என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Navaratri"

    • சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
    • நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.

    ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.

    நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யப்படுகிறது.

    அதன்படி, நவராத்திரியின் எட்டாம் நாளான மகாகௌரி வணங்கப்படுகிறது. துர்கா தேவியின் எட்டாவது அம்சமான மகாகௌரி தேவியை தியானிக்கவும், அவளுடைய நற்கருணையைப் பெறவும் உதவுகிறது.

    மந்திரம்:

    *ஸ்வேத விருஷப சமாருத ஷ்வேதாம்பர தாரா ஷுச்சின் மகாகௌரி சுபம் தத்யான் மகாதேவ பிரமோததா.

    இந்த மந்திரத்தை உச்சரிப்பது, எதிர்மறைகளை நீக்கி, உள் அமைதியைப்பெறவும், செழிப்பு மற்றும் மகிழ்ச்சி போன்ற நன்மைகளைப் பெறவும் உதவும் என்று நம்பப்படுகிறது.

    • முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
    • ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.

    முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.

    பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும். முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.

    ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் எட்டாவது நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..

    எட்டாம் நாள் போற்றி

    ஓம் வேத மெய்பொருளே போற்றி

    ஓம் மேனிக் கருங்குயிலே போற்றி

    ஓம் அண்டர் போற்றும்

    அருட் பொருளே போற்றி

    ஓம் எண்திசை ஈஸ்வரியே போற்றி

    ஓம் எங்கும் நிறைந்தவளே போற்றி

    ஓம் மாயோனின் மனம்

    நிறைந்தவனே போற்றி

    ஓம் தூய ஒளியாய் தெரிபவளே போற்றி

    ஓம் சிங்க வாகினித் தேவியே போற்றி

    ஓம் அங்கமெலாம் காக்கும் ஆதரவே போற்றி

    ஓம் சூலத்தில் சத்தியம் காப்பாய் போற்றி

    ஓம் துன்பம் துடைக்கும் தூமணி போற்றி

    ஓம் எதிரிகள் விரட்டும் ஏந்தலாய் போற்றி

    ஓம் கடுவிஷம் இறக்கும் மருந்தே போற்றி

    ஓம் காப்பதில் நிகரிலாத் தெய்வமே போற்றி

    ஓம் கற்பகமாய் எம்முன் தோன்றுவாய் போற்றி

    ஓம் ஜம்தும் துர்க்கா தேவியே போற்றி!!

    • முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
    • ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.

    முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.

    பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.

    முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும். ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் ஆறாம் நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..

    ஆறாம் நாள் போற்றி

    ஓம் பொன்னரசியே போற்றி

    ஓம் நவமணி நாயகியே போற்றி

    ஓம் இன்னமுதாய் இருப்போய் போற்றி

    ஓம் சிங்கார நாயகியே போற்றி

    ஓம் செம்பொன் மேனியளே போற்றி

    ஓம் மங்காத ஒளியவளே போற்றி

    ஓம் சித்திகள் தருவாய் போற்றி

    ஓம் திக்கெட்டும் பரவினோய் போற்றி

    ஓம் சுத்த பரிபூரணியே போற்றி

    ஓம் மகாமந்திர உருவே போற்றி

    ஓம் மாமறையுள் பொருளே போற்றி

    ஓம் ஆநந்த முதலே போற்றி

    ஓம் ஐவர்க்கும் தலைவி போற்றி

    ஓம் செம்மேனியாய் மிளிர்வாய் போற்றி

    ஓம் மாகேஸ்வரியே போற்றி

    ஓம் மகா சண்டிகையே போற்றி

    • முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
    • ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.

    முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.

    பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.

    முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும். ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் நான்காவது நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..

