என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Varahi amman"
- வாராகி அருள்பெற இந்த வாராகி மாலை ஒன்றே போதுமானது.
- அனைவரும் இதனை படித்து சகல பாக்கியங்களையும் பெற்று நிம்மதியாக வாழ வேண்டும்.
1. அன்னை வடிவம்
இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டு கண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகர் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே...
பொருள்: நவரத்தினம் அனைத்தும் அன்னைக்கு அவள் உடலுக்கு ஒப்பிட்டு கூறப்படுகிறது.
செவிகள் -குழை, திருவடிகள் -புஷ்பராகம், இரண்டு கண்கள் -நீல கல், கரங்கள் -கோமேதகம், நகம் -வைரம், சிரிப்பு -முத்து பவளம் போன்ற இதழ். திருமேனி உடலோ மரகதம், பச்சை மாணிக்கம் போல் ஒளிரும் மேனியுடையதாகும்.
பயன்படுத்தும் முறை : அன்னையை வழிபடும்போது அவளை நம்மோடு இணைய விண்ணப்பம் செய்யும் முதல் பாடல்.
2. அருள்காட்சி வடிவம்
தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்குவட்டது
ஈராறிதழ் இட்டு, ரீங்காரம் உள்ளிட்டது நடுவே
ஆராதனை செய்து அர்ச்சி பூஜித்து அடிபணிந்தால்
வாராது இராள் அல்லவே வாலை ஞான வாராகியுமே
பொருள்: வாராகி யந்திர வடிவம் இது. முக்கோணம், அறுகோணம், வட்டம், சுற்றிலும் தாமரைத்தளம், மத்தியில் பீஜம், இதை முறையாக எழுதி வாராகியை வழிபட வாராகி 'வாலை' திரிபுர சுந்தரியாக எழுந்து நமக்கு 'அட்டமா சித்திகளை' வழங்குவாள் என்று பொருள்.
பயன்பாடு : ஒரு குறிப்பிட்ட வழிபாட்டிற்காக அன்னையை நம் முன் அமரவைக்க இப்பாடலை பாட வேண்டும்.
3. பக்தியின் உச்சம்
மெய்சிறந்தார் பணியார் மனம்காயம் மிக வெகுண்டு
கை சிரத்து ஏந்திப் பலால் நீணம் நாறக் கடித்து உதறி
வச்சிரத் தந்த முகபணியால் குத்தி வாய் கடித்து
பச்சிரத்தம் குடிப்பாளே வாராகி பகைஞரையே.
பொருள்: தீமையை பொறுக்காத சினம் கொண்டவள் ஸ்ரீவாராகி.
அதுவும் தூயவர்களை -அவளிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர்களை தீயவர்கள் துன்புறுத்தினால் அன்னை கோபம் கொள்கிறாள்.
அந்த பகைவர் கடுமையாக தண்டிக்கப்படுகிறார்.
அவர்கள் மட்டுமல்ல, உண்மையான பக்தியின்றி பணிபவர்களும் இந்த தண்டனையை ஏற்க வேண்டியதுதான்.
பகைவர் உடலை தன் கூரிய நகங்களால் கிழித்து கூரிய கொம்புகளாக குத்தி குருதி குடிப்பாள்.
எனவே வாராகி வழிபாடு மிகவும் கட்டுப்பாடு உரியது. விளையாட்டல்ல என எச்சரிக்கப்படுகிறது.
பயன்பாடு: எதிரிகள் தொல்லை நீங்க பாடுவது நன்மை தரும்.
4. சக்தியின் வெளிப்பாடு
படிக்கும் பெரும்புகழ் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்பு தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலையிட்டு குலாவிமன்றில்
நடிக்கும் வாராகி பதினாலு உலகம் நடுங்கிடவே...
பொருள்: தவறிழைக்காத வாராகி பக்தர்கள், இன்னலுக்கு உட்பட்டால் அதற்கு காரணமானவர் பெறும் தண்டனை கடுமையானது.
தேவியின் தண்டம் (தடி) அவர்களை அடித்து துவம்சம் செய்யும்.
