என் மலர்
நீங்கள் தேடியது "பஞ்சமி வழிபாடு"
- இந்த வசந்த பஞ்சமியை சரஸ்வதி ஜெயந்தி, சரஸ்வதி பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி எனவும் அழைக்கின்றனர்.
- மஞ்சள் என்பது வசந்த பஞ்சமியின் நிறம். இது ஆற்றல், செழிப்பு மற்றும் ஞானத்தை குறிக்கிறது.
தமிழில் 12 மாதங்களுக்கும் 12 விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாஸ்திர நூல்கள். ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி.
12 நவராத்திரிகள் இருந்தாலும் இந்த 4 நவராத்திரி காலங்கள் மிக மிக முக்கியமானவை என்கின்றனர் பெரியவர்கள்.
தை மாத சியாமளா நவராத்திரியில், ஒவ்வொரு நாளும் வீட்டில் உள்ள அம்பாள் படங்களுக்கு மலர்கள் சூட்டி வணங்குவது சிறப்பு. குறிப்பாக, செவ்வரளி முதலான மலர்கள் சூட்டி அலங்கரிப்பதும் ஏதேனும் ஒரு இனிப்பு நைவேத்தியம் செய்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும்.
பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், கேசரி முதலான இனிப்புகளை நைவேத்தியமாகப் படைத்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கலாம். தை அமாவாசைக்குப் பிறகு வருவதே சியாமளா நவராத்திரி. இந்தக் காலங்களில் வருகிற சதுர்த்தி விசேஷம். இதை மாக சதுர்த்தி என்றும் வரசதுர்த்தி என்றும் கொண்டாடுவார்கள்.
அதேபோல், சியாமளா நவராத்திரி நாளில் வரக்கூடிய பஞ்சமி திதி ரொம்பவே மகிமை மிக்கது. மகத்துவம் வாய்ந்தது. புத்தியில் தெளிவையும் மனதில் நம்பிக்கைச் சுடரையும் ஏற்றித் தந்தருளக்கூடியது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சாரதா நவராத்திரியின் 9-ம் நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.
அன்று கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வழிபடுவார்கள். அதே போன்று சரஸ்வதியை வழிபட உகந்த மற்றொரு சிறப்பு வாய்ந்த நாள் வசந்த பஞ்சமி. பஞ்சமியில் மிக விசேஷமானது கருட பஞ்சமி, ரிஷி பஞ்சமி, வசந்த பஞ்சமி.
ஆடி அமாவாசைக்கு பிறகு வரும் பஞ்சமியை 'கருட பஞ்சமி' என்றும், ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமியை ரிஷி பஞ்சமி' என்றும் வழிபடுவார்கள். அது போலவே தை அமாவாசைக்கு பின் வரும் பஞ்சமி திதி 'வசந்த பஞ்சமி' என்கின்றனர்.
சரஸ்வதி தேவியின் அருளை பெறுவதற்கான மிக சிறப்பான நாளாக வசந்த பஞ்சமி உள்ளது. மாணவர்கள், கலைஞர்கள், அறிவு சார்ந்த துறைகளில் இருப்பவர் அவசியம் கொண்டாட வேண்டிய திரு நாளாக வசந்த பஞ்சமி கருதப்படுகிறது.
மாதந்தோறும் இரண்டு முறை பஞ்சமி திதி வந்தாலும், தை மாத வளர்பிறையில் வரும் வசந்த பஞ்சமி சிறப்புக்குரிய நாளாகும். இந்த நாளை மிக முக்கியமான வழிபாட்டு நாளாக இந்துக்கள் கருதுகிறார்கள். வசந்த காலத்தின் தொடக்கமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிறப்பு பூஜைகள் செய்து சரஸ்வதியை வழிபடலாம்.
இந்த வசந்த பஞ்சமியை சரஸ்வதி ஜெயந்தி, சரஸ்வதி பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி எனவும் அழைக்கின்றனர். இந்த ஆண்டு வசந்த பஞ்சமி நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பஞ்சமி திதி நாளை அதிகாலை 2:28 மணிக்குத் தொடங்கி நாளை மறுநாள் அதிகாலை 1:46 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் சரஸ்வதியை பூஜித்து வழிபட வேண்டும்.