    நான்காவது நாள் போற்றி

    ஓம் கருணை வடிவேபோற்றி

    ஓம் கற்பகத் தருவேபோற்றி

    ஓம் உள்ளத்திருள் ஒழிப்பாய்போற்றி

    ஓம் ஊழ்விணை தீர்ப்பவளேபோற்றி

    ஓம் கரும்பின் சுவையேபோற்றி

    ஓம் கார்முகில் மழையேபோற்றி

    ஓம் வீரத்திருமகளே போற்றி

    ஓம் வெற்றிக்கு வித்திடுவாய்போற்றி

    ஓம் பகைக்குப் பகையேபோற்றி

    ஓம் ஆவேசத் திருவேபோற்றி

    ஓம் தீமைக்குத் தீயேபோற்றி

    ஓம் நல்லன வளர்ப்பாய்போற்றி

    ஓம் நாரணன் தங்கையேபோற்றி

    ஓம் அற்புதக் கோலமேபோற்றி

    ஓம் ஆற்றலுள் அருளேபோற்றி

    ஓம் புகழின் காரணியேபோற்றி

    ஓம் காக்கும் கவசமேபோற்றி

    ஓம் ரோகிணி தேவியேபோற்றி

    • ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
    • ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்கள் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.

    நவராத்திரியின் முதல் நாளில் கொலு வைத்து, துர்கை அம்மனுக்கும் அலங்காரம் செய்து பூஜைகளும், மந்திரங்களாலும் வணங்கப்படுகிறது. 

    அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது. அதன்படி, நவராத்திரியின் முதல் நாளான இன்று பிரசாதமாக கொண்டைக்கடலை சுண்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்...

    தேவையான பொருட்கள்:

    வெள்ளை அல்லது கருப்பு கொண்டைக்கடலை

    தேங்காய் துருவல்

    வெங்காயம் (விருப்பப்பட்டால்)

    மிளகாய் (விருப்பப்பட்டால்)

    கடுகு

    உளுத்தம் பருப்பு

    கறிவேப்பிலை

    எண்ணெய்

    உப்பு.

     

    செய்முறை:

    கொண்டைக்கடலை சுண்டல் செய்ய, முதலில் கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

    பின்னர், ஊறவைத்த கொண்டைக்கடலையை தேவையான உப்பு சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.

    வெங்காயம் வதங்கியதும், வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து நன்கு கிளறவும்.

    பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து, கலவையை நன்கு கிளறி, உப்பு சரிபார்த்து இறக்கவும். கொண்டைக்கடலை சுண்டல் தயார்.

    வெண்ணெய் தயிர் சாதம்

    தேவையான பொருட்கள்:

    அரிசி

    தயிர்

    பால்

    வெண்ணெய்

    தாளிக்க :

    கடுகு

    உளுத்தம் பருப்பு

    கறிவேப்பிலை

    பெருங்காயம்

    பச்சை மிளகாய்

    இஞ்சி

    கேரட் (துருவியது)

    கொத்தமல்லி தழை

    எண்ணெய் அல்லது நெய்

     

    செய்முறை

    அரிசியை நன்கு கழுவி, போதுமான தண்ணீருடன் குக்கரில் 3-4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

    பின்னர், வேகவைத்த சாதத்தை சற்று ஆறவிட்டு, வெண்ணெய் சேர்த்து நன்கு மசிக்கவும்.

    மசித்த சாதத்துடன் பால் சேர்த்து கிளறி, சற்று க்ரீமியாகவும், மிருதுவாகவும் ஆக்கவும். பின், தயிரையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.

    பின் பச்சை மிளகாய், துருவிய கேரட் மற்றும் இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, கொத்தமல்லி தழையை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

    இந்த தாளிப்பை தயிர் சாத கலவையில் சேர்த்து, நன்கு கலக்கவும்.

    இனிப்பு: தேங்காய் பர்பி

    தேவையான பொருட்கள்:

    துருவிய தேங்காய் - 2 கப்

    சர்க்கரை அல்லது வெல்லம் - 1 கப்

    நெய் - 2 டேபிள்ஸ்பூன்

    ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன்

    தண்ணீர் - தேவைப்பட்டால்.

     

    செய்முறை:

    ஒரு தட்டில் நெய் தடவி தயாராக வைத்துக் கொள்ளவும்.

