search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பிரதோஷ விரத பயன்கள்
    X

    பிரதோஷ விரத பயன்கள்

    • வழிபாடு முடிந்தபின் அன்னதானம் செய்ய வேண்டும்.
    • வேதம் முதலிய பயிற்சியும் பிரதோஷ காலத்தில் செய்யக்கூடாது.

    பிரதோஷ வழிபாட்டின் பயனாக வறுமை, பயம், மரண வேதனை முதலான பிரச்சினைகள் நீங்கும். அதுமட்டுமின்றி...

    1. இன்பம் கிடைக்கும்.

    2. மலடு நீங்கி மகப்பேறு பெறுவர்.

    3. கடன் நீங்கித் தனம் நிறையப் பெறுவர்.

    4. வறுமை ஒழியும்.

    5. நோய் நீங்கி நலம் பெறுவர்.

    6. அறியாமை நீங்கும்.

    7. பாவம் தொலைந்து புண்ணியம் பெறுவார்கள்.

    8. தடைகள் நீங்கித் திருமணம் நடைபெறும்.

    9. சகல தோஷங்களும் நீங்கிச் சுகம் பெறுவர்.

    10. அனைத்துக்கும் மேலாக முக்தி அடையவர்.

    நந்தியெம் பெருமான் தன்னை நாடொறும் வணங்கு வோர்க்கு

    புந்தியில் ஞானம் சேரும் பொலிவுறு செல்வம் கூடும்

    குலமுறை தழைத்தே ஓங்கும் குணம்நிறை மக்கள் சேர்வர்

    சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே!

    பிரதோஷ காலத்தில் செய்யக்கூடாதவை

    ஜீரணமாகாமல் விஷமாக மாறுவதால் சாப்பிடுதலும் யோகத்தை பேணுவதால் உறக்கமும், நல்லொழுக்கம் இயலாததால் பிரயாணமும், உடலை நிலைப்படுத்த முடியாததால் எண்ணைக் குளியலும், சிவனை, விஷ்ணு வணங்கும் நேரமாதலால் விஷ்ணுவைக் கண்டு வணங்குதலும், ஆன்மஹானம் வேண்டுவதால் பஞ்சாட்சரம் அல்லாத மற்ற விருப்பம் வேண்டும் (காம்ய) ஜபம் செய்தலும், அகத்தூய்மை வேண்டுவதால் தவம் செய்தலும், ஒரு நிலைப்பட்ட மனம் தேவையாதலால் வேதம் முதலிய பயிற்சியும் பிரதோஷ காலத்தில் செய்யக்கூடாது.

    பிரதோஷ நோன்பு

    பிரதோஷ நோன்பு இருப்பது மிகுந்த பலன் தரும். கஷ்ட நஷ்டங்கள் உடனே தீரும். அன்று அதிகாலையில் குளித்து, தூய உடை அணிந்து, நோன்பு தொடங்க வேண்டும். பகல் முழுக்க எதுவும் சாப்பிடக் கூடாது. பசி தாங்காதவர்கள் பால், பழம் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

    மாலையில் பிரதோஷம் தொடங்கிய பின்பு சிவபூஜை பண்ண வேண்டும். வெல்லப் பொங்கல் படைக்க வேண்டும். நெய் விளக்கு ஏற்ற வேண்டும். வில்வ இலையால் அர்ச்சனை பண்ண வேண்டும்.

    வழிபாடு முடிந்தபின், இரண்டு பேருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும். அதன்பின்தான் சாப்பிட வேண்டும். அன்னதானம் செய்யாவிட்டால் நோன்பு இருந்தும் பலன் இல்லை. சிவனே பிச்சாண்டிதானே! மாலையில் கோவிலுக்கு போய் வழிபாடு செய்வதும் நல்லது. அப்போது வெல்லப்பொங்கல் செய்து எடுத்து போக வேண்டும். முடியாவிட்டால் கார அரிசியில் வெல்லம் கலந்து நந்திக்கு படைக்க வேண்டும். அன்னதானம் செய்வது முக்கியம்.

    Next Story
    ×