பக்தரை காக்கும் பேரரணாக தேவி வெளிப்படுவாள் என்று உணர வேண்டும்.
பயன்பாடு: வீண்பழி நாம் பெறும்போது இப்பாடலை பாடி, நன்மை பெறலாம்.
- நம் நாவினால் பாடுகின்றபோது நாம் கேட்கும் பலன் தடையின்றி விரைவில் நமக்கு கிடைக்கின்றது.
- இது பகை அல்லல் அகற்றும் பாமாலை.
எந்த ஒரு வழிபாடு செய்யும்போதும் அந்த தெய்வங்களுக்கு உரிய மிகவும் பிடித்த மந்திரப்பாடல்களை
நம் நாவினால் பாடுகின்றபோது நாம் கேட்கும் பலன் தடையின்றி விரைவில் நமக்கு கிடைக்கின்றது.
ஒவ்வொரு இறைவனுக்கும் ஒவ்வொரு பாடல் பாடியே அவர்களை மகிழ்வித்தே நம் முன்னோர்கள் சித்தர்கள்
கண்கொள்ளா காட்சி கண்டு முக்தி பெற்றனர்.
அதேபோலதான், நீங்கள் அன்னையின் வரலாறுகளை அவள் மகிமைகளை தெரிந்து கொண்ட பிறகு
அவள் அருளை பெற உங்கள் மனம் துடிக்கின்றது என நான் அறிவேன்.
வாராகி அன்னைக்கு லட்சோப அதர்வன சித்திமந்திரம் இருந்தாலும், அவள் கூப்பிட்ட உடன் அகம் மகிழ்ந்து
ஓடிவந்து நிற்பது 'வாராகிமாலை' எனும் அற்புத பாமாலைதான்.
இது பகை அல்லல் அகற்றும் பாமாலை, இந்த வாராகி மாலையை மாலை நேரத்தில் யார் பாடி அன்னையை
வழிபடுகிறார்களோ அவர் நிச்சயம் வெற்றியாள ஞானியே, இந்த வாராகி மாலையில் 32 பாடல்கள் அடங்கி உள்ளது.
இந்த 32 பாடல்களும் ஒவ்வொரு நிலையிலும், நமக்கு மிகப்பெரிய சிறப்புகளையும், நல்ல வாழ்வையும் அளிக்கவல்லது.
வாராகி அருள்பெற இந்த வாராகி மாலை ஒன்றே போதுமானது.
உலகம் நலம்பெற, என் மக்கள் வாழ்வு வளம்பெற அன்னை அருள் ஆட்சி செய்யட்டும் என்றுதான்
இந்த மாபெரும் பொக்கிஷத்தை உங்களுக்கு விளக்கத்தோடு வழங்குகிறேன்.
அனைவரும் இதனை படித்து சகலபாக்கியங்களையும் பெற்று நிம்மதியாக வாழ வேண்டும்.
அதுவே என் அன்னை வாராகியின் இலக்கு.
- வாராஹி, சப்த மாதாக்களில் முதன்மையானவள்.
- கருடன், சேஷநாகம், மகிஷன், சிங்கம், முதலியவை இவள் வாகனங்கள்.
ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனை மாய்த்து தந்தத்தால் ஆன மாலை சூடிய பூவராக மூர்த்தியின் ஸ்த்ரீ அம்சமான
வாராஹி, சப்த மாதாக்களில் முதன்மையானவள்.
இவளே வாக்தேவி என்று ரிக் வேதம் சொல்லும்.
பெண்மையின் மஹா சக்தியான இவள் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சிக்கு ஆதாரம்.
வெவ்வேறு வகையான கோலங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, சுதை பத்மம், மீன், குழந்தை
முதலியவற்றைக் கையில் ஏந்தி காட்சி தருபவள்.
கருடன், சேஷநாகம், மகிஷன், சிங்கம், முதலியவை இவள் வாகனங்கள்.
ஸ்ரீவித்யா உபாசனையில் பரவித்யாவாக போற்றப்படுபவள்.
விஷ்ணுவின் யோகமாயையான இவளே ஸ்ரீலலிதையின் தண்ட நாயகியாகவும், தண்டினி என்றும் வழங்கப்படுகிறாள்.