    ஒரு கடாயில் சர்க்கரை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை காத்திருக்கவும்.

    சர்க்கரைப் பாகுடன் துருவிய தேங்காயை சேர்த்து, நீர் வற்றி கெட்டியாகும் வரை மிதமான தீயில் கிளறவும்.

    கலவை கெட்டியானதும், ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கலக்கவும்.

    கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, பரப்பி சமன் செய்யவும். கலவை சற்று ஆறியதும், உங்களுக்குப் பிடித்த வடிவத்தில் துண்டுகளாக வெட்டவும்.

    முழுமையாக ஆறியதும், பர்பியை தட்டில் இருந்து எடுத்து பரிமாறவும். முந்திரி, பாதாம் போன்றவற்றை சேர்த்து, மேலும் சுவையான பர்பி செய்யலாம்.

    • சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
    • நவராத்திரியின் முதல் நாளான இன்று ஷைல புத்ரி தேவிக்கான மந்திரங்கள்.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.

    ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.

    நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். இதில்,"சைலபுத்ரி" என்பது துர்க்கையின் முதல் வடிவம் ஆகும்.

    நவராத்திரியின் முதல் நாளான இன்று ஷைல புத்ரி தேவிக்கான மந்திரங்கள் குறித்து பார்க்கலாம்:

    ஷைல் புத்ரி மந்திரம் என்பது துர்கா தேவியின் முதல் அவதாரமான ஷைல் புத்ரியை வணங்குவதற்கான மந்திரமாகும்.

    சிறப்பு மந்திரங்கள்:

    * ஓம் தேவி ஷைலபுத்ரியை நமஹ

    விளக்கம்: தேவி ஷைலபுத்ரிக்கு என் வணக்கம்.

    * வந்தே வாஞ்சிதலாபாய சந்திரார்த கிருதஷேக்ராம்। விருஷாரூடாம் ஷூலதாரிணீம் ஷைலபுத்ரீம் யஷஸ்விநீம்

    விளக்கம்: என் ஆசைகளை நிறைவேற்றும், சந்திரனை கிரீடமாக அணிந்த, காளையின் மீது அமர்ந்திருக்கும், திரிசூலத்தை ஏந்திய, புகழ்மிக்க தேவி ஷைலபுத்ரிக்கு என் வணக்கம்.

    இந்த மந்திரங்கள் நவராத்திரியின் முதல் நாளில் உச்சரிக்கப்பட்டு, தெய்வீக ஆசீர்வாதங்களையும் ஆன்மீக பலத்தையும் பெற உதவுகிறது.

    • ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
    • விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும்.

    நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாடப்படுகிறது. 

    நவராத்திரி பூஜை தொடங்கும்போது முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும். சில வீடுகளில் அமாவாசை அன்று மாலையே எடுத்து வைத்து விடுவார்கள்.

    அடுத்ததாக, ஒரு பித்தளை சொம்பில் நூல் சுற்றி, மாவிலை தேங்காய் வைத்துக் கலசம் வைக்க வேண்டும். நீர் ஊற்றும்போது அது புனிதத்துவம் அடைவதற்காக நதிகளை நினைத்து, கலசத்தில் உள்ள நீரில் கங்கையும் யமுனை தானும் கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்துவும் காவிரிதானும் எழுந்தருளி இறையருள் சேர்ப்பீர் என்று சொல்லிக் கொண்டே ஊற்ற வேண்டும்.

    அடுத்ததாக ஒரு தலைவாழை இலையில் அரிசியைப் பரப்பி மனைப்பலகைமேல் வைத்து அதன் மேல் கலசத்தை வைத்து தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்பிகை மேடையில் வைக்க வேண்டும். 

    கொலுப்படிகளுக்கு வடக்குப் புறமாக அதாவது படிகளின் இடப்பாகம் வைத்தல் முறையாகும். இப்படி அம்மனை எழுந்தருளச் செய்துவிட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும்.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்திரன் இளம்பிறை போற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய் போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனேபோற்றி!

