காட்சியகத்தில் காளி ஆவணப்படம் தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் போஸ்டர் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பொருட்களை திரும்பப் பெறுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை இந்திய தூதரகம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து கடவுளை அவமரியாதையாக சித்தரிப்பது குறித்து கனடாவில் உள்ள இந்து சமூகத் தலைவர்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காளி ஆவணப்பட போஸ்டர் குறித்து இயக்குனர் லீனா மணிமேகலை தமது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு மாலைப்பொழுதில் டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் இந்த ஆவணப்படம் என்று கூறியுள்ளார்.
- லீனா மணிமேகலை தற்போது இயக்கியுள்ள ஆவணப்படம் காளி.
- இதன் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் பல ஆவணப்படங்களை இயக்கியதன் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய ஆவணப்படங்களுக்கு பல விருதுகள் கிடைத்தன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்குமுறை பற்றி இவர் இயக்கிய மாடத்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளையும் வென்றது. கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படும் இவர் சாதிய ஒடுக்குமுறைகள், பெண்களுக்கான உரிமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து பல கவிதைகளை எழுதியுள்ளார்.
காளி போஸ்டர்
லீனா மணிமேகலை தற்போது இயக்கியுள்ள காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். காளி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட் புகைப்பது போன்றும், கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தி இருப்பது போன்றும் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதாக கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்த சர்ச்சை குறித்து இயக்குனர் லீனா மணிமேகலை சமூக வலைத்தளத்தின் வாயிலாக விளக்கமும் அளித்துள்ளர். இந்நிலையில், நடிகை குஷ்பு, லீனா மணிமேகலை, காளி ஆவணப்படத்தின் போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Creativity should not be taken for granted. I am sure the same creators will never have the guts to take creative liberty depicting any minority worshipped God in this form. There will be a mayhem. I strongly condemn this piece of so called art. It's an attempt to cause unrest. pic.twitter.com/4nAZMmYa7T
— KhushbuSundar (@khushsundar) July 4, 2022
- லீனா மணிமேகலையின் ஆவணப்படங்கள் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது.
- பெண்களுக்கான உரிமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து கவிதைகளை எழுதியுள்ளார்.
தமிழ் திரையுலகில் பல ஆவணப்படங்களை இயக்கியதன் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய ஆவணப்படங்களுக்கு பல விருதுகள் கிடைத்தன. இவரின் பறை, தேவதைகள், பலிபீடம் போன்ற பல ஆவணப்படங்கள் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்குமுறை பற்றி இவர் இயக்கிய மாடத்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளையும் வென்றது. கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படும் இவர் சாதிய ஒடுக்குமுறைகள், பெண்களுக்கான உரிமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து பல கவிதைகளை எழுதியுள்ளார்.
லீனா மணிமேகலை தற்போது இயக்கியுள்ள காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். காளி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட் புகைப்பது போன்றும், கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தி இருப்பது போன்றும் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதாக கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து இயக்குனர் லீனா மணிமேகலை சமூக வலைத்தளத்தின் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப்பார்த்தா "arrest leena manimekalai" hashtag போடாம "love you leena manimekalai" hashtag போடுவாங்க என லீனா தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில், "எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்" என லீனா தைரியமாக குறிப்பிட்டுள்ளார்.
- காளி சிகரெட் புகைப்பது போன்று வெளியிடப்பட்டுள்ள போஸ்டருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- இந்துக்கள் குறிவைக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.
சென்னை:
ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை தான் இயக்கி உள்ள 'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டரில் இந்துக்களின் கடவுளான மகா காளி, சிகரெட் புகைப்பது போன்றும், ஒரு கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தியபடியும் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்து கடவுளை அவமதிக்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டருக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
டுவிட்டரில் #ArrestLeenaManimekalai என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் இந்து மதம் கேலி செய்யப்படுகிறது, இந்துக்கள் குறிவைக்கப்படுவதாகவும் பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்