பூமி தானேஸ்வரியான இவள் நமக்கு பூமி சம்மந்தமான சொத்துக்கள் பெறவும், வழக்குகள் வியாஜ்யங்கள் இவற்றில் வெற்றி பெறவும் உதவுவாள்.
இவளை வழிபட வாஸ்து தோஷம் நீங்கும்.
தானிய வளம் பெருக இவள் கருணை வேண்டும்.
இவளை உபாசிப்பவர்களை எதிரிகள் எதிர்க்கமாட்டார்கள்.
வணங்குபவர்களின் குலத்திற்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் தந்து சகல சங்கடங்களிலிருந்து
நிவாரணம் தரும் இந்த மஹா சக்தியான கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான ஸ்ரீவராஹி,
அஸ்வாரூடா, கஜாரூடா, வியாக்ராரூடா, மந்திர வாராஹி சொப்ன வாராஹி என்று பல ரூபங்களில் தரிசனம் தருகிறாள்.
இவ்வளவு சிறப்புகள் பெற்ற இந்த ஜகன்மாதா இத்திருத்தலத்தில் அணி அண்ணாமலையர் சன்னதியின் மேற்கு புறத்தில் வீற்றிருந்து அருள்பாளித்து வருகிறாள்.
- ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும்.
- பெண்கள் இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும்.
நல்ல மஞ்சள் நிறமுடைய பழுத்த எழுமிச்சம்பழங்களை வாங்கி அவைகளை இரண்டாக குறுக்கு வசத்தில் அறுத்து சாறு பிழிந்துவிட்டு குப்புறக் கவிழ்த்து கிண்ணம்போல் செய்து கொள்ள வேண்டும்.
அதில் நெய் ஊற்றி திரிபோட்டு, அத்துடன் அர்ச்சனைப் பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அம்மனை அர்ச்சனை செய்ய கொண்டு வந்திருக்கும் பூ, பழம், கற்பூரம், தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, ஊதுவத்தி,
எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம், விபூதி, பன்னீர் பாட்டில் அடங்கிய அர்ச்சனை தட்டை அம்மனை பூஜை செய்யும் அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும்.
துர்க்கைக்கு எலுமிச்சம்பழ மாலை சூட்ட விருப்பம் உள்ள பக்தர்கள் எலுமிச்சம்பழத்தை மாலையாகத் தொடுத்து அர்ச்சகரிடம் கொடுத்தால் அவர் அம்மாலையை அம்மனுக்கு சாத்துவார்.
அதன்பின்னர் தயாராக செய்து வைத்துள்ள எலுமிச்சப்பழக் கிண்ண விளக்கில் திரியை கொளுத்தி ஒளிப்பெற செய்யவேண்டும்.
ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும்.
பிரார்த்தனைக்கு ஏற்றவாறு ஐந்து, ஒன்பது, பதினொன்று, நூற்றி ஒன்று இப்படி எத்தனை வேண்டுமானாலும் நெய்விளக்கு ஏற்றலாம்.
திருமணம் ஆகவேண்டிய பெண்கள் இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும்.
எலுமிச்சம் பழ நெய்விளக்குகள் ஏற்றிய பின்னர் அந்த ஒளியில் துர்க்காதேவியின் திருமுகத்தை உற்றுப்பாருங்கள்.
தன்னை மறந்து அன்னையின் மீது உங்கள் மனதை ஐக்கியப்படுத்துங்கள்.
மானசீகமாக தங்களின் குறைகளை அன்னையிடம் சமர்ப்பியுங்கள். உங்களது குறைகள் என்னவாக இருந்தாலும் தீர்த்து வைப்பாள்.
அவளது பேரருள் தங்களுக்கு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறி நல்வாழ்வு பெறுவீர்கள்.
அன்னையின் முன்னால் துர்க்கை அம்மன் கவசத்தை 108 தடவை வாய்விட்டு சொல்லுங்கள்.
பக்தி பரவசத்துடன் பாமாலைப் பாடி மனமுருகி துதியுங்கள். மன நிம்மதி பெறுவீர்கள்.