நவராத்திரியில் வரும் சரஸ்வதி பூஜை அன்று செய்யப்படும் அனைத்து வழிபாடுகளையும் இந்த நாளில் மேற்கொள்ளலாம். இதன் மூலம் ஞானம், அறிவு, கல்வியில் வெற்றி ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கை. வசந்த பஞ்சமி அன்று மஞ்சள் நிற உடையணிந்து கொள்வது நல்லது. மஞ்சள் அன்பு, செல்வ வளம், தூய்மை ஆகியவற்றை குறிப்பதாகும். சரஸ்வதி தேவியின் சிலையை வாசனை மிகுந்த மலர்களால் அலங்கரித்து, கேசரி படைத்து வழிபடுவது சிறப்பு. மாணவர்கள் தங்களின் புத்தகங்களை சரஸ்வதி படத்திற்கு முன் வைத்து வணங்கி, சரஸ்வதி தேவியின் அருளை பெற வேண்டும்.
உலகத்தை பிரம்ம தேவர் படைத்த பிறகு அவரது கையில் இருந்த கமண்டலத்திலிருந்து சில துளி நீர் கீழே சிதறியது. அந்த நீரில் இருந்து உருவானவர்தான் சரஸ்வதி தேவி. அதனால் தான் இந்த நாள் சரஸ்வதிக்கு உகந்ததாக கூறப்படுகிறது. திருமணங்கள், கல்வி மற்றும் வணிக முயற்சிகள் உள்ளிட்ட புதிய தொடக்கங்களுக்கும் இந்த திருவிழா மங்களகரமானதாக கருதப்படுகிறது.
மஞ்சள் என்பது வசந்த பஞ்சமியின் நிறம். இது ஆற்றல், செழிப்பு மற்றும் ஞானத்தை குறிக்கிறது. வழிபாடு செய்யும் முன் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து, கேசரி அல்வா மற்றும் லட்டு போன்ற பாரம்பரிய மஞ்சள் நிற இனிப்புகளை தயார் செய்து சரஸ்வதி தேவிக்கு படைத்து தீப ஆராதனை செய்து வழிபட வேண்டும். இந்த நன்னாளில் விரதம் கடைப்பிடிக்கும் பக்தர்கள், மாலையில் அம்மனை வழிபட்ட பிறகு விரதத்தை முடிக்கலாம்.
வசந்த பஞ்சமியின் சிறப்பு
முருகனுக்கு உகந்தது சஷ்டி திதி, விநாயகருக்கு உகந்தது சதுர்த்தி திதி என்பது போல பஞ்சமி திதி வராகி அம்மன் வழிபாட்டுக்கு உகந்தது. ஆனால் ஒரு சில மாதங்களில் வரும் பஞ்சமி திதி மிக விசேஷமானவை.
ஆடி மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் பஞ்சமி திதி கருட பஞ்சமி என்று நாக தோஷங்களை போக்கும் சக்தி வாய்ந்த நாளாகும்.
அதே போல ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாள் வரும் ரிஷி பஞ்சமி குரு தோஷங்களை போக்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோலத்தான் தை மாதத்தில் வளர்பிறை பஞ்சமி வசந்த பஞ்சமி என்று கொண்டாடப்படுகிறது.
கல்விக்கு சரஸ்வதி, பகை வெல்ல வாராகி
பொதுவாகவே பஞ்சமி என்பது வாராகி அம்மனை வழிபட உகந்த திதி. குறிப்பாக, இந்த வசந்த பஞ்சமி நாளில் வாராகி அம்மன் வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும். ஸ்ரீ வாராகி மன சஞ்சலங்கள், வீண் கலக்கம், சத்ரு பயம் ஆகியவற்றை விலக்கி, சந்தோஷ வாழ்வளிக்கும் இந்தத் தேவி, சப்த மாதர்களில் ஒருவர்.
இந்த நாளில் விரதமிருந்து மாலை வாராகி அம்மனை வழிபட வாழ்வில் பகைவர்களால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும். மேலும், பூமி தொடர்பான பிரச்சனைகள் தீர வாராகி வழிபாடு மிகவும் முக்கியம். குறிப்பாக, வசந்த பஞ்சமி அன்று வாராகி வழிபாடு செய்வது மிகவும் சிறப்புவாய்ந்தது.