    ஓம் கற்பக களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    • நான்கு நவராத்திரிகள் இருப்பதாக கூறுகிறது தேவி பாகவதம்.
    • சியாமளா தேவி வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை.

    ஒவ்வொரு வருடமும் 4 விதமான நவராத்திரி கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் வசந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் வாராகீ நவராத்திரி, புரட்டாசி மாதம் சிரந் நவராத்திரி வருகிறது. தை மாதம் சியாமளா நவராத்திரி என்று நான்கு தேவி நவராத்திரிகள் இருப்பதாக கூறுகிறது தேவி பாகவதம்.

    இவற்றில் தை மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல், நவமி வரையுள்ள ஒன்பது நாட்கள் சியாமளா நவராத்திரி எனப்படும். இன்று (ஞாயிற்றுக்கிழமை) சியாமளா தேவி நவராத்திரி விரதம் தொடங்குகிறது.

    சியாமளா நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் ராஜசியாமளா தேவியின் மந்திரங்களை குருமுகமாக உபதேசம் செய்து கொண்டு வழிபாடு செய்யலாம்.

    காளிதாசர் இயற்றிய ஸ்ரீ சியாமளா தண்டகம் என்னும் புத்தகத்தில் சியாமளா தேவி மாணிக்க கற்கள் பதித்த வீணையை வாசிப்பதில் ஆர்வமுள்ளவளாக, எட்டுக் கைகளுடன், மரகதப் பச்சை நிறமுள்ளவளாக, மார்பில் குங்குமச் சாந்து தரித்தவளாக நெற்றியில் சந்திர கலையை அணிந்து கொண்டவளாக, கைகளில் கரும்பு வில், மலர் அம்பு, பாசம், அங்குசம் ஆகிய வற்றை தரித்தவளாக கரங்களில் கிளியுடன் தியானம் செய்வதாக வர்ணிக்கப்பட்டுள்ளாள்.

    ராஜ சியாமளா, மாதங்கி, மந்திரிணீ போன்ற பல பெயர்களில் அழைக்கப்படும் இவள் மதங்க முனிவரின் மகளாக அவதரித்தவள். தசமகாவித்யைகளுள் ஒன்பதாவது வித்தையாக அறியப்படுபவள்.

    கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியான சியாமளா தேவி வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை. ஆகவே மந்திரிணி என்று அழைக்கப்படுகிறாள்.

    லலிதா தேவி பண்டாசூரனுடன் போருக்கு புறப்பட்ட போது லலிதா தேவியின் கையில் உள்ள மனஸ் தத்துவமான கரும்பில் இருந்து தோன்றியவளே சியாமளா தேவி, லலிதா பரமேஸ்வரியின் மகாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருள் புரியும் இவள் லலிதா தேவிக்கு சக்தியை தந்தவள், லலிதா தேவியின் அக்சர சக்தியாக விளங்குபவள், சரஸ்வதியை போன்றே அருளுபவள்.

    என்றாலும் கூட வெளியில் உள்ள கலைகளுக்கும் திறமைகளுக்கும் அதிபதி சரஸ்வதி, சியாமளா தேவியோ தகரா காசத்தில் உள்ள கலைகளுக்கு அதிபதி, அம்பிகையின் பிரதிநிதியாக, ஆட்சி நடத்துபவள்.

    மேலும் கதம்பவனவாசினி என்றும் இந்த அம்பிகை போற்றப்படுகிறாள். அதாவது ஸ்ரீ லலிதா தேவியின் நிவாச தலமான ஸ்ரீநகரத்தில் சுற்றிலும் கதம்பவனம் நிறைந்த பகுதியில் வாசம் செய்கிறாள் சியாமளா தேவி. மதுரை மாநகருக்கு கதம்பவனம் என்ற ஒரு பெயரும் உண்டு என்பதால் மதுரை மீனாட்சி அம்மன் இந்த அம்பிகையின் அம்சமாகவே போற்றப்படுகிறாள்.