தீபாராதனை முடித்து அர்ச்சகர் அர்ச்சனைத் தட்டை தரும்போது அம்மனின் பிரசாதமாக குங்குமம், பூ தருவார்.
அதனால் அன்னையின் அருள்கடாட்சம் பரிபூரணமாகக் கிடைக்கும்.
பூஜை முடிந்த பின்னர் அன்னையின் சுற்று பிரகாரத்தை பதினெட்டு தரம் வலம் வந்து, கொடி மரத்தையும் பதினொரு தரம் சுற்றிவிட்டு,
அம்மனின் சன்னதியின் எதிரில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு எழும்போது அங்கிருந்தவாறே அம்மனை வணங்கிவிட்டு வர வேண்டும்.
- பூஜை செய்யும் அறையில் முதலில் சக்தி மாகோலமிட வேண்டும்.
- அதனை சுற்றி செம்மண் இட்டு அதன்மீது தலை வாழையிலையை போடவேண்டும்.
துர்க்கை அன்னையை வீட்டிலேயே தீப பூஜை செய்ய விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் முறையில் அனுசரித்து வழிபட வேண்டும்.
பூஜை செய்யும் அறையை முதலில் சுத்தமாக கழுவிவிட்டு, அங்கே சக்தி மாகோலமிட வேண்டும்.
அதனை சுற்றி செம்மண் இட்டு அதன்மீது தலை வாழையிலையை போடவேண்டும்.
வாழை இலையில் பச்சரிசியைப் பரப்பி அதன் நடுவில் ஐந்துமுக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.
மஞ்சள் நிறமுடைய பத்து எலுமிச்சம் பழங்களை வாங்கி, பழங்களை இரண்டு துண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
அந்த இருபது துண்டுகளில் இரண்டு துண்டுகளை மட்டும் எடுத்து சாறு பிழிந்து விட்டு பிழிந்த முடிகளை உள்பக்கம் வெளிப்பக்கம் வருமாறு திருப்பி குழிவான கிண்ணம் போல் செய்து கொள்ள வேண்டும்.
அந்த எலுமிச்சம்பழக் கிண்ணத்தில் நெய் ஊற்றி திரி போட்டு ஏற்றி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட துர்க்கா தேவியின் படத்தின் முன்போ, அல்லது சிலையின் முன்போ வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
துர்க்கா தேவிக்கு நிவேதனைப் பொருளாக தயிர் சாதம், உளுத்துவடை, அவல், பாயாசம், எலுமிச்சம் பழச்சாதம் படைக்கலாம்.
- துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும்.
- தோஷம் அகல மாலை நேரம் அம்மனை வழிபட வேண்டும்.
துர்க்கா பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகல விதமான சம்பத்துகளும் வந்துசேரும்.
குடும்ப கஷ்டங்கள் விலகி ஓடும்.
எந்தவித தோஷங்கள் தாக்கி கஷ்டப்பட்டாலும் துர்க்கை அம்மன் அதனை அகற்றி அருள்புரிவாள்.
தோஷம் அகல உகந்த நேரம் மாலை நேரம் என்பதினால் அந்நேரத்தில் அம்மனை வழிபட வேண்டும்.
துர்க்காதேவிக்கு உகந்த நாட்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களாகும்.
இருப்பினும், மிகவும் உகந்த காலம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 வரையிலான ராகு காலமே பூஜைக்குரிய சிறப்பான நேரமாகும்.
அன்னையின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து தலைக்கு பூச்சூடி,
நெற்றிக்கு விபூதி, குங்குமம் வைத்துக்கொண்டு துர்க்கா தேவியை வழிபட கோவிலுக்கு செல்லவேண்டும்.
துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும்.
அந்த பூக்களை உதிரியாகவோ அல்லது மாலையாகவோ வாங்கி கொள்ளலாம்.
- கறுப்பு நிறத்துடன் காணப்படும் இவளது முகம் பன்றியை ஒத்திருக்கும்.
- தண்டநாத வாராகி பொன் நிறம் உடையவள்.
வாராகி என்பவள் வாரகமூர்த்தியின் சக்தி ஆவாள்.