வசந்த பஞ்சமி திதியில், வாராகி அம்மனையும், கூடவே சரஸ்வதி தேவியையும் மனமுருக வழிபட்டால், துஷ்ட சக்திகள் அண்டாது. எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். இல்லத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், மங்கல விசேஷங்கள் தடையின்றி நிகழும். இல்லத்தில் தனம் தானியம் பெருகும். சுபிட்சத்தைத் தந்திடுவாள் என்கின்றனர் ஆன்மீக பெரியவர்கள்.
- வளர்பிறை பஞ்சமி திதியில் வராகியை வணங்கும் போது வராகி தேவியின் மூல மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
- வீட்டில் வழிபடும்போது வராகி படம் அல்லது சிலை இருந்தால், விரலி மஞ்சளில் மாலை கட்டி வராகிக்கு சாற்றி வழிபடலாம்.
வளர்பிறை பஞ்சமியில் வராகி அம்மனை வழிபட்டால் போதும் வாழ்வில் உள்ள துன்பங்கள் அகலும். தீய சக்திகள் தலைதெறிக்க ஓடும். நீங்கள் மேற்கொள்ளும் எல்லா செயல்களிலும் வெற்றிமேல் வெற்றி வந்து சேரும் என்பது நம்பிக்கை.
நாளை வளர்பிறை பஞ்சமி வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்
* வராகி அம்மன் கோவிலுக்கு செல்ல முடிந்தவர்கள், மாலை வேளையில் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்து நல்லெண்ணெய் அல்லது நெய் விளக்கேற்றி வழிபடலாம்.
* சாமி தரிசனம் செய்த பின் அம்மனுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல், சர்க்கரை வள்ளிக்கிழங்கு முதலானவற்றை நைவேத்தியமாக படைத்து கோவிலில் உள்ளவர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம்.
* வளர்பிறை பஞ்சமி திதியில் வராகியை வணங்கும் போது மறக்காமல் வராகி தேவியின் மூல மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
வராகி மூல மந்திரம்
ஓம் ஐம் க்லெளம் ஐம் நமோ பகவதீ வார்த்தாளி, வாராஹி வாராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம:
ருத்தே ருந்தினி நம: ஸதம்பே ஸ்தம்பினி நம: ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம் ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு.
* கோவிலில் நீங்கள் விளக்கேற்றும் போதே அன்னையின் சந்நிதியில் அமர்ந்து, மனம் முழுக்க வராகியை மட்டும் நினைத்து, மனதுருகி மூல மந்திரத்தை சொல்ல வேண்டும்.

* அன்றைய தினம் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டின் பூஜையறையில் அமர்ந்து வராகி மூல மந்திரம் மற்றும் காயத்ரி மந்திரத்தை மனதார சொல்லி வழிபடலாம்.
* வீட்டில் வழிபடும்போது வராகி படம் அல்லது சிலை இருந்தால், விரலி மஞ்சளில் மாலை கட்டி வராகிக்கு சாற்றி வழிபடலாம்.
* ஒருவேளை வீட்டில் வராகி அம்மனின் திருவுருவப் படம் இல்லை என்றாலும் பரவாயில்லை, வராகியை மனதில் நிறுத்தி வராகி மந்திரத்தை சொன்னாலே போதும் வராகி அம்மன் தீமைகளில் இருந்து நம்மை காத்திடுவாள்.
வராகி மந்திரம்
"ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி"
தினமும் இந்த மந்திரத்தை சொன்னாலே போதும். செல்வமும், நல்ல எதிர்காலமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் வராகி மந்திரத்தின் பயனால் வராகி அம்மனின் அருளைப் பெறலாம் என்கின்றனர் வராகி பக்தர்கள்.
- பெருவாரியான குடும்பங்களுக்கு நாகங்கள் குலதெய்வமாக வணங்கப்பட்டு வருகிறது.
- இறைவனை நாகங்கள் வழிபட்டு பேறு பெற்ற தலங்கள் அநேகம் உள்ளது.