    பண்டாசூர வதத்தின்போது, கேயசக்ரம் என்னும் தேரில் இருந்து கொண்டு லலிதா தேவிக்கு உதவியாக சியாமளா தேவி போர் புரிந்து, பண்டாசூரனின் தம்பியான விஷன் என்னும் அசுரனை வதம் செய்தாள்.

    வீணையைக் கையில் தாங்கிக் கொண்டு காட்சி தரும் சியாமளா தேவி சங்கீதக் கலைக்கு தலைவி ஆவாள். சங்கீதம் கற்றுக் கொள்பவர்களுக்கும் சங்கீதத்தை உபாசிப்பவர்களுக்கும் குறிப்பாக வீணை வாசிப்பவர்களுக்கும் விசேஷமாக அருள் புரிபவள் சியாமளா. ஆகவே இன்று முதல் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சங்கீத இசை பாடுவதாலும் சங்கீதத்தை கேட்பதாலும் சங்கீதத்தில் ஈடுபட்ட இசை வல்லுனர்களை தேவியாக பாவித்து தாம்பூலம் தந்து மகிழ்விப்பதாலும் சியாமளா தேவியின் பூரண அருள் கிடைக்கும்.

    • ஐப்பசி மாதம் வரும் சரந் நவராத்திரியை மட்டுமே விசேஷமாகக் கொண்டாடுகிறோம்.
    • அம்மனை உபாசித்து பூஜைகள் செய்து கொண்டாடுவார்கள்.

    ஒரு வருடம் என்பது இரண்டு இரண்டு மாதங்களாக மொத்தம் ஆறு ருதுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளில் முதலாக வருவது வசந்தம் என்னும் ருது. ருதூநாம் குஸுமாகர: ருதுக்களில் நான் வசந்த ருதுவாக இருக்கிறேன் என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார். வசந்த ருது ஆரம்பமாகும் பங்குனி அமாவாசைக்கு மறுநாள் முதல் 9 ராத்திரிகள் அம்பிகை ஆராதிக்க சிறந்த காலம்.

    இதையே வசந்த நவராத்திரி என்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் 1) தேவி நவராத்திரி, 2) வாராகி நவராத்திரி, 3) சரந் நவராத்திரி, 4) சியாமளா நவராத்திரி என்பதாக மொத்தம் நான்கு முறை நவராத்திரியைக் கொண்டாட வேண்டும் என்பது ஸ்ரீவித்யா சாஸ்திரம்.

    அவற்றில் நாம் ஐப்பசி மாதம் வரும் சரந் நவராத்திரியை மட்டுமே விசேஷமாகக் கொண்டாடுகிறோம். ஆனால் ஸ்ரீ வித்யா மார்கத்தில் ஈடுபட்டு சத்குரு மூலம் மந்திர உபதேசம்- தீட்சை பெற்று நவாவரணம் போன்ற விசேஷ பூஜைகளைச் செய்பவர்கள் இந்த 4 நவராத்திரிகளையுமே அம்மனை உபாசித்து பூஜைகள் செய்து கொண்டாடுவார்கள். சைத்ர மாதம் சுக்ல பட்ச பிரதமையான இன்று முதல் தொடர்ந்து 8 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி வசந்த நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

    இந்த அனைத்து நாட்களிலும் தினசரி தேவியை விசேஷமாகப் பூஜைகள் செய்து ஸ்தோத்ர பாராயணம் செய்து கன்னிகா பூஜை கள் செய்து கொண்டாடலாம். மேலும் நவாவரண பூஜை, ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம், சப்த சதீ பாராயணம், சுவாசிநீ பூஜை, சண்டீ ஹோமம் போன்றவற்றால் அம்மனை ஆராதிக்கலாம்.

    திருப்பாவாடை கல்யாண உற்சவம்

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே உள்ள திருப்பாற்கடல் கிராமத்தில் ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் தேவஸ்தானத்தின் 36-ம் ஆண்டு பங்குனி ரேவதி திருமஞ்சன திருப்பாவாடை கல்யாணம் நாளை நடைபெறுகிறது. தொடர்புக்கு- 9442313789.