கறுப்பு நிறத்துடன் காணப்படும் இவளது முகம் பன்றியை ஒத்திருக்கும்.
இவளுக்கு மொத்தம் 6 கைகள் உண்டு.
வலது கரத்தில் வரத முத்திரையும், இடது கரத்தில் அபய முத்திரையும் கொண்டிருக்கிறாள்.
இவள் எருமையை வாகனமாக கொண்டிருப்பதாக ஸ்ரீதத்துவநிதி சொல்கிறது.
வாராகி அம்சத்தில் தண்டநாத வாராகி, சுவப்ன வாராகி, சுத்த வாராகி என்று மேலும் 3 வகை வாராகிகள் உள்ளனர்.
தண்டநாத வாராகி பொன் நிறம் உடையவள்.
பன்றி முகத்துடன் காட்சி அளிக்கும் இவள் கைகளில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் ஆகியவற்றை ஏந்தி உள்ளாள்.
சுவப்ன வாராகி மேகம் போன்ற நிறம் கொண்டவள்.
இவளுக்கு 3 கண்கள் உண்டு. தலையில் பிறைச்சந்திரனை சூடி இருப்பாள்.
கைகளில் வாள், கேடயம், அரிவாள் ஆகியவற்றை ஏந்தி இருப்பாள்.
சுத்தவாராகி என்பவள் நீலநிறமாக இருப்பாள்.
இவளது பன்றி முகத்தில் இருந்து வெள்ளை நிற கோர பற்கள் வெளியே நீண்டு கொண்டிருக்கும்.
இவள் தலையில் பிறச்சந்திரனை சூடி இருப்பாள்.
இவள் தன் கைகளில் சூலம், உடுக்கை, நாகம் போன்றவற்றை ஏந்தி இருப்பாள்.
- ஓம் நல்வினை நிகழ்த்துவோய் போற்றி
- ஓம் அகிலத்தின் காப்பே போற்றி
ஓம் அறிவினுக்கறிவே போற்றி
ஓம் ஞானதீபமே போற்றி
ஓம் அருமறைப் பொருளே போற்றி
ஓம் ஆதிமூலமாய் நின்றவளே போற்றி
ஓம் புகழ்தரும் புண்ணியளே போற்றி
ஓம் நறும்பாகின் சுவையே போற்றி
ஓம் நல்வினை நிகழ்த்துவோய் போற்றி
ஓம் பரமனின் சக்தியே போற்றி
ஓம் பாபங்கள் களைவாய் போற்றி
ஓம் அன்பெனும் முகத்தவளே போற்றி
ஓம் அகிலத்தின் காப்பே போற்றி
ஓம் செம்மேனியளே போற்றி
ஓம் செபத்தின் விளக்கமே போற்றி
ஓம் தானியந் தருவாய் போற்றி
ஓம் கல்யாணியம்மையே போற்றி
- மிளகு சாதம், பால் பாயாசம், காராமணி சுண்டல் வைத்து பூஜை செய்யலாம்.
- அன்னையை பலவாறாக மயக்க எண்ணி பல வடிவங்களெடுத்து போரிடுகிறான்.
தூம்ரலோசனன், சும்பன், நிசும்பன் என்று தூதுவர்களை அனுப்பி அவர்களும் பராசக்தியுடன் போரிட்டு மாண்டதும் தானே போருக்குக் கிளம்பி வருகிறாள்.
அன்னையை பலவாறாக மயக்க எண்ணி பல வடிவங்களெடுத்து போரிடுகிறான்.
தன்னை மணக்கும்படி வேறு கூறுகிறான்.
இறுதியில் பராசக்தி அவனைத் தன் காலடியில் போட்டு, தன் வாளால் வெட்டி வீழ்த்தினாள்.
அசுரனாக இருந்தாலும் அவனும் மோட்சம் என்ற நற்கதியை அடைய அவன் தலை மீதே தன் திருப்பாதங்களை வைத்து அருள் பாலிக்கும் நிலையில் சூலம் ஏந்திய துர்கையாக வராகி வடிவத்தில் காட்சியளிக்கிறாள்.
மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் பூஜை செய்து தீபம் ஏற்றுவது சிறந்தது.
தேவியின் பாடல்களை காம்போதி ராகத்தில் பாடுவது சிறப்பானது.
மிளகு சாதம், பால் பாயாசம், காராமணி சுண்டல் வைத்து பூஜை செய்யலாம்.
மரிக்கொழுந்து மற்றும் சம்பங்கி மலர்களால் கோர்க்கப்பட்ட மாலையை அணிவிக்கலாம்.
இந்த மலர்களால் அர்ச்சனையும் செய்யலாம்.
- சம்பங்கியும் மரிக்கொழுந்தும் கல்யாணி தேவியின் விருப்ப மலர்கள்.
- சர்க்கரைப் பொங்கல் சமைத்து, நைவேத்தியம் செய்யுங்கள்.
நவராத்திரி 3ம் நாள் மகிஷாசூரனை வதம் புரிந்து, சூலமும் கையுமாய், மகிஷனின் தலைமீது வீற்றிருக்கும் தாயை மனதில் நினைத்துக் கும்பிடுவார்கள்.
இவளை, இந்த நிலையில் "கல்யாணி" என்று அழைப்பார்கள்.
சம்பங்கியும் மரிக்கொழுந்தும் கல்யாணி தேவியின் விருப்ப மலர்கள்.
மனதில் உள்ள பக்தியை எல்லாம், சர்க்கரைப் பொங்கலாய் சமைத்து, நைவேத்தியம் செய்யுங்கள்.
வெற்றியையே உகந்தளிக்கும் செல்விக்கு இனிப்பையே படைப்போம்.
மகிஷாசுரனை வதம் செய்த தேவி வராகியாகவும் அம்பிகை காட்சி தருகிறாள்.
- ஞாயிற்றுக்கிழமை கன்னிமார் பூஜை, அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
- 28-ந்தேதி மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவுபெறுகிறது.
திண்டுக்கல்லை அடுத்த கம்பிளியம்பட்டி அருகே சின்னாம்பட்டியில் வராஹி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா கடந்த 18-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்து வருகிறது.
அதன்படி நேற்று சிம்ஹாரூடா வராஹி ஹோமம் மற்றும் அலங்கார ஆராதனைகள் மகா பூர்ணாகுதி ஆகியவை கோவிலில் நடந்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வராஹி அம்மன் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) உன்மத்த பைரவி ஹோமம் நடைபெறுகிறது. மாதுளை அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். இதேபோல் நாளை (சனிக்கிழமை) விளக்குபூஜை, காய்கறிகளால் அம்மனுக்கு அலங்காரம் நடைபெறுகிறது.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கன்னிமார் பூஜை, மாவிளக்கு எடுத்தல், அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 26-ந்தேதி சுமங்கலி பூஜையும், 27-ந்தேதியன்று தம்பதியினர் பூஜை, பொங்கல் வைத்தல், மகா வரசித்தி வராகி மூல மந்திர ஹோமம், பட்டுப்புடவை அம்மனுக்கு சமர்ப்பித்தல், மகா கலசாபிஷேகம், இரவில் அம்மன் ரத உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 28-ந்தேதி மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கம்பிளியம்பட்டி, சின்னாம்பட்டி, வாராகிபுரம் ஊர் பொதுமக்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வரசித்தி வாராகி பக்தர்கள் செய்து வருகின்றனர்.
- சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கண்ணன் சிவாச்சாரியார் செய்தார்.
- திரளான பெண்கள் கலந்து கொண்டு சிம்ஹாருட வராஹி அம்மனை வழிபட்டனர்.
கும்பகோணம் அருகே உள்ள பிளாஞ்சேரியில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு தனி கோவில் கொண்டு சிம்ஹாருட வராஹி அம்மன் அருள் பாலிக்கிறார்.
ஆஷாட நவராத்திரியையொட்டி நேற்று காலை சிம்ஹாருடவராஹி அம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு வெண்ணைக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கண்ணன் சிவாச்சாரியார் செய்தார். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சிம்ஹாருட வராஹி அம்மனை வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் எஸ். நாகராஜ சிவாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்