ஆனி மாதத்தில் ஸ்கந்த பஞ்சமி, ஆடியில் நாக பஞ்சமி, ஆவணியில் ரிஷி பஞ்சமி, கார்த்திகையில் நாக பஞ்சமி, தை மாதத்தில் வசந்த பஞ்சமி, மாசியில் ரங்க பஞ்சமி, பங்குனியில் ஸ்ரீபஞ்சமி என்று ஏழு பஞ்சமி விரதங்களை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது தமிழகத்தின் மரபாகும்.
பெருவாரியான குடும்பங்களுக்கு நாகங்கள் குலதெய்வமாக வணங்கப்பட்டு வருகிறது. ஆயில்யம் நட்சத்திர அதிதேவதை நாகராசாவாகும். நாகதோஷ நாக சாப பரிகார பூஜைகளுக்கு ஆயில்யம் நட்சத்திரமும், நாகங்களின் அனுக்கிரகம், அருள் நலம் வேண்டி பூஜித்திட பஞ்சமி திதியும் உத்தமமாகும்.

உரகம், ர, அ, பணா, கவ்வை, அரவு, நாகம், பாம்பு, சர்ப, ஆஷ்லேஷா, கட்செவி, போகி, சுகி, அரி, வியாளம், பன்னகம், மாசுணம், சக்கிரி, புயங்கம், பாந்தள், அங்கதம் எனும் 21 பெயர்களால் அழைக்கப்படுவது ஆயில்யம் நட்சத்திரம்.
பஞ்ச பிரம்மாக்களில் ஒருவரான கசியபமுனிவர் முதலில் கத்துரு முனி பத்னி மூலம் ஆயிரம் சர்ப்பங்களையும், இரண்டவதாக சுவரசை முனி பத்னி மூலம் ஆயிரம் பாம்புகளையும் தோற்றுவித்தார்.
முதன் முதலில் பிறந்தவர் சேஷன் அதனால் ஆதிசேஷன் என்ற பெயருடன் நாகராசாவாக முடி சூட்டப்பட்டார். சாத்வீக குணமும், பொறுமையும், நல்ல சிந்தனையும், கொண்ட ஆதிசேஷனுக்கு சர்ப்பங்களின் பழிவாங்கும் குணமும், கோபமும், முரட்டு சுபாவமும் பிடிக்காமல் அரச பதவியில் இருந்து விலகி தவம் மேற்கொண்டார். தவத்தின் பயனாக இறைவனிடம் வேண்டிய வரத்தின் மூலம் ஆயிரம் தலைகளுடன் பூமியைத் தாங்கும் வர பலத்தை பெற்று வணங்கத்தக்கவரானார்.
பின்னர் சர்பங்களுக்கு அரசனாக அனந்தனும் பாம்புகளுக்கு அரசனாக வாசுகியும் ஆனார்கள், ஆதிசேஷனின் தம்பியர்களான அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், பத்மன், சங்கபாலன், குளிகன், மகாபத்மன் எண்மரும் அண்ணனைப்போல தவமிருந்து அண்ணனுக்கு துணையாக இந்த பூமியை 8 திக்கில் இருந்தும் காக்கும் வரத்தைப் பெற்று அஷ்டதிக் நாகர்கள் ஆனார்கள்.

இறைவனை நாகங்கள் வழிபட்டு பேறு பெற்ற தலங்கள் அநேகம் உள்ளது. நாகர்கோவில், அனந்தமங்கலம். கார்கோடகநல்லூர், வாசுதேவநல்லூர், தச்சநல்லூர், பத்மநேரி, சங்க பாலபுரம் என்று பலவுள்ளன. நாகராசாவான அனந்தின் பெயரால் அனந்த விரதம் திருவனந்தபுரம், அனந்த பத்மநாபன், நாகநாதர், நாகேஸ்வரர்,நாகவல்லி, நாகம்மன், சேஷபுரீஸ்வரர், பாம்புரநாதர் என்ற திருப்பெயர்களும், தெய்வங்களுக்கு குடையாக படுக்கையாக, அணிகலன்கலாக, கச்சைகளாகவும் நாகங்கள் தனி இடத்தைப் பெற்றுள்ளன. புன்னாக மரம் என்ற புன்னை மரமும், புன்னாகவராளி என்ற ராகமும் விசேஷமாக உள்ளது.