    • வராகி அம்மனுக்கு 11 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும்.
    • இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

    தஞ்சை பெரியகோவிலில் வராகிஅம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வராகி அம்மனுக்கு 11 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து வராகிஅம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெறுகிறது.

    வராகி அம்மனுக்கு 18-ந்தேதி மாலையில் இனிப்பு அலங்காரமும், 19-ந் தேதி மஞ்சள் அலங்காரமும், 20 -ந் தேதி குங்குமம் அலங்காரமும், 21--ந் தேதி சந்தன அலங்காரமும், 22-ந் தேதி தேங்காய்ப்பூ அலங்காரமும், 23-ந் தேதி மாதுளை அலங்காரமும், 24-ந் தேதி நவதானிய அலங்காரமும், 25-ந் தேதி வெண்ணெய் அலங்காரமும், 26-ந்தேதி கனி அலங்காரமும், 27-ந்தேதி காய்கறி அலங்காரமும் 28-ந் தேதி புஷ்ப அலங்காரமும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

    • ஜாதகப்படி செவ்வாய் ராகு மற்றும் கேது கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
    • வராஹியை வணங்குபவர்களுக்கு செய்வினையால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

    ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியின் கையில் உள்ள பஞ்ச பாணங்களிலிருந்துத் தோன்றியவள்தான் ஸ்ரீ மகா வராஹி எனப்படும் அம்மன். சேனைகளுக்குத் தலைவியாக அன்னையை பாதுகாப்பவளாக விளங்கும் இவள் வராஹி முகத்துடன் இருப்பதால் வராஹி எனப்படுகிறாள்.

    பிராமி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டா என்னும் சப்த மாதாக்களில் இவள் 6-வதாக பூஜிக்கப்படுபவள். ஒவ்வொரு மனிதனின் உடலிலும் இருக்கும் 6 ஆதார சக்கரங்களில் நெற்றியில் 2 கண்புருவங்களுக்கு இடையில் இருக்கும் ஆக்ஞா சக்கரப்பகுதிக்கு வராஹியே தேவதையாவாள்.

    ஆனி மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரையில் உள்ள ஒன்பதுநாட்கள் வராஹி நவராத்திரி எனப்படுகிறது. இதை ஆஷாட நவராத்திரி என்றும் சொல்வார்கள். ஒரு காலத்தில் அம்பிகை வழிபாடு தாய் வழிபாடாக மிகவும் சீரும் சிறப்புடன் விளங்கியது. நவராத்திரி என்றால் புரட்டாசி நவராத்திரிதான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் 12 மாதங்களிலும் அம்பிகையை நினைத்து 12 நவராத்திரிகள் கொண்டாடிய காலமும் உண்டு.

    இப்போது பிரதானமாக நான்கு நவராத்திரிகள் இருக்கின்றன. வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி. இதில் ஆஷாட நவராத்திரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகிறது.

    குறிப்பாக இந்த நவராத்திரியின் நடுவில் திகழும் பஞ்சமி திதி வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஸ்ரீ வராஹி தேவியை உபாசிக்க சிறப்பான நாளாகும்.

    இந்த நாட்களில் விரதம் இருந்து ஸ்ரீ மகா வராஹிக்கு அபிஷேகம், அர்ச்சனை பூஜைகள் செய்யலாம். இதனால் சிறந்த பேச்சுத் திறன் கிடைக்கும். ஜாதகப்படி செவ்வாய் ராகு மற்றும் கேது கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகும். எங்கும் எதிலும் பாதுகாப்பு கிடைக்கும்.

    மேலும் ஸ்ரீமகாவராஹியை வணங்குபவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் தீய மந்திரங்களாலும் செய்வினைகளாலும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இதை ஓட்டியே வராஹிக் காரனோடு வாதாடாதே என்னும் பழமொழி கூறப்படுகிறது.