- பஞ்சமி திதி என்பது பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு உகந்த நாளாகும்.
- விரலி மஞ்சளில் மாலை கட்டி வாராஹி அம்மனுக்கு சாற்றலாம்.
தேய்பிறை பஞ்சமி அன்று உக்கிர தெய்வங்களான வாராஹி அம்மன், பிரத்தியங்கரா தேவி, மகாகாளி, உள்ளிட்ட தெய்வங்களை வழிபடுவது வாழ்வில் ஏற்படக்கூடிய இன்னல்களை போக்கும், எதிர்மறையாற்றல், கண் திருஷ்டி, போன்றவை விலகும் என்பதோடு மட்டுமல்லாமல் ஜாதக ரீதியாக ஏற்படக்கூடிய தோஷங்களையும் போக்கும்.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு பிறகு வரும் ஐந்தாவது நாள், தேய்பிறை பஞ்சமியாக கொண்டாடப்படுகிறது. பஞ்சமி திதி என்பது பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு உகந்த நாளாகும்.

பஞ்சமி நாளில் வாராஹி அம்மன் வழிபாடு நிலம் கடன் மற்றும் எதிரிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க உதவும். நீண்ட காலமாக கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், பஞ்சமி அன்று வாராகி அம்மனை எப்படி வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.
ஆலயங்களில் வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி அன்று சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் பொதுவாகவே மாலை 6 மணிக்கு மேல் அதாவது சூரிய அஸ்தமனமான பிறகு தான் நடக்கும்.

வாராஹி அம்மன் கோவிலுக்கு சென்று மாதுளை பழம், செவ்வரளி பூக்கள் ஆகியவற்றை அம்மனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய் விளக்கு ஏற்றலாம்.
ஒற்றைப்படை எண்ணிக்கையில் விரலி மஞ்சளில் மாலை கட்டி, அதை கோவிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு சாற்றலாம்.
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வராகி அம்மன் படத்திற்கு முன்பு, புதிய அகல் விளக்குகளை வாங்கி நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றலாம்.
வீட்டில் எந்த வழிபாடு செய்தாலும், தீபம் ஏற்றுவதோடு மட்டுமில்லாமல், ஏதேனும் ஒரு உணவை அல்லது இனிப்பை நைவேத்தியமாக வைக்க வேண்டும்.
வாராஹி அம்மனுக்கு அவல், வெல்லம், பானகம், சர்க்கரை பொங்கல், கரும்புச் சாறு, தயிர் சாதம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மாதுளை, போன்றவற்றை நைவேத்தியமாக வைக்கலாம்.
- நெய்தீபம் ஏற்றி அம்மனை வழி பட்டனர்
- குழந்தையின்மை, திருமண தடை, தொழில்தடை ஆகியவை விலகும் என்பது நம்பிக்கை
கலவை:
ஆற்காடு அடுத்து முப்பந்தொட்டியில் பகுதியில் உள்ள வாராஹி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் திரளான பக்தர்கள் வாராஹி அம்மனை வழிபட்டுசெல்வது வழக்கம். இக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி அடுத்த 5-வது நாளில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது.
இந்த மாதத்திற்கான தேய்பிறை பஞ்சமி வழிபாடு நேற்று காலை நடந்தது. அதில் பக்தர்கள் தேங்காய் மற்றும் பூசணிக்காயை 2 உடைத்து அதில் நெய்தீபம் ஏற்றி அம்மனை வழி பட்டனர்.
நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் குடும்பத்தில் உள்ள பிரச்சினை குழந்தையின்மை, திருமண தடை, தொழில்தடை ஆகியவை விலகும் என்பது நீண்ட கால நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இந்த பஞ்சமி வழிபாட்டில் கலந்து கொள்ள மாதந்தோறும் ராணிப்பேட்டை, வேலூர், பெங்களூர் திருப்பத்தூர், சென்னை மற்றும் வெளி மாவட்டம், மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வாராஹி அம்மனை வழிபட்டு அருள் பெற்று செல்கின்றனர்.