    இந்த நவராத்திரி ஒன்பது நாட்களும் விரதம் இருந்து ஸ்ரீ மகா வராஹியின் படத்தை வைத்து அம்மனின் வலது பக்கத்தில் தாமரைத் தண்டு அல்லது வாழைத் தண்டால் திரி செய்து நெய் தீபம் ஏற்றி,

    மஞ்சள் பட்டுத் துணி சாத்தி,

    பஞ்சம்யை நம,

    தண்டநாதாயை நம,

    சங்கேதாயை நம,

    சமயேஸ்வர்யை நம,

    சமய சங்கேதாயை நம,

    வராஹியை நம,

    போத்ரிண்யை நம,

    ரிவாயை நம,

    வார்த்தாள்யை நம,

    மகாசேனாயை நம,

    ஆக்ஞாசக்ரேஸ்வர்யை நம,

    அரிக்ன்யை நம என்னும் 12 மந்திரங்களை சொல்லி சிவப்பு புஷ்பத்தால் பூஜை செய்ய வேண்டும். தோல் உரிக்காத கருப்பு, உளுந்தால் செய்த வடையும், மிளகு சேர்த்த தயிர் சாதமும், சக்கரைவள்ளிக் கிழங்கும், சுக்கு சேர்த்த பானகமும், நிவேதனம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு முறையாக பக்தியுடன் ஸ்ரீ வராஹியை நவராத்திரி ஒன்பது நாளும் பூஜை செய்பவர்களுக்கு அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களும் நோய் எதிரி மற்றும் அனைத்து ஆபத்துக்களில் இருந்தும் பாதுகாக்கப்படுவார்கள்.

    தஞ்சை பெரிய கோவிலில் எப்போதும் ஆஷாட நவராத்திரி மிக விசேஷமாக கொண்டாடப்படும். இந்த நாளில் நவதானிய அலங்காரம், தேங்காய் பூ, சந்தனம், குங்கும அலங்காரம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஒன்பது நாட்கள் விரதம் இருந்து தினமும் வீட்டில் பூஜை அறையில் கோலமிட்டு, விளக்கேற்றி, அன்னை வராஹியை வழிபட்டால் எப்பொழுதும் குறைவற்ற செல்வமும் தானிய விருத்தியும் ஏற்படும். மாணவ-மாணவிகள் வராஹி அம்மனை வழிபட சகல கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

    • வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடக்கின்றன.
    • 23-ந்தேதி பஞ்சமி திதி நாளில் வாராஹி அம்மனை வழிபடுவதற்கு உகந்த நாளாகும்.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், உடன்குடி மற்றும் திசையன்விளைக்கு அருகில் உள்ள கொம்மடிக்கோட்டையில் வாலைகுருசுவாமி கோவில் உள்ளது. பாலாசேத்திரம் என அழைக்கப்படும் இக்கோவிலில் வராஹி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் நடைபெற்று வரும் விழாக்களில் ஆனி மாதம் நடைபெறும் ஆஷாட நவராத்திரி விழா முக்கியமான ஒன்றாகும்.

    ஆஷாட நவராத்திரி காலம் என்பது சந்திரமான கால கணிதமுறையில் ஆனி மாதத்தில் தொடங்குகின்ற அமாவாசையை அடுத்த பிரதமை முதல் நவமி வரையிலான காலம் ஆகும். அந்த வகையில் குருசுவாமி கோவிலில் உள்ள வராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 9 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஆஷாட நவராத்திரி விழா சிறப்பு அபிஷேகத்துடன் நேற்று தொடங்கியது. ஆஷாட நவராத்திரி நாட்களில் வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடக்கின்றன. இந்த விழா வருகிற 26-ந்தேதி வரை நடக்கிறது.

    குறிப்பாக 23-ந்தேதி பஞ்சமி திதி நாளில் வாராஹி அம்மனை வழிபடுவதற்கு உகந்த நாளாகும். இந்த நாளில் செய்யும் வேண்டுதல்கள் அனைத்தும் அப்படியே நிறைவேறும் என்கின்றனர். ஆஷாட நவராத்திரி விழாவில் வாராஹி அம்மனுக்கு தினமும் அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடக்கும்.

